தஇஆச-வின் தகவல்களை செல்பேசியில் பெற்றிட, தங்கள் செல்பேசியில் JOIN tiasnews எனத் தட்டச்சு செய்து 09219592195 என்ற எண்ணுக்கு சேதி அனுப்புங்கள்

விளம்பரத்தை கிளிக் செய்து இணைய வளர்ச்சிக்கு உதவுங்கள்

27.5.13

மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு  அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கயத்தாறு அவர்கள் இன்று காலை  பள்ளி கல்வி இணை இயக்குநரை சந்தித்தார். அப்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்தார்.இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமது மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இசக்கியப்பன் அவர்கள் பள்ளி கல்வி இணை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
.

25.5.13

தகுதியுள்ள இடைநிலை ஆசிரியருக்கு பணிபுரியும் பள்ளியிலேயே பதவி உயர்வு - கல்வித்துறை முடிவு

நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடக்க கல்வித்துறையில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது என்றும் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், பத்தாம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

அரசின் கொள்கை முடிவின்படி தற்போது நடுநிலை முதல் மேல்நிலை வரை அனைத்து வகுப்புகளுக்கும் பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை பதவி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த தகுதி உயர்வுக்கு இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்ப்பாடமாக இருந்தால் பி.லிட் முடித்திருக்க வேண்டும், பிற பாட ஆசிரியர்களாக இருந்தால் இளநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டியது அவசியம். தகுதி உள்ள இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரிடமிருந்தும் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியின் அடிப்படையில் அப்கிரேடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரிடமும் காலிப்பணியிட விபரம் மற்றும் அப்கிரேடு செய்ய தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் தேவை பட்டியல் கோரப்பட்டுள்ளது,” என்றார்.

நன்றி:

 

24.5.13

ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சலிங் திடீர் நிறுத்தம்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 20ம் தேதி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடந்து வருகிறது.

ஆன் லைன் மூலம் 4 நாட்களாக நடந்த இந்த கவுன்சலிங்கில் சில பிரிவு ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கான மாறுதல் ஆகியவற்றுக்கான கவுன்சலிங் நடக்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

 மேற்கண்ட கவுன்சலிங் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
.

13.5.13

கன்னியாகுமரியில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சங்க பொறுப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வைத்து இரண்டு நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் 12-05-2013 ஞாயிறு அன்று நடைபெற்ற முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ந. பர்வதராஜன் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆ. சுப்பிரமணியன் "சங்க வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

3-வது அமர்வுக்கு விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் "சங்கத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

13-05-2013 திங்கள் 4-வது அமர்வு நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து தலைமை தாங்கினார். திருநெல்வேலி மாவட்ட JCTU அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி “உலகமயத்தில் தொழிற்சங்கம் சந்திக்கும் சவால்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

5-வது அமர்வுக்கு கன்னியாகுமரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர்  ஆர் சுஜா ரோஸ் ரெக்ஸ்லின் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அ. ஜெயராணி “தொழிற்சங்கத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா சிங், மரிய ஜாண் டெல்லஸ், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம் ஆகியோர் செய்திருந்தனர்.
.

பிரபலமான இடுகைகள்

இணைய தொலைக்காட்சி