தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.8.15

மாறுதல் விண்ணப்பப் படிவம்


பொது மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் திருத்தம் - பள்ளிக் கல்விச் செயலரின் கடிதம்

30.7.15

ஆகஸ்ட் 1இல் ஜேக்டோ சார்பில் மாபெரும் தொடர் முழக்க உண்ணாவிரத போராட்டம்



பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: தேர்ந்தோர் இறுதி பட்டியல் - புவியியல்

BT Asst Promotion - Geography - Final Pannel as on 01-01-2015.pdf

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: தேர்ந்தோர் இறுதி பட்டியல் - வரலாறு

BT Asst Promotion - History - Final as on 01-01-2015.pdf

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: தேர்ந்தோர் இறுதி பட்டியல் - அறிவியல்

BT Asst - SCIENCE- FINAL PANNEL AS ON 01-01-2015..pdf

16.5.15

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - கட் ஆஃப் தேதி

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2015 அன்றைய நிலையில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரித்தல்.

பாட வாரியான விவரம்:

1. தமிழ் பாடம் - 13.01.1999 வரை நியமனம் பெற்றவர்கள்

2. ஆங்கில பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்

3. கணிதப் பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்

4. அறிவியல் பாடம் - 01.01.2015 வரை நியமனம் பெற்றவர்கள்

5. சமூக அறிவியல் பாடம் - 20.03.2001 வரை நியமனம் பெற்றவர்கள்
.

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - சமூக அறிவியல்

B.T (Social Science) Panel Form as on 01 01 2015 6 5 2015.pdf

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - கணிதம்

SGT toBT panel Maths as on 01-01-2015.pdf

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - ஆங்கிலம்

01-01-2015 English Panel.xls

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - தமிழ்

01-01-2015 Tamil Panel.xlsx

வருங்கால வைப்பு நிதி: 2015-16ஆம் ஆண்டுக்கான வட்டிவீதம் தொடர்பான அரசாணை

Card

8.4.15

கோடை விடுமுறைக்குப் பின் 2015-16-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளித் திறக்கும் நாள் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 600 006.

ந.க.எண்.100404/பிடி1/இ1/2015, நாள். 06.03.2015

பொருள்: - பள்ளிக் கல்வி – கோடை விடுமுறைக்குப் பின் 2015-16-ம் கல்வியாண்டிற்கான பள்ளித் திறக்கும் நாள் – அறிவிப்பு – சார்பாக.

பார்வை: - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.106130/பிடி1/இ1/2013, நாள்.25.03.2014.

- - - - -

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 2015-16ஆம் கல்வியாண்டில் 01.06.2015 (திங்கட் கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமென்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய அறிவுரைகள் வழங்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2015-16ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் தனியே அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஒம்/-) ச.கண்ணப்பன்
பள்ளிக் கல்வி இயக்குநர்.

பெறுநர்
1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
2. அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்.

நகல்
தொடக்கக் கல்வி இயக்குநர்,
சென்னை – 6. (தகவலுக்காக அன்புடன் அனுப்பலாகிறது)
.

7.4.15

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வு, 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
.

6.4.15

மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

.இடம் 
  LIC ஊழியர் சங்க அலுவலகம், ஆத்துப்பாலம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்.

நாள் 
12.04.2015, ஞாயிறு காலை 10.00 மணி

தலைமை
திரு. சு. கயத்தாறு, மாநிலத் தலைவர்

முன்னிலை 
திரு. ச. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.
திரு. அ. அருணகிரியார், மாநில அமைப்புச் செயலாளர்
திரு. செ. பாபு, மாநிலத் தணிக்கையாளர்
திரு. செ. அப்பாத்துரை, மாநில இணைச் செயலாளர்

வரவேற்புரை 
திரு. ஆ. பிச்சைமணி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்

வேலை அறிக்கை 
திரு. க. இசக்கியப்பன், பொதுச் செயலாளர்

வரவு-செலவு அறிக்கை 
திரு. ஆ. மதலைமுத்து, மாநிலப் பொருளாளர்

இதழ் அறிக்கை
திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச் செயலாளர்

பொருள்
  • 2014-15 உறுப்பினர் சந்தா இறுதிப்படுத்துதல்
  • STFI தொடர்பானவை
  • ஏப்ரல் 19, ஜேக்டோ - உண்ணாவிரதம்
  • மார்ச் 8, பேரணி - ஆர்ப்பாட்டம் ஆய்வு
  • சங்க வழக்குகள் நிலவரம்
  • தணிக்கை (2012 -13, 2013 - 14 & 2014 - 15)
அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது வருகை தந்திட அன்புடன் அழைக்கிறோம்.
                                          
 அன்புடன்,                                      
 க. இசக்கியப்பன்,                                 
பொதுச் செயலாளர்

தொடர்புக்கு:-
ஆ. பிச்சைமணி - 9244295439
ஐ. சேவியர் - 9952801497
 .

D. T. Ed. பட்டையச் சான்று +2க்கு இணையானது - திருத்திய அரசாணை



கண்ணீர் அஞ்சலி


தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவராக இருந்த எஸ். அப்துல் மஜித் (வயது 85) நேற்று மாலை மரணம் அடைந்தார்.

கடலூர் வண்ணாரப்பாளையத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடலுக்கு ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும் தன் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களுக்காகவே செலவிட்டவருமான அப்துல்மஜீத் மறைந்து விட்ட செய்தி நம்மை மிகுந்த மன வேதனை அடையச் செய்துள்ளது.

 நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆசிரிய சமுதாயத்திற்காக பல போராட்டங்களையும் பல மாநாடுகளையும் நடத்தியவர் அப்துல் மஜீத் அவர்கள். அவரை இழந்து வாடும் ஆசிரியப் பெருமக்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
.

1.4.15

எதிர்பார்ப்பு: 6% அகவிலைப்படி உயர்வு - நாளை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்

The Union Cabinet approval for the 6% rise in the Dearness Allowance for the Central Government employees is expected to be announced on coming Thursday. It is a well-known fact that every six months, the Central Government increases the Dearness allowance for its employees during the months of January and July. The increased amount is calculated on the price index (CPI IW BY 2001=100) of essential commodities. Rise in the Dearness allowance is being calculated on the basis of the changes in the prices of the essential commodities during the periods between January and June and the period between July and December.

But, it takes around three months since the release of the price index for the months of June and December to arrive at the calculation for the increase in the Dearness allowance. With the result that the increase due from the month of July is being given only from the month of October and the amount due from January is being given only from the month of April.

And, because of this situation, the amount due for the left-behind period of two months is to be settled as arrears. Practical problems arise in the calculation of the arrears amount and also problem arises in clarifying the doubts of the beneficiaries. Pensioners especially, are more tensed up over this procedure.

To avoid this situation, the price index during the periods from November to April and from May to October can be taken into account and the increase in the Dearness allowance calculated based on the information relevant to these periods. The amount can be disbursed from the months of January and July as per this calculation so that there’s no due as arrears.

We imaginatively tested this method to find out the result. It was found out that there was no tangible change in the increase amount if calculated on the basis of the price index obtained during the months of April and October.
.

8% அகவிலைப்படி உயர்வு சார்பான ஆணை போலி என மத்திய அரசு அறிவிப்பு

Card

ஜேக்டோ உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை



ஜேக்டோ மாநில உயர்மட்டக் குழு கூட்ட முடிவுகள்


24.3.15

STFI சார்பில் சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கம்



தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 - இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை - திருத்திய ஆணை வெளியீடு

Card

ஏப்ரல் 19இல் உண்ணாவிரதப் போராட்டம் - 'ஜாக்டோ' முடிவு

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல், 19ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில், கடந்த, 8ஆம் தேதி பேரணி நடந்தது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ் தலைமையில் சென்னையில் நடந்தது. முடிவில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 30ஆம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.
.

15.3.15

மேற்கு வங்க ஆசிரியர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இடம்: மாவட்டத் தலைநகரங்கள்

நாள் 20.03.2015, வெள்ளிக் கிழமை நேரம் மாலை:-5.00 மணி

அன்புடையீர்!

 வணக்கம்.

மேற்கு வங்கத்தில் கடந்த 14.05.2011 அன்று சட்டமன்றத் தேர்தல்கள் முடிவுகள் வெளியான நாளில் இருந்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

• மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பள்ளியின் முன்பாக ஆசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

• காட்டுமிராண்டித்தனமான முறையில் தந்தை முன் மகளையும், கணவனின் முன் மனைவியையும் வன்புண்ர்வு செய்துள்ளனர். பாதிக்கப்பபட்டவர்கள் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யக்கூட அனுமதிக்கப்படவில்லை.

• பல இடங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளனர்.

• பல ஆசிரியர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

• பல ஆசிரியர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு குறைந்த விலைக்கு திரிணாமுல் ஆதரவு ஆசிரியர்களாலும் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள்களாலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

• தேர்தலுக்கு முன்பு 31 ஆசிரியர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டார்கள். அம்மாவோயிஸ்டுகள் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

• பள்ளிகளில் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸார் குறிப்பிட்ட அளவில் கமிசன் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

• முன்னுரிமைப்படி பதவி உயர்விற்காக காத்திருக்கம் ஆசிரியர்களை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பதவி உயர்வு வேண்டாம் என எழுதித்தருமாறு மிரட்டப்படுகின்றனர்.

• திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு பிரிவினர் பள்ளிக்கூடங்களுககும், வீடுகளுக்கும் வந்து தங்கள் சங்கத்தில் சேர்ந்திட வேண்டும் என மிரட்டி கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

• சில ஆசிரியர்களின் வீடுகள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. சிலரின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

• பலர் மீது பொய் வழக்குகள் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றார்.

• பல ஆசிரியர்கள் வீடுகளிலிருந்தும், பள்ளிகளிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

• பெண் ஆசிரியர்களும், சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களும் தாக்கப்பட்டள்ளனர்.

• காவல்துறை மற்றும் அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளததால் இரு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

• ஆசிரியர் சங்கங்களின் அலுவலகங்கள் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மாநிலத்தின் அனைத்து விதமான ஜனநாயக நெறிமுறைகளும், மனித உரிமைகளும் மீறப்பட்டு வருகிறது. தங்கள் மீது ஏவப்பட்டுள்ள அனைத்து அடக்குமுறைகளையும் அட்டூழியங்களையும் ஆசிரியர்கள் வீரத்துடன் எதிர்த்து நின்று போராடி வருகின்றனர்.

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ள மேற்கு வங்க ஆசிரிய அமைப்புக்கள் (ஹஞகூஹ, ஹக்ஷஞகூஹ) 1985, 1988, 2003 ஆகிய ஆண்டுகளில் நாம் போராட்டக்களத்தில் நின்ற போது தோழமை ஆதரவும். 2003 போராட்டத்தில் பணிநீக்கத்தில் இருந்த ஆசிரியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக 10 இலட்சம் வழங்கியதையும் நன்றியுடன்
நினைவு கூற வேண்டிய தருணம் இது என்பதை நாம் உணர வேண்டும்.

மேற்கு வங்கத்தில் மினி (மிசா) காலம் போல் உள்ளதை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்தும், அவர்களின் மனித மாண்புகள் மற்றும் ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் விதத்தில் ஒற்றுமையையும், வலிமையையும் மீளவும் பெற்றிட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 6வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திட முடிவு செய்துள்ளதை நிறைவேற்றும் விதமாக மாவட்ட அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு ஆசிரியப் பேரினமே அணிதிரள்வீர்.

இவண்:-

• தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

• தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்

• தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

• தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்

• பாண்டிச்சேரி ஆசிரியர் சங்கம்
.

5.2.15

குறு வள மையப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவிலான ஒரு நாள் பயிற்சி "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015, சனி அன்று நடைபெறவுள்ளது.
.

ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டம் - தீர்மானங்கள்


மாநில செயற்குழு கூட்டம்


இடம் 
நவதயா ஹால், ரயில் நிலையம் எதிரில், கோயம்புத்தூர்.

நாள்
08.02.2015, ஞாயிறு காலை 10.00 மணி

தலைமை
சு. கயத்தாறு 
மாநிலத்தலைவர்

முன்னிலை
அ. அருணகிரியார்
மாநில அமைப்புச் செயலாளர்

அ. ஜெயராணி
மாநிலச் செயலாளர்

வரவேற்புரை
பா. செந்தில்நாதன்
கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளர்.

வேலை அறிக்கை
க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்

இதழ் அறிக்கை
ம. எட்வின் பிரகாஷ்
இதழ் ஆசிரியர் மற்றும் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

தலைமையிடச் செயல்பாடு அறிக்கை
ச. வெங்கடேசன்
மாநில தலைமையிடச் செயலாளர்

வரவு-செலவு அறிக்கை
ஆ. மதலைமுத்து
மாநிலப் பொருளாளர்

நன்றியுரை
செ. அப்பாத்துரை
மாநில இணைச் செயலாளர்  

பொருள்

1. வழக்குகள் நிலவரம்

2. உறுப்பினர் சந்தா, இதழ், புரவலர் சந்தா

3. வழக்கு, வளர்ச்சி நிதி

4. STFI-இன் 6வது அகில இந்திய மாநாடு

5. செயற்குழு உறுப்பினர்கள் கொணர்வன
6. பிற

அனைத்து மாவட்ட, மாநில பொறுப்பாளர்களும் அவசியம் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கிட அன்புடன் அழைக்கிறோம்.

216 G.O.-வை அமல்படுத்தும் வழக்கிற்கு 2014-2015ம் கல்வியாண்டு உறுப்பினர் பட்டியல் கொடுக்கப்படவேண்டியுள்ளதால் மாவட்டச் செயலாளர்கள் உறுப்பினர் பட்டியல் மற்றும் அதன் 3 நகல்களுடன் வரவும்.

பட்டியலில் உறுப்பினர் எண், பெயர், பள்ளி முகவரி, மாவட்டம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டியலை தாக்கல் செய்த பின்புதான் வழக்கு விசாரணைக்கு வரும்.

தோழமையுடன்,
க. இசக்கியப்பன்,
பொதுச் செயலாளர்.


தொடர்புக்கு:

ராஜ்குமார்: 9659955222

செந்தில்நாதன்: 9942408733
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்