தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.3.13

நெல்லையில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி நெல்லையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் (25 ஆயிரம்) பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி நெல்லையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் ராஜமார்த்தாண்டம் தலைமை வகித்தார். தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் செல்வசுந்தராஜ், நெல்லை கல்வி மாவட்ட செயலாளர் சிதம்பர ராமலிங்கம், சேரன்மகாதேவி கல்வி மாவட்ட செயலாளர் சாம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட அமைப்புச் செயலாளர் செல்வின் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சரவணன், மாநில தணிக்கையாளர் பாபு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் மனோகரன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பஸ்லுல் ஹக், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் சுடலைமணி, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கணபதி ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் இசக்கியப்பன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் ஆறுமுகதாஸ் நன்றி கூறினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்