தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.12.13

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:

* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.

* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

* சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகம் ஏற்படுத்தப்படும்.

* தேனி மாவட்டம் கண்டமனூர்விளக்கு என்ற இடத்தில் 110/22 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அனுமதிக்கப்படும்.

* வைகை ஆற்றில் வாலிப்பாறை மற்றும் கோவிந்த நகரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதி புதூர் மற்றும் பூசலகுடி ஆகிய இடங்களில் 110/22 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

* சிவகங்கை மாவட்டம் குறுந்தம்பட்டு ஊராட்சியில் மணிமுத்தாறு ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டப்படும்.

* தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை சாலை அமைக்கப்படும்.

* மதுரை - தூத்துக்குடி சாலை 130/4 முதல் 133/2 வரை அகலப்படுத்தப்படும்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் குழந்தை பிறப்பை குறைக்க புதிய திட்டம் அனுமதிக்கப்படும்.

* முக்காணி அருகே தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும்.

* திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அனுமதிக்கப்படும்.

* கோவை மாநகரில் மோனோ ரயில் இயக்க பூர்வாங்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* கோவை காந்திபுரத்தில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.

* திருச்சி திருவெறும்பூரில் புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.

* சேலம் தலைவாசல், பனைமரத்துப்பட்டியில் விதை கிடங்குகள் அமைக்கப்படும்.

* திருவள்ளூரில் புதிய நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

* கொசஸ்தலையாற்றில் தடுப்பணை அமைக்கப்படும்.

* புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் மற்றும் மதுரவாயல் தாலுகாக்களுக்கு, தாலுகா அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்.

* திருந்தங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

* சிவகாசி - தென்காசி மற்றும் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் மாநில நெடுஞ்சாலையில் ஆணையூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.

* திருவாரூர் மாவட்டத்தில் 8 குளங்கள் புதுப்பிக்கப்படும்.

* திருவாரூர் நகரில் கமலாலயம் குளம் தூர்வாரப்படும்.

* திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகாவில் உள்ள மூணாறு தலைப்பு என்ற இடம் சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

* வைகை அணையிலிருந்து வத்தலகுண்டு பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கப்படும்.
.

11.11.13

மொஹரம் விடுமுறையில் மாற்றம்

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
 .

30.10.13

புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - கே.சி.வீரமணி

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விராலி மலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயகுமார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக அவர், நவம்பர் 1- ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 .

10.10.13

தஇஆச மாநில செயற்குழுக் கூட்டம் - அழைப்பிதழ்


நாள் 
20.10.2013, ஞாயிறு, காலை 10.00 மணி

இடம்
புதுக்கோட்டை.

தலைமை
திரு. சு. கயத்தாறு
மாநிலத் தலைவர்

முன்னிலை
திரு. ஆ. சங்கர்
மாநில துணைத் தலைவர் 

திரு. செ. பாபு
மாநில தணிக்கையாளர் 

வரவேற்புரை
திரு. சி. செந்தில் குமார்
மாவட்டச் செயலாளர், புதுக்கோட்டை.

வேலை அறிக்கை
திரு. க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்.

வரவு – செலவு அறிக்கை
திரு. ஆ. மதலைமுத்து
மாநிலப் பொருளாளர்

இதழ் அறிக்கை
திரு. ம. எட்வின் பிரகாஷ்
மாநில துணைப் பொதுச் செயலாளர்

சங்க கூட்ட திட்ட வெளியீடு
திரு. அ. அருணகிரியார்
மாநில அமைப்புச் செயலாளர்

நன்றியுரை
திரு. ச. வெங்கடேசன்
மாநில தலைமையிடச் செயலாளர் 

பொருள்:

1. 2013-14 உறுப்பினர் சேர்க்கை.

2. நமது முழக்கம் - இதழ் சந்தா.

3. அதிகாரிகளுடன் சந்திப்பு.

4. நீதிமன்ற நடவடிக்கைகள்.

5. P.P. 750 மற்றும் சிறப்புபடி 500 தொடர்பாக.

6. வழக்கு நிதி.

7. புதிய மாவட்டக்கிளை உருவாக்குதல்.

8. இதழ் புரவலர் திட்டம் மற்றும் விளம்பரம் பெறுதல்.

9. செயற்குழு உறுப்பினர் கொணர்வன.


மாநிலப் பொறுப்பாளர்கள், மாநில துணைப் பொறுப்பாளர்கள், வருவாய் மாவட்ட செயலாளர்கள் ஆகிய அனைவரும் தவறாது கலந்து கொள்வதோடு, தங்கள் மாவட்ட கருத்துக்களையும் சங்க வளர்ச்சி குறித்த கருத்துகளையும் முன்வைக்க அன்புடன் அழைக்கிறேன்.

என்றென்றும் சங்கப் பணியில்,

க. இசக்கியப்பன்,

பொதுச் செயலாளர்.
.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
மக்களின் குரலே மகேசனின் குரல்" என்று பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் "மக்களுக்குச் செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி" என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்"
என்று கூறியுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு அரசாணை எண். 401 நாள்: 10-10-2013
.

தேர்வுநிலை / சிறப்புநிலை - 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை


தேர்வுநிலை / சிறப்புநிலை - 3% கூடுதல் ஊதியம் - தெளிவுரை

அரசுக் கடிதம் எண். 54966 / ஊதியப்பிரிவுl / 13 - 1, நாள்: 03 - 10 - 2013.
.

25.9.13

7வது ஊதியக் குழுவை அமைத்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள்.

6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்" என்றார்.

ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்

இதற்கி‌டையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.
.

24.9.13

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தர ஊதியம், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாட பிரிவு தொடங்க வேண்டும். தொழிற்கல்வியில் நவீன பாட திட்டத்தை புகுத்த வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை உடன் பணி வரன்முறை செய்ய வேண் டும். பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், உதவி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்க வேண் டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி மாறுதல் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும், மேல்நிலை பள்ளி தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சங்க மாநில துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். தூத்துக்குடி தலைவர் செல்வராஜ், விருதுநகர் தலைவர் முத்துராஜ், ராமநாதபுரம் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க குமரி மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் வள்ளிவேலு தொடக்கி வைத்தார். சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாகராஜன் போராட்டத்தை விளக்கி பேசினார். மாநில பொருளா ளர் நேரு, மூட்டாவை சேர்ந்த நாகராஜன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம், பல்வேறு ஆசிரியர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாலச்சந்திரன், ராபர்ட் ஜேம்ஸ், வேலவன்,  கனகராஜ், ராஜ குமார், செல்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜிம்சன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
.

23.9.13

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துவிட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, “சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை.

இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது’’ என்றனர்.

இந்த வழக்கில் நீதிபதி அரிபரந்தாமன் இன்று அளித்த தீர்ப்பு:

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, ஆசிரியர்களுக்கு கட்டாயம் தகுதி தேர்வு வைக்கவேண்டும். தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கல்வி கவுன்சில் தெளிவாக கூறியுள்ளது. உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. தற்போது தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கும்போது மனுதாரர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரிதான். அதை ரத்து செய்ய முடியாது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. ஏற்கனவே அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

நன்றி:

 

+ 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு: மாணவர் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்


பிளஸ் 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு நடைமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. இம்மாற்றம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு துணை பொது தேர்வு இன்று (23ம் தேதி) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒரே கால கட்டத்தில் வெவ்வேறு தேர்வு மையங்களில் நடைபெறும்.

இந்த தேர்வுக்கு 20 வினாத்தாள் அடங்கிய முத்திரையிட்ட வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஒரு வினாத்தாள் கட்டு வழங்கப்படும். வினாத்தாள் கட்டுக்களை தலைமை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் பிரிக்க கூடாது.

10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் மாற்று எண் விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் ஷீட் அனைத்து தேர்வர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். பார் கோடிங்ஷீட் தான் புதிய டம்மி பிளை ஷீட் ஆகும்.
பார்கோடிங் ஷீட்டின் முதல் பகுதியை மாணவர்களும், 2ம் பகுதி மற்றும் 3ம் பகுதியை விடைத்தாள் திருத்தும் மையத்தில் உதவி தேர்வர்கள் பூர்த்தி செய்வர்.

மேல்நிலை தேர்வுக்கு இரண்டு டம்மி நம்பர் மெயின் ஷீட் எடுத்து பிளை லீப் அகற்றப்படுகிறது. பின்னர் இரண்டாவது முதன்மை விடைத்தாளின் முதல்தாளை அகற்றிவிட்டு, இரண்டு முதன்மை விடைத்தாள்களும் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து முதல் பக்கத்தில் மாணவர் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் வைத்து, தையல் இயந்திரம் மூலம் தைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வில் ஒரு முதன்மை விடைத்தாளுடன் 22 பக்கங்கள் வரும் வகையில் கூடுதல் விடைத்தாள்கள் இணைத்து பார் கோடிங்ஷீட் தைக்கப்பட்டிருக்கும்.

20 மாணவர்கள் ஒரு தேர்வு அறையில் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு அறையில் வினாத்தாள் உறையை மாணவர் இருவர் கையொப்பம் பெற்ற பின்னரே வழங்கவேண்டும்.

காலையில் 10.10க்கு விடைத்தாள்களை தேர்வர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து வழங்க வேண்டும். கூடுதல் விடைத்தாள் "கே" படிவத்தில் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். 10.30 வரை தேர்வுக்கு வராத மாணவர்களின் தேர்வு எண்ணை உறையின் இடது புறத்தில் சிவப்பு மையால் எழுத வேண்டும். அவர்களின் விடைத்தாளின் பார்கோடிங் தாளில் "ஏ" என்பதை சிகப்பு மையால் "டிக்" செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நன்றி:


சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.

 நன்றி:


20.9.13

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி - அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். ஆனால் நடப்பாண்டு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்.

இந்த அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் இந்த ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 10,879 கோடி செலவாகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அகவிலைப்படி 10% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அகவிலைப்படி தற்போதுதான் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
.

11.9.13

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நள்ளிரவு முதல் கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
திட்டமிட்ட படி +1 , +2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.

5.9.13

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் நீக்கம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார்.
.

4.9.13

பென்சன் மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்

புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாகபார்லிமென்டடில் இன்று நடந்த‌ கூட்டத்தில் லோக்சபாவில் , பென்சன் மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
 புதிய பென்சன் திட்டம் நீண்ட கால நோக்கில் பணியாளர்களுக்கு பலன் தரும். இதில் பார்லி., குழுவில் கருத்தொற்றுமை உள்ளது. இந்த புதிய பென்சன் திட்டத்திற்கு, சக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்

என கூறினார். 
.

கடலூர் மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

கடலூர் மாவட்டத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் 12 பேர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விவரம்:

1.  வடலூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆளவந்தார்,

2. பண்ருட்டி திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி,

3. கடலூர், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் பாரி,

4. மங்கலம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரராகவன்,

5. ஸ்ரீமுஷ்ணம் தா.வி.சே. மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பாண்டியன், 

6. கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜ்மோகன்.

7. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செஞ்சிவேல்,

8. கடலூர் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகன்நாதன்,

9. பண்ருட்டி மாளிகைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மார்க்,

10. கம்மாபுரம் தொப்பலிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மதலைமேரி,

11. கோபாலபுரம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன்,

12 ஏ.வள்ளியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வர்ணபாபு.
.

திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு நல்லாசிரியர் விருது

திருச்சி மாவட்டத்தில் 17 பேர் மாநில அரசின் 2012-13 -ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர்) பெறுகின்றனர்.

விருது பெற்றோர் பட்டியல்
:

1. பொ. திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர், திருப்பராய்த்துறை விவேகானந்த மேல்நிலைப் பள்ளி,

2. இ. ஆம்ஸ்ட்ராங், பட்டதாரி ஆசிரியர், தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி,

3. ம. செல்வன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருவெள்ளறை,

4. எஸ். ஆதிரை, பட்டதாரி ஆசிரியை, டால்மியா மேல்நிலைப் பள்ளி,

5. இரா. நாச்சி, தலைமை ஆசிரியர், தொட்டியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

6. அ. நாராயணசாமி, தலைமை ஆசிரியர், ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி துறையூர்,

7. க. துளசிதாசன், முதல்வர், சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

8. பெ. சந்திரா, முதல்வர், டால்மியாபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

9. க. ஆசாதேவி, தலைமை ஆசிரியை, பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

10. அ. விஜயலட்சுமி, தலைமை ஆசிரியை, முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

11. சூ. அமலோற்பவம், தலைமை ஆசிரியை, உறையூர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி,

12. சி. ரோஸ்மேரி, தலைமை ஆசிரியை, அகலங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

13. மா. விஜயகுமார், தலைமை ஆசிரியர், நஞ்சை சங்கேந்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,

14. ச. முத்துமணி, தலைமை ஆசிரியர், பாண்டிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,

15.ஏ.ஆர்.எல். திவ்யகுமார், தலை மை ஆசிரியர், துறையூர் எஸ்பிஜி நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளி,

16. பி. இந்திரா, தலைமை ஆசிரியை, மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளி,

17. பெ. தங்கவேல், தலைமை ஆசிரியர், வா. கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.
.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு

மாநில நல்லாசிரியர் விருதுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல்
:

1. பழநி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலைஆசிரியர் பாலசுப்ரமணியன்,

2. திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி முதுகலையாசிரியர் கலை,

3. சேவுகம்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சஞ்சீவி,

4. ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காளிமுத்து 

5. பித்தளைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி,

6. வடகாட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்பீட்டர்,

7. நத்தம் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பாக்கியவதி,

8. பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை மேபல்தவமணி தமிழரசி,

9. பூத்தாம்பட்டி தூய பிரான்சிஸ் சவேரியார் ஆர்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மெர்சிஜெசிந்தா,

10. சுக்காம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் முருகையா.
.

தேனி மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது

தேனி மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் விவரம்:

1. ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.மீனாட்சி,

2. பெரியகுளம் 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெ.நக்கீரன்,

3. சுந்தரராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன்,

4. கீழக்கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஜெகநாதன்,

5. தேவாரம் சி.ஐ. ராமசாமி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்ராஜன்,

6. போடி 10-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி இளநிலை ஆசிரியர் கோமதி,

7. ஒக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி கலை ஆசிரியர் முத்துவன்னியன்,

 8. தேனி அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் கரிகால்வளவன்,

9. குச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன்,

10. காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் சண்முகராஜன்.
.

சிவகங்கை மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 12 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:–

1. மனோகரன், தலைமை ஆசிரியர் அரசு மேல் நிலைப்பள்ளி, கீழப்பூங்குடி.

2. கணேசன், தலைமை ஆசிரியர் என்.எஸ்.எம். வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

3. கிறிஸ்துராஜா, தலைமை ஆசிரியர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ராஜ கம்பீரம்.

4. சண்முகநாதன், தொழிற் கல்வி ஆசிரியர் தி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

5. கருப்பாயி, தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசனூர்.

6. ஜெயபிரகாசன், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருகளப்பட்டி.

7. நாகலெட்சுமி, தலைமை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கே.புதுப்பட்டி

8. சுப்பிரமணியன் தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கோட்டை.

9. மாரியப்பன், தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பர்மா காலணி, மானாமதுரை.

10. தட்சிணாமூர்த்தி, தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.எம். தொடக்கப்பள்ளி, சண்முகநாத பட்டினம், தேவகோட்டை.

11. ஆனந்தி, தியாகராஜன் முதல்வர் அழகப்பா மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.

12. இமானுவேல் சம்பத் குமார், விரிவுரையாளர் ஆசிரியர் பயிற்சி மையம், காளையார் கோவில்.
.

விருதுநகர் மாவட்டத்தில் 16 பேருக்கு நல்லாசிரியர் விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பள்ளியின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஆசிரியர்கள் 16 பேர் நல்லாசிரியர் விருது பெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

விருது பெற அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் விவரம் வருமாறு:

1. சித்ரா(முதல்வர்)-சிவகாசி கே.சி.ஏ.டி தர்மராஜ் நாடார்-தாயம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

2. சூ.ஆஞ்சலோ தெக்லாமேரி(உதவி ஆசிரியை)- செவல்பட்டி, அமலா தொடக்கப்பள்ளி,

3. ம.ஜெயபால்(தலைமை ஆசிரியர்)-சிவகாசி மேற்கு ஏவிடி நகராட்சி தொடக்கப்பள்ளி,

4. ரா.நாடியம்மாள்(தலைமை ஆசிரியை)- அலமேலுமங்கைபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

5. இரா.ராமசாமி(தலைமை ஆசிரியர்)-தூங்கரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

6. ஜெ.ஆனந்தராஜா(தலைமை ஆசிரியர்)-வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

7. மா.பொன்னுச்சாமி(தலைமை ஆசிரியர்)-செங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

8. பா.கிரேஸ்(தலைமை ஆசிரியை)-கடமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

9. அ.கமலாராணி(தலைமை ஆசிரியை)-டி.செட்டிக்குளம், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

10. சு.செல்வின்ஜெயக்குமார்(தலைமை ஆசிரியை)-தெற்குவெங்காநல்லூர், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

11. மு.வரதராஜபாண்டியன்(தலைமை ஆசிரியர்)-கூமாபட்டி அரசுமேல்நிலைப்பள்ளி,

12. பொ.சாந்தகுமாரி(தலைமை ஆசிரியை)-சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி,

13. சி.ஜமுனாராணி(தலைமை ஆசிரியர்)-விருதுநகர் ஹவ்வாபீவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

14. பெ.வரதராஜாபெருமாள்(முதுகலை ஆசிரியர்)-விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப்பள்ளி,

15. டேவிட்ஞானசேகரன்(உடற்கல்வி ஆசிரியர்)-ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி,

16. வையனன்(உடற்கல்வி ஆசிரியர்) ராமநாயக்கன்பட்டி ஆர்.வி.கே உயர்நிலைப்பள்ளி
.

மதுரை மாவட்டத்தில் 17 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தமிழக அரசின் 2012– 13–ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது நேற்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

1. தே.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பெ.வி.தனசேகரன்,

2. அழகர் கோவில் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் கோ.வெங்கடராமன்,

3. திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அர்ச்சுனன்,

4. மதுரை சவுராஷ்டிரா மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.வி.சுகந்திமாய்,

5. சக்கிமங்களம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா,

6. கருப்பாயூரணி அப்பர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேனட்மேரி ரெஜிபாய்,

7. மேலக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன்,

8. திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் உதயகுமார்,

9. அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுபிதாராணி.

10. மதுரை கீழவெளி வீதி சவுராஷ்டிரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பாவா மகேஸ்வரி,

11. அலங்கா நல்லூர் ஒன்றியம் 15 பி, மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரூபி சாலம்மாள் வசந்த மல்லிகா,

12. மேலூர் ஒன்றியம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சோம.மாணிக்கவல்லி,

13. மதுரை மேற்கு ஒன்றியம் சமயநல்லூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பாத்திமாமேரி,

14. மதுரை கிழக்கு ஒன்றிய காளி காப்பான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பெனிட்டோ ராணி,

15. கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார்,

16. தே.கல்லுப்பட்டி ஒன்றியம், பி.சுப்புலாபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் நிதியுதவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போஸ்,

17. சேடப்பட்டி ஒன்றியம், இ.கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.அருண்குமார் .
.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 15 தலைமை ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது நாளை சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

குமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் விபரம்:

1. டி.ஜெபதிலகம் பாப் பாள், தலைமை ஆசிரியர், ஹோம் சர்ச் தொடக்க பள்ளி, நாகர்கோவில்.

2. ஜெ.சாம்ஜி ஐசக் சந்திரா, தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, மயிலாடி (மேற்கு).

3. எம்.அப்துல் கபூர், தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி சுசீந்திரம்.

4. ஏ.ஜஸ்டின்ராஜ், தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைபள்ளி, திருவிதாங்கோடு.

5. எல்.மேரி ஜாய்ஸ், தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, குளச்சல்.

6. பி.சுசீலா, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலை பள்ளி, விலவூர்.

7. ஏ.மரிய கனகபாய், தலைமை ஆசிரியர் அரசு தொடக்க பள்ளி, ஐரேனிபுரம்.

8. ஏ.செல்வி பிலோமின், தலைமை ஆசிரியர், புனித மேரி ஆர்சி தொடக்க பள்ளி, நெல்லிக்காவிளை.

9. ஏ.சோபனம், தலைமை ஆசிரியர் அரசு நடுநிலை பள்ளி, பள்ளிக்கல்.

10. எஸ்.ரீடா மில்ரெட் கோல்டி, தலைமை ஆசிரியர், எஸ்எல்பி ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.

11. எப்.ஜாண் கிறிஸ்டோபர், தலைமை ஆசிரியர், பாபுஜி மேல்நிலை பள்ளி, மணவாளக்குறிச்சி.

12. அ.மோகனன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, மத்திக்கோடு

13. கே.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர், எஸ்எம்ஆர்வி மேல்நிலை பள்ளி, வடசேரி.

14. வி.ஆர்.ராஜ்குமார், தலைமை ஆசிரியர், எல்எம்எஸ் மேல்நிலை பள்ளி, கடமலைக்குன்று.

15. ஜி.வசந்தபாய், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலை பள்ளி, கடையல்.
.

370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது நாளை வழங்கப்படுகிறது

தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாளை (5–ந்தேதி) ஆசிரியர் தின விழா சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்குகிறார். பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் 370 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. விருதினை பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் வழங்குகிறார்.

தொடக்க கல்வி துறையில் 196 ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வி துறையில் 134 பேருக்கும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 25 பேருக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 10 பேருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 2 பேருக்கும் சமூக நலத்துறை பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, இயக்குனர்கள் சங்கர், பிச்சை, கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறுகிறார்.
.

அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம் - ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை; மத்திய அரசு ஏற்பு

"மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை" என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, லோக்சபாவில்  கூறியதாவது:
"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்" என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்" என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது. ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது.

அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 31-08-2013
.

30.7.13

புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள துறைகளின் இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்: திரு. இராமேஸ்வர முருகன்

அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்: திரு. தேவராஜன்

தொடக்கக் கல்வித் துறை இயக்குநர்: திரு. இளங்கோவன்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர்: திரு. சங்கர்

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர்: திருமதி. வசுந்திரதேவி

ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குநர்: திரு. கண்ணப்பன்

மெட்ரிக் பள்ளி இயக்குநர்: திரு. பிச்சை

பாடநூல் கழக இயக்குநர்: திரு. அன்பழகன்

புதிய இயக்குநர்களின் பணி சிறக்க த.இ.ஆ.ச.-வின் வாழ்த்துகள்.
.

22.6.13

24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

அனைவரும் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும். அனைத்து மாணவர்களும் சுழற்சி முறையில் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடவேண்டும்.

வாக்காளர் தினம் (ஜன 25), தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி (ஜன 30), கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் (மே5), குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி நாள் (ஜூன் 12), நல்லிணக்க நாள் (ஆக 8), பயங்கரவாத ஒழிப்பு நாள் (அக் 31), விழிப்புணர்வு வாரம் (நவ 11), தேசிய ஒருமைப்பாட்டு நாள் (நவ 19), வரதட்சணை ஒழிப்பு தினம் (நவ 26), எயிட்ஸ் விழிப்புணர்வு நாள் ( டிச 1) ஆகிய நாட்களில் மாணவர் களை உறுதிமொழி எடுத்து கொள்ள செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

பள்ளி நாள்காட்டி 2013-14

2013 - 14 TN School Calendar

30.5.13

ஆசிரியர் பொது மாறுதல் விதியில் திருத்தம் - பெண்கள் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் பெண் ஆசிரியரை மட்டுமே நியமிக்க ஆணை

Go.129 - Female Hm & Tr Should Appoint in Female High_hss Scls

கலந்தாய்வு மூலம் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 07.06.2013க்குள் பணியில் சேர உத்தரவு

2013 - 14 Transfer Counselling Instruction

27.5.13

மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு  அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கயத்தாறு அவர்கள் இன்று காலை  பள்ளி கல்வி இணை இயக்குநரை சந்தித்தார். அப்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்தார்.இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமது மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இசக்கியப்பன் அவர்கள் பள்ளி கல்வி இணை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
.

25.5.13

தகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு - கல்வித்துறை முடிவு

நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க கல்வித்துறையில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது என்றும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

அரசின் கொள்கை முடிவின்படி தற்போது நடுநிலை முதல் மேல்நிலை வரை அனைத்து வகுப்புகளுக்கும் பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகுதி உயர்வுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்ப்பாடமாக இருந்தால் பி.லிட் முடித்திருக்க வேண்டும், பிற பாட ஆசிரியர்களாக இருந்தால் இளநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டியது அவசியம். தகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரிடமிருந்தும் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் அப்கிரேடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரிடமும் காலிப்பணியிட விபரம் மற்றும் அப்கிரேடு செய்ய தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது,” என்றார்.

நன்றி:

 

24.5.13

ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங் திடீர் நிறுத்தம்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 20ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடந்து வருகிறது.

ஆன் லைன் மூலம் 4 நாட்களாக நடந்த இந்த கவுன்சலிங்கில் சில பிரிவு ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கான மாறுதல் ஆகியவற்றுக்கான கவுன்சலிங் நடக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

 மேற்கண்ட கவுன்சலிங் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
.

13.5.13

கன்னியாகுமரியில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வைத்து இரண்டு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் 12-05-2013 ஞாயிறு அன்று நடைபெற்ற முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ந. பர்வதராஜன் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆ. சுப்பிரமணியன் "சங்க வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

3-வது அமர்வுக்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் "சங்கத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

13-05-2013 திங்கள் 4-வது அமர்வு நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட JCTU அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி “உலகமயத்தில் தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

5-வது அமர்வுக்கு கன்னியாகுமரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  ஆர் சுஜா ரோஸ் ரெக்ஸ்லின் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அ. ஜெயராணி “தொழிற்சங்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா சிங், மரிய ஜாண் டெல்லஸ், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம் ஆகியோர் செய்திருந்தனர்.
.

12.5.13

பொது மாறுதல் கலந்தாய்வு 2012 - 13 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Transfer Norms 2013-14

பொது மாறுதல் கலந்தாய்வு 2012 - 13 அரசாணை

Transfer Counselling _2013-2014 GO 129

தஇஆச பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது


தஇஆச மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை  கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் இன்று தொடங்கியது.

முதல் அமர்வு “நேற்று இன்று நாளை” என்ற  தலைப்பில் நடைபெற்றது.  
மாநிலத் தலைவர் திரு சு. கயத்தாறு தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மேனாள் பொதுச் செயலாளர் திரு. ந. பர்வதராஜன் சிறப்புரையாற்றினார்.




9.5.13

"ஒரே பணி - இருவேறு ஊதியம்" மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா?

ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாட்டை நீக்கக் கோரி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு வருகிற மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 6, 7, 8 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் நியமனம் என்பது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்கு பின்னர் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே தற்போது 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இவர்களுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாடு நிலவுகிறது.

தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேர். இதில் 90 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி பெற்றவர்கள். எனவே அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டுமென்று கடந்த 8 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இதற்காக கடந்த 2007ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தை தர்ணா, 2008ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு தர்ணா, 2010ல் சென்னை காயிதே மில்லத் மண்டபம் முன்பு அடையாள உண்ணாவிரதம், 2013 பிப்.26ல் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாலை நேர ஆர்ப்பாட்டம், 2013 ஏப்.17ல் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோருக்கு பேக்ஸ் அனுப்பும் போராட்டம் என கடந்த 8 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும் தங்கள் கோரிக்கைக்கு இதுவரை விடிவுகாலம் பிறக்கவில்லை என்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் இசக்கி யப்பன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை
:

கடந்த மார்ச் மாதம் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் வைகை செல்வனை சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்ட தாரி ஆசிரியர் களாக உட்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். வருகிற மே 10ல் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கைக்கு முன்பு முதல்வருடன் விவாதித்து தீர்வு காண்பதாக கூறியுள்ளார்.

தொடக்க கல்வித் துறையில் 6, 7, 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமிக்கும் போது அதில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அந்தந்த ஒன்றியங்களில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு கீழிறக்கம் செய்யப்படுகின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் அது போன்ற வாய்ப்புகள் கிடையாது. எனவே உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் முடிவுறு பணி தொகுதி ஆகி விட்டது.

கடந்த காலங்களில் முடிவுறு பணி தொகுதி ஆகிவிட்ட இளநிலை ஆசிரியர்கள் அரசாணை எண்.669, நாள் 25.4.1979ன் படி இடைநிலை ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டனர்.

மேல்நிலைக் கல்வி உருவாக்கப்பட்ட போது மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் அரசாணை எண்.720, நாள் 28.4.1981ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் பெற்று வந்த மேல்நிலைக் கல்வி தொழிற்கல்வி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் விகிதத்தில் முதல் நிலை தொழிற்கல்வி ஆசிரியர்களாக அரசாணை எண்.69, 29.7.2007ன் அடிப்படையில் தகுதி உயர்த்தப்பட்டனர்.

மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் அரசாணை எண்.187, பள்ளிக்கல்வி நாள் 4.10.2008ன் படி கணினி பயிற்றுநர்களாக நியமிக்கப்பட்டனர்.

எவ்வளவு செலவாகும்
?

பட்டதாரிகளாக உட்படுத்தக் கோரும் இடைநிலை ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் உள்ளனர். தேர்வு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது தர ஊதியமாக ரூ.4,300 பெறுகின்றனர். பட்டதாரிகளாக உட்படுத்தும் போது இவர்களுக்கு ரூ.300 தர ஊதியம் அதிகமாக கிடைக்கும். அத்துடன் 3 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கப்படும்.

சிறப்பு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது தர ஊதியமாக ரூ.4,500 பெறுகின்றனர். பட்டதாரிகளாக உட்படுத்தும் போது இவர்களுக்கு ரூ.100 தர ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் 3 சதவீதம் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

எனவே அரசு இனியும் காலம் தாழ்த்தாது இடைநிலை ஆசிரியர்கள் 25 ஆயிரம் பேரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
.

ஆசிரியர்கள் உரிமை காக்கும் போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மரிய மிக்கேல் மற்றும் செயலர் சசிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வித் துறையில் மீளாய்வுக் கூட்டம் என்ற பெயரில் தலைமை ஆசிரியர்களைத் தரக்குறைவாக பேசியும், கோடைக்கால சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர் மற்றும், ஆசிரியர் நலனைப் பாதிக்கச் செய்கின்ற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட இணை இயக்குனர் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்ட அதிகாரிகளை கண்டித்து உரிமை காக்கும் அறப் போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 9ம் தேதி மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறுகின்றது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

7.5.13

தஇஆச பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை

மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி பட்டறை

நாள்
12.05.2013 & 13.05.201
 ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை
  
இடம் 
விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி.

பயிற்சி கட்டணம்
ரூ. 200/- (இருநூறு ) மட்டும்

நிகழ்ச்சி நிரல்

12.05.2013, ஞாயிறு

காலை 9.30 – 10.30 
பதிவு

காலை 11.00 மணி
அமர்வு - I

தலைமை
திரு சு. கயத்தாறு, மாநிலத் தலைவர்

தலைப்பு
“நேற்று இன்று நாளை”

வழங்குபவர் 
திரு. ந. பர்வதராஜன்,
மேனாள் பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

பகல் 1.30 – 2.45  
மதிய உணவு இடைவேளை 

பிற்பகல் 3.00 மணி
அமர்வு - II
தலைமை
திரு ம. எட்வின் பிரகாஷ், 
மாநில துணைப் பொதுச் செயலாளர்.

தலைப்பு
“சங்க வரலாறு”

வழங்குபவர் 
திரு ஆ. சுப்பிரமணியன்,
மேனாள் பொதுச் செயலாளர். 
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

மாலை 5.00 மணி 
தேநீர் இடைவேளை

மாலை 6.00 மணி
அமர்வு - III

தலைமை
அ. அருணகிரியார், 
மாநில அமைப்புச் செயலாளர்

தலைப்பு 
“சங்கத்தின் எதிர்காலம்”

வழங்குபவர் 
திரு. க. இசக்கியப்பன்,
மாநிலப் பொதுச் செயலாளர், 


13.05.2013, திங்கள் கிழமை

காலை 9.00 மணி
அமர்வு - IV

தலைமை
ஆ. மதலைமுத்து, மாநிலப் பொருளாளர்.

தலைப்பு 
“உலகமயத்தில் தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்”

வழங்குபவர்
திரு. C. முத்துகுமாரசுவாமி (LIC),
அமைப்பாளர் - JCTU,
திருநெல்வேலி மாவட்டம்.

காலை 11 மணி
அமர்வு - V

தலைமை
திருமதி. அ. ஜெயராணி, மாநிலச் செயலாளர்

தலைப்பு 
“தொழிற்சங்கத்தில் பெண்களின் பங்கு”

வழங்குபவர் 
திருமதி மூ. மணிமேகலை,
மாநிலச் செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

நன்றியுரை
திரு ரெ. ஹெர்பர்ட் ராஜா சிங், 
மாவட்டத் தலைவர், 
கன்னியாகுமரி மாவட்டம்.

பகல் 1.00 மணி
மதிய உணவு

பயிற்சி பட்டறை நிறைவு.

குறிப்பு: வெளியூர் பொறுப்பாளர்கள் வசதிக்காக 11.05.2013 முதல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து பொறுப்பாளர்களும், முன்னணி ஊழியர்களும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநில அமைப்பின் சார்பில்  கேட்டுக் கொள்கின்றோம். 

என்றென்றும் சங்கப்பணியில்,
க. இசக்கியப்பன், 
பொதுச் செயலாளர்.
.

4.5.13

வரலாறு - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec. Gr. to Bt Social science Temp Panel 2013

அறிவியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec Gr. to Bt-science-pannel - 2013 by edwin_prakash75

கணிதம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec. Gr. to Bt Promotion Panel Maths 2012 - 13 by edwin_prakash75

ஆங்கிலம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - 2013

Sec. Gr. to Bt English Pannel 2012 - 13

2.5.13

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 1631 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
.

புத்தகம் இன்றி 2011 - ஆசிரியர் இன்றி 2013

பள்ளிக் கல்வியில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழும் தமிழகத்தில், ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தமிழ் வழிக்கல்வி முறை பின்தங்கிவிட்டது. இதை சரிசெய்ய சமச்சீர் கல்வி முறையை கடந்த ஆட்சியில் அமலாக்கினர். ஆனால், கடந்த 2011ல் சமச்சீர் கல்விக்காக அச்சிடப்பட்ட புத்தகங்கள் கைவிடப்பட்டு புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதனால் சுமார் 3 மாதங்கள் பிள்ளைகள் பள்ளி சென்று படிக்காமல், விளையாடியும் ஊர் சுற்றியும் பொழுதை போக்கினர். பல பள்ளிகளில் பாடம் நடத்தாமலேயே ஒப்புக்கு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் சுமார் 20 ஆயிரம் உள்ளன. இம்மாதம் கூடுதலாக சில ஆயிரம் பணியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க முடியாதவாறு ஆசிரியர் தகுதி தேர்வு தடையாக உள்ளது.

கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகமில்லாத வடமாநிலங்கள் சிலவற்றில் கல்லூரி கல்வியை முடித்த வேகத்தில் பலரும் ஆசிரியரானதால், தகுதி தேர்வை மத்திய அரசு அமலாக்கியது.

இத்திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் எதிர்ப்பை மீறி 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி அடையாததால் மறு தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபரில் நடந்த இத்தேர்வில் வென்றவர்களை டிசம்பரில் நியமித்தனர். இதனால் பாடம் நடத்தும் பணி பாதிப்படைந்தது.

சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், "தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆசிரியர் பணியோடு ஆசிரியர் அல்லாத அலுவலக பணிகளையும் செய்ய வேண்டிய பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும். அதுவும் ஈராசிரியர் பள்ளிகளில் ஒரு இடம் காலியாகி ஓராசிரியர் பள்ளி ஆனால் சிரமம் தான்" என்றார்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "வழக்கமான பணியிடங்கள் தவிர ஆர்ம்எஸ்ஏ, எஸ்எஸ்ஏ, தகுதி உயர்த்திய பள்ளி பணியிடங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் தேவை. இதை முந்தைய முறையில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் உரிய காலத்தில், அதாவது ஜூன் முதல் ஆகஸ்டுக்குள் நிரப்பவேண்டும்" என்றார்.

கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர் நியமனம் நடந்தால் தான் திட்டமிட்டு, கால அட்டவணை போட்டு பாடம் நடத்தி முடிக்க முடியும். அதுவும் கலந்தாய்வு முடிந்த பிறகு ஆசிரியர்களை நியமனம் செய்வதே நல்லது என்று ஆசிரியர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

நன்றி:

 

1.5.13

திறந்த வெளி பல்கலை.யில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு: சட்டப்பேரவையில் விவாதம்

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முறைசாரா திட்டத்தின் கீழ் பட்டம் பெற்ற வர்களுக்கு அரசுபணியில் பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்றும் இதற்கு எதிராக கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 107ஐ ரத்து செய்யவேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி கேட்டுக்கொண்டார்.

செவ்வாயன்று (ஏப்.30) சட்டம் நீதி நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறை மானியக்கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் அவர் இதுகுறித்து பேசியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் படித்தவர்களுக்கும் அரசு பதவிகளில் நியமனம் பெறலாம் என்கிற நிலை இருந்தது. இதனால் ஏராளாமானோர் இன்று அரசின் பல பதவிகளுக்கு வந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் அரசாணை 107- மூலம் 1979ல் திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பதவியில் நியமனம் செய்யப்பட தகுதியில்லையெனவும், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வு பெற அருகதை இல்லையெனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அரசாணை 107 பிறப்பிப்பதற்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த அரசாணையை மறுபரி சீலனை செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி
: இதை ஒரு சமூகப்பிரச்சனையாக பார்க்கவேண்டி யுள்ளது. இந்த பிரச்சனையில் உயர் நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் வேறு விதமாக தீர்ப்பு வழங்கியுள்ளன. இதை எப்படி தீர்க்கவேண்டும் என்பதை அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்: திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் முறையான கல்வி, முறைசாரா கல்வி என்று இரு முறைகள் உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் டூ முடித்து விட்டு நேரடியாக பட்டம் பெறும் முறை முறையான கல்வி. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பட்டம் முடிப்பது முறை சாரா கல்வி. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையால் திறந்த வெளி பல்கலைக் கழகத்தில் முறையாக பட்டம் பெற்றவர்களுக்கு எந்த விதபாதிப்பும் இல்லை. அவர்கள் அரசுப் பணியில் இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்பாடாது. ஆனால் முறைசாராக் கல்வி மூலமாக பட்டம் பெற்றவர்கள் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது.

பாலபாரதி: அரசாணை 107ன் படி பழைய எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். 1988 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருவதால் அவர்களுடைய சர்வீஸ் 53 ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது 107 அரசாணை படி பிளஸ்டு முடித்து பட்டம் முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் பதவி உயர்வு வழங்கப் படுகிறது. பழைய எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு சர் வீஸ் அதிகமாக இருந்தா லும் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. ஆனால் பிளஸ்-2 முடித்து பட்டம் பெற்றவர்களுக்கு சர்வீஸ் குறைவாக இருந்தாலும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதில் வித்தியாசம் பழைய எஸ்எஸ்எல்சிதான். எனவே இந்த அரசாணையில் ஒரு சிறு திருத்தத்தை அரசு கொண்டுவந்தால் தலைமைச் செயலகத்தில் பணி யாற்றி ஒய்வு பெறக் கூடிய வயதில் உள்ளவர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக் கும். பதவி உயர்வு பெற்றதாக இருக்கும். அதற்கு அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி: உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த பிரச்சனையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பி னருக்கு உள்ள உணர்வு போலவே அரசுக்கும் இந்த பிரச்சனையில் உணர்வு இருக்கிறது. யார் வளர்ச்சி யிலும் தடைக்கல்லாக அரசு இருக்காது. சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு என்று வருகிறபோது அரசு கட்டுப்படவேண்டிய சூழ்நிலை இருக் கின்ற காரணத்தால் அரசு இந்த பிரச்சனையை பரிசீலனை செய்து 107 அரசா ணையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வாறு நிவாரணம் தரலாம் என்பதை முடிவு செய்யும்.

ஆர்.ராமமூர்த்தி: அரசாணை 107 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அரசாணை 107ஐ ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி:

 

29.4.13

பதவியுயர்வின்றி பணியாற்றி ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணிநிலையில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க அரசாணை வெளியீடு

G.O. No. 69 Dt: 18-04-2013

மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி - முதன்மை கல்வி அதிகாரிகள் அனுமதித்து வழங்க ஆணை

பள்ளி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துப்படி கோரும் மனுக்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக பெறப்பட்டு உரிய பரிசீலனைக்கு பின்னர் துறை தலைவர் என்ற நிலையில் பள்ளி கல்வி இயக்குநரால் அதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் போக்குவரத்து படியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிலையிலேயே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் செயல்முறைகளில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரிடம் இருந்து 60 சதவீதத்திற்கு மேலான உடல் ஊனமுற்ற மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை 40 சதவீதம் ஊனமுற்றோர் என மருத்துவ சான்று பெற்றுள்ளவர்களுக்கும் வழங்க அனைத்து துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைத்துள்ள உத்தரவில், "மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி அனுமதிக்கப்பட ஏதுவாக வருவாய் மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகளே அனுமதித்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
.

ஆன்-லைனில் ஆர்.டி.ஐ.,க்கு மனு செய்யலாம்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு தொடர்பான அனைத்து தகவல்களையும், பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல் அறிமுகப்படுத்தியது. இதன்படி, 10 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தால், அரசு தொடர்பாக வேண்டும் தகவலை பெற முடியும்.
 
தற்போது, ஆன் லைனின் விண்ணப்பிக்கவும், இன்டர்நெட் பாங்கிங் வசதியை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், ஸ்டேட் பாங்க் மற்றும் அதன் துணை வங்கிகளில், 10 ரூபாய் கட்டணமாக செலுத்தலாம். இதற்காக, www.rtionline.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
.

27.4.13

தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம்

25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 19ம் தேதி தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது

தமிழகத்தில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 2004ம் ஆண்டு முதல் 6,7,8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 1.6.2006ன்படி இந்த பட்டதாரி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றுகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் 6,7,8ம் வகுப்புகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்திடாமல் அரசாணை வெளியிட்டதால் ஒரே பணி, இரு வேறு ஊதிய விகிதம் என்ற அவநிலையில் தற்பாது 6,7,8ம் வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கடந்த 2007ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட இயக்கங்களை நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 19ம் தேதி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து வருவாய், கல்வி மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர் என்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
.

20.4.13

நாகர்கோவிலில் பணிநிறைவு இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - பொதுச் செயலாளர் பங்கேற்பு


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட கிளையின் சார்பாக 2012-13ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 13.04.2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நாகர்கோவிலில் வைத்து நடைபெற்றது.

பாராட்டு விழாவிற்கு மாவட்டத்தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மரிய ஜாண் டெல்லஸ், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அமைப்புச் செயலாளர் திவாகரன் பிள்ளை அனைவரையும் வரவேற் றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களைப் பாராட்டி உரையாற்றினார். பொதுச்செயலாளர் க. இசக்கியப்பன் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னாள், இன்னாள் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். குழித்துறை கல்வி மாவட்டச் செயலாளர் ஹரிகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தலைமையிடச் செயலாளர் பால் செபாஸ்டின் தொகுத்து வழங்கினார்.
.

திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம்


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத் தின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை ஜாண்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ராஜமார்த்தாண்டம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.கு. சரவணன், மாவட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின், தென் காசி கல்வி மாவட்டத் தலைவர் சசிக் குமார், செயலாளர் செல்வ சுந்தரராஜ், திரு நெல்வேலி கல்வி மாவட்டச் செயலாளர் சாம்ராஜ் மற்றும் ராஜா, மாநிலத் தணிக்கையாளர் பாபு உள்பட பலர் உரையாற்றினர்.

மேனாள் மாவட்டச் செயலாளர் மாடக்கண்ணு, மேனாள் மாவட்டத் தலைவர் J.D. நிம்ரோத் ஆகியோர் 216 அரசாணை பற்றிய விபரங்கள், வழக்கு தொடர்பான விபரங்கள் பற்றி எடுத்துரைத்தனர். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் மாநில செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

1. உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை மே 10 பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின் போது பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வலியுறுத்தப் பட்டது.

2. கோடை வெப்ப தாக்குதல் அதிகமாகி வருவதால் மாணவர்கள் நலன் கருதி அனைத்து வகை பள்ளிகளின் வேலை நாள்களை மார்ச் 31க்குள் முடிக்கும் அளவில் பள்ளி நாள்காட்டி தயார் செய்து கேரள மாநிலம் போல் ஏப்ரல் 1 முதல் கோடை விடுமுறை வழங்கிட மாண்புமிகு முதல்வர் அவர்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. மே 12, 13 மாநில பயிற்சி பட்டறை யில் நெல்லை மாவட்டத்தின் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

4. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடைபெற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

5. CPFஐ ரத்து செய்து GPFஐ அமல்படுத் திட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

6. மருத்துவ காப்பீட்டு சந்தா தொகை யை ரூ.150லிருந்து ரூ.50 ஆக குறைத்திடு தல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்