தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.5.12

CCE பயிற்சி - தேரூர் DIET முதல்வரின் அறிவிப்பு

முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பயிற்சி தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எட்வின் பிரகாசிடம் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது: 
  • 6,7,8 -ம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இரண்டு நாள் பயிற்சி 28.5.2012, 29.5.2012 மற்றும் 30.5.2012, 31.5.2012 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது.
  • நாகர்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில், நாகர்கோவில். தோவாளை, அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் தக்கலை அமலா காண்வென்ட் மேல்நிலைப் பள்ளியில், தக்கலை, குருந்தன்கோடு, திருவட்டார் வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் படந்தாலுமூடு செக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் கிள்ளியூர், மேல்புறம், முஞ்சிறை வட்டாரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடைபெறும்.
  • இரண்டு கட்டங்களாக நடைபெறும் பயிற்சியில் எந்த ஒரு பயிற்சியிலும் ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • ஆசிரியர்கள் எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தற்போது வேறொரு மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால் அந்த மாவட்டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைதூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்