தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.5.13

ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங் திடீர் நிறுத்தம்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 20ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடந்து வருகிறது.

ஆன் லைன் மூலம் 4 நாட்களாக நடந்த இந்த கவுன்சலிங்கில் சில பிரிவு ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கான மாறுதல் ஆகியவற்றுக்கான கவுன்சலிங் நடக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

 மேற்கண்ட கவுன்சலிங் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்