தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.5.13

ஆசிரியர்கள் உரிமை காக்கும் போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மரிய மிக்கேல் மற்றும் செயலர் சசிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வித் துறையில் மீளாய்வுக் கூட்டம் என்ற பெயரில் தலைமை ஆசிரியர்களைத் தரக்குறைவாக பேசியும், கோடைக்கால சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர் மற்றும், ஆசிரியர் நலனைப் பாதிக்கச் செய்கின்ற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் அனைவருக்கும் கல்வித்திட்ட இணை இயக்குனர் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்ட அதிகாரிகளை கண்டித்து உரிமை காக்கும் அறப் போராட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 9ம் தேதி மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறுகின்றது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்