தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.10.13

புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - கே.சி.வீரமணி

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விராலி மலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயகுமார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக அவர், நவம்பர் 1- ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 .

10.10.13

தஇஆச மாநில செயற்குழுக் கூட்டம் - அழைப்பிதழ்


நாள் 
20.10.2013, ஞாயிறு, காலை 10.00 மணி

இடம்
புதுக்கோட்டை.

தலைமை
திரு. சு. கயத்தாறு
மாநிலத் தலைவர்

முன்னிலை
திரு. ஆ. சங்கர்
மாநில துணைத் தலைவர் 

திரு. செ. பாபு
மாநில தணிக்கையாளர் 

வரவேற்புரை
திரு. சி. செந்தில் குமார்
மாவட்டச் செயலாளர், புதுக்கோட்டை.

வேலை அறிக்கை
திரு. க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்.

வரவு – செலவு அறிக்கை
திரு. ஆ. மதலைமுத்து
மாநிலப் பொருளாளர்

இதழ் அறிக்கை
திரு. ம. எட்வின் பிரகாஷ்
மாநில துணைப் பொதுச் செயலாளர்

சங்க கூட்ட திட்ட வெளியீடு
திரு. அ. அருணகிரியார்
மாநில அமைப்புச் செயலாளர்

நன்றியுரை
திரு. ச. வெங்கடேசன்
மாநில தலைமையிடச் செயலாளர் 

பொருள்:

1. 2013-14 உறுப்பினர் சேர்க்கை.

2. நமது முழக்கம் - இதழ் சந்தா.

3. அதிகாரிகளுடன் சந்திப்பு.

4. நீதிமன்ற நடவடிக்கைகள்.

5. P.P. 750 மற்றும் சிறப்புபடி 500 தொடர்பாக.

6. வழக்கு நிதி.

7. புதிய மாவட்டக்கிளை உருவாக்குதல்.

8. இதழ் புரவலர் திட்டம் மற்றும் விளம்பரம் பெறுதல்.

9. செயற்குழு உறுப்பினர் கொணர்வன.


மாநிலப் பொறுப்பாளர்கள், மாநில துணைப் பொறுப்பாளர்கள், வருவாய் மாவட்ட செயலாளர்கள் ஆகிய அனைவரும் தவறாது கலந்து கொள்வதோடு, தங்கள் மாவட்ட கருத்துக்களையும் சங்க வளர்ச்சி குறித்த கருத்துகளையும் முன்வைக்க அன்புடன் அழைக்கிறேன்.

என்றென்றும் சங்கப் பணியில்,

க. இசக்கியப்பன்,

பொதுச் செயலாளர்.
.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
மக்களின் குரலே மகேசனின் குரல்" என்று பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் "மக்களுக்குச் செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி" என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்"
என்று கூறியுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு அரசாணை எண். 401 நாள்: 10-10-2013
.

தேர்வுநிலை / சிறப்புநிலை - 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை


தேர்வுநிலை / சிறப்புநிலை - 3% கூடுதல் ஊதியம் - தெளிவுரை

அரசுக் கடிதம் எண். 54966 / ஊதியப்பிரிவுl / 13 - 1, நாள்: 03 - 10 - 2013.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்