தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.2.10

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநாடு

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மண்டல அளவிலான மறியல் நடத்துவது தொடர்பான ஆயத்த மாநாடு நாகர்கோவில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட தொடர்பாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், தனிஸ்லாஸ், சுரேஷ்குமார், ஆறுமுகம்பிள்ளை, வள்ளுவன் விவேகானந்தன், மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் கழக குமரி மாவட்ட செயலாளர் சி.ராஜன் வரவேற்று பேசினார். கூட்டமைப்பின் மாநில தொடர்பாளர் தம்பித்துரை, நிதி காப்பாளர்கள் நாராயணசாமி, சங்கரபெருமாள் உள்பட பலர் பேசினார்கள். சாமி சத்தியமூர்த்தி, வேதநாயகம், புண்ணியகோட்டி, அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

* மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளை 100 சதவீதம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும்.

* 1-6-2006 முதல் முறையான நியமனத்தில் கொண்டுவரப்பட்ட தொகுப்பு ஊதிய ஆசிரியர்களை அவர்களின் பணியேற்ற காலம் முதல் முறையான நியமனத்தில் கொண்டு வரவேண்டும்.

* 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.

* ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வியை மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.

7.2.10

தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - படங்கள்

தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம்

6 முதல் 10 வரை கற்பிக்கும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க இல்லத்தில் தலைமை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது.

தொடர்பாளர் ஜாண் பிரிட்டோ, அமைப்பாளர் தனிஸ்லாஸ், நிதிக்காப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தொடர்பாளர் மோகன சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட தொடர்பாளர் விவேகானந்தன் ஆகியோர் விளக்கவுரை தந்தனர்.

வருகிற பிப்ரவரி 7-ம் தேதி மாநிலத் தீர்மானப்படி குமரி மண்டல மறியல் ஆயத்தமாநாடு நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து தலா 500 பேர் வீதம் கலந்து கொள்வதாக தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

குமரி மாவட்ட இயக்க பொறுப்பாளர்களான ஈஸ்டர் அமல்ராஜ், முத்தையா ஆசாரி, வேலவன், ஜோஸ் டைட்டஸ்,செம்பியன், கிருஷ்ணசாமி சாம்சுதாகர், பாசி, சுரேஷ்குமார், சித்தார்த்தன், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராஜன் நன்றி கூறினார்.
.

மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் சங்க மாநில ஆலோசகர் சின்னப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பாளர் மணிகண்டன் வரவேற்றார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகேசன் அசோக்குமார், பாண்டித் துரை, பாலுச்சாமி, அருணாசம்பந்தன் பங்கேற்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை முழுமையாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விகிதாச்சாரம் பற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கென தனி இயக்குனரகம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்துகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, மண்டல வாரியாக மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாட்டை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி கன்னியாகுமரி மண்டலத்தில் பிப். 7ம் தேதியும், மதுரை மண்டலத்தில் பிப். 14ம் தேதியும், திருச்சி மண்டலத்தில் பிப். 21ம் தேதியும், சேலம் மண்டலத்தில் பிப். 28ம் தேதியும், சென்னை மண்டலத்தில் மார்ச் 7ம் தேதியும் இந்த கூட்டங்கள் நடைபெறும்.

கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்