தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.5.11

Expected Dearness Allowance from July, 2011

Dearness Allowance has turned out to make great impact among Government employees..!

As of now, it cannot be ruled out that the Dearness Allowance is making great impact on central and state government employees in large numbers.

We know that promotion, increment and allowances and its increases depends upon the individuals, as far as Dearness Allowance is concerned, it gives financial benefit to all grade of employees at the same time.

In March 2011, the Central Government announced an increase of 6% Dearness Allowance from Jan 2011. Now everybody keenly watch for the increase of Dearness Allowance from July, 2011.

AICPIN-IW for the past three months have been already announced by Labour Bureau, Department Statistics, Government of India in its Web site. According to it AICPIN-IW for the month of January 2011 is 188, February 2011-185 and March 2011 is 185. AICPIN-IW for the remaining three months ie April, May and June 2011 have yet to be announced. So this is not the right time to answer correctly to the question of what will be the Dearness Allowance from July 2011? But as per the past 9 months average of monthly All India Consumer Price Index (IW) with the base year 2001=100, we can expect that the hike in Dearness Allowance from July 2011 will be around 6% to 7%
 .

சமச்சீர் கல்வி விவகாரம்: வருகிறது சட்ட திருத்தம்?

சமச்சீர் கல்வி சட்டம், கடந்த ஆண்டு, தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு, 2010-11ம் ஆண்டிலும், இரண்டாம் வகுப்பில் இருந்து, ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 2011-12ம் ஆண்டிலும் அமல்படுத்தப்படும் என, சமச்சீர் கல்விச் சட்டத்திலேயே கூறப்பட்டது.

இச்சட்டத்தின்படி, கடந்த ஆண்டு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்த கல்வியாண்டில், மற்ற வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக, 200 கோடி ரூபாய் செலவில் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வினியோகிக்க தயாராக இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்தி வைப்பது என, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளதே தவிர, ரத்து செய்யவில்லை. தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும், எனவே, புதிதாக கல்வியாளர்களை நியமித்து ஆராயப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததற்கு அரசு தரப்பு கூறும் காரணம் இது தான். தரமான கல்வியை சமச்சீர் கல்வி திட்டம் வழங்கவில்லை என்பது தான் தனியார் பள்ளிகளின் குற்றச்சாட்டு. பாடத்திட்டங்களை வகுத்தது எல்லாம் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் தான் என்பது முந்தைய ஆட்சியாளர்கள் முன்வைக்கும் வாதம்.

முன்னாள் துணைவேந்தர் முத்துகுமரன் தலைமையிலான சமச்சீர் கல்விக்கான குழுவில், தனியார் பள்ளிகள் சார்பில் இடம் பெற்றவர் கிறிஸ்துதாஸ். இவர் பிரைமரி, நர்சரி, மேல்நிலைப் பள்ளி நிர்வாக சங்கத்தின் பொதுச் செயலர். முத்துகுமரன் தலைமையிலான குழு, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், நர்சரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை பாதிக்கும் என கருதுவதால் அறிக்கையை ஏற்கவில்லை என, ஒரு குறிப்பை, கிறிஸ்துதாஸ் எழுதியுள்ளார்.

சட்டத்தில் கூறியுள்ளபடி, 10ம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி இருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவை கூடி இந்த ஆண்டு நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளது. சட்டம், ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது என்பதால், இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடக் கோரி, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து, கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், ஜனார்த்தனராஜா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த சட்டத்தில் உள்ள முக்கியமான பிரிவு 14 ஐ, ஐகோர்ட் ரத்து செய்தது. கொள்கை அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவு, பள்ளி கல்விக்கான மாநில போர்டை கட்டுப்படுத்தும் என்றும் அரசின் முடிவு இறுதியானது என்றும் பிரிவு, 14 கூறுகிறது.

அரசுக்கு அதிகாரம் வழங்கும் இந்தப் பிரிவை ஐகோர்ட் ஏற்கவில்லை. இந்தப் பிரிவானது, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பள்ளி கல்விக்கான மாநில போர்டின் அதிகாரங்கள், செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் பிரிவுக்கு முரணாக உள்ளது என, ஐகோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளை அரசியல் மாற்றங்களுக்காக அலைக்கழிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர். 

தற்போது, சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசுக்கு நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் பள்ளிகளின் சங்கங்கள் சார்பில், அரசுக்கு ஆதரவாக மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது தொடர்பாக, சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி


27.5.11

அரசு துறைத்தேர்வு புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு: ரூ.100 விலையுள்ள புத்தகத்துக்கு வாடகை ரூ.2000

அரசு துறை ரீதியான தேர்வுகளுக்கான பாடப் புத்தகங்கள் விற்பனையில்லாததால், இப்புத்தகங்களை பதுக்கி வைத்திருக்கும் தனியார் கோச்சிங் சென்டர்கள், அவற்றை வாடகைக்கு விட்டு, கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. இதனால், அரசு அலுவலர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அரசின் அனைத்து துறைகளிலும், பணிபுரியும் அலுவலர்களின் பதவி உயர்வுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்துகிறது. பொதுவாக, அரசுப் பணியாளர்கள் அதிக பட்ச பதவி உயர்வுக்கு ஐந்து தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். கல்வித்துறையை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு மூன்று துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, தலைமை ஆசிரியராகவும், மாவட்டக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற முடியும். எனவே, பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் இத்தேர்வை எழுதுவது வழக்கம்.

இத்தேர்வுகளுக்காக, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள், படிப்பதற்கு மட்டுமல்ல, தேர்வெழுதவும் கண்டிப்பாக தேவைப்படும். அதாவது, தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட சம்பந்தப்பட்ட துறை தேர்வு புத்தகத்தை வைத்திருந்தால் மட்டுமே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வை பொறுத்தவரை இப்புத்தகத்தை பார்த்து, அதற்குரிய சரியான பதிலை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இப்புத்தகத்துக்கான ஜெராக்ஸ் பிரதிகள் வைத்திருந்தால், தேர்வெழுத அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், ஒவ்வொரு அரசு அலுவலரும் தேர்வெழுத இப்புத்தகம் மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் டிப்போக்களில் இத்துறை புத்தகங்கள் விற்பனை சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல கிளைகள் வைத்திருக்கும் ஒரு டுடோரியல் கல்லூரியில் மட்டும், இப்புத்தகங்களை ஆயிரக்கணக்கில் ஸ்டாக் வைத்துள்ளனர். இவர்களும், புத்தகங்களை விற்பனை செய்வதில்லை. 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை தேர்வெழுத வாடகைக்கு விட மட்டும், 2,000 ரூபாய் வசூல் செய்கின்றனர். சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் தேர்வெழுதி முடித்தவுடன், தேர்வறையின் வாசலிலேயே, அப்புத்தகத்தை டுடோரியல் நிறுவனத்தினர் வசூல் செய்து விடுவர். இதனால், ஒவ்வொரு துறை தேர்வுக்கும், தலா, 2,000 ரூபாய் வீதம் டுடோரியல் நிறுவனத்தினரிடம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு, அரசுத்துறை பணியாளர்கள் உள்ளாகியுள்ளனர்.

அரசுத்துறை பணியாளர்கள் கூறியதாவது: அரசு அலுவலர்களின் துறை தேர்வுகளுக்கு, அந்தந்த தலைமை அலுவலகம் மூலம் துறைத்தேர்வு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சில ஆண்டுகளாக தமிழக அரசு மூலம் நடக்கும் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாடு பாடநூல் கழக டிப்போ உட்பட, எங்குமே இப்புத்தகங்கள் விற்பனைக்கு கிடைப்பதில்லை. ஒரே ஒரு தனியார் கோச்சிங் சென்டருக்கு மட்டும், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எப்படி கிடைத்தது என தெரியவில்லை. அதே போல், அவர்கள் கொள்ளையடிப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகமும் ஏன் ஒத்துழைக்கிறது என்பது புரியாத மர்மமாக உள்ளது.

கோடிக்கணக்கில், வருவாய் கொட்டும் இதன் பின்னணியில், பல அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் இருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அனைத்துத் துறை தேர்வுகளுக்குமான பாடப்புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நடத்தும் பகல் கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

26.5.11

செப்., 18ல் ஊரக திறனாய்வு தேர்வு

"கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு, ஊரக திறனாய்வு தேர்வு செப்., 18ம் தேதி நடக்கும்,'' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

கிராமப்புற மாணவர்கள் மேல்நிலை கல்வியைத் தொடர, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படும். இதில், மாவட்ட வாரியாக அதிக மதிப்பெண் பெறும், முதல் 50 மாணவர்கள், 50 மாணவியருக்கு உதவித் தொகை வழங்கப்படும். 

இக்கல்வியாண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு செப்., 18ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் உள்ளது. இவற்றை 10 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருமானச் சான்று இணைத்து, ஆக., 10ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். 

வருமானம் அதிகரிப்பு: இத்தேர்வை எழுத, 2010 - 2011ம் ஆண்டு பொதுத் தேர்வில் 8ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், கடந்த ஆண்டு வரை 12,000 ரூபாயாக இருந்தது. இக்கல்வி ஆண்டு முதல் ஒரு லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கான வருமானச் சான்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசிக்காத கிராமப்புற மாணவர்கள் மட்டுமே ஊரக திறனாய்வு தேர்வை எழுத முடியும். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆண்டிற்கு 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என, உத்தரவில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் வகையில் அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்துகிறது. அதுவும், இந்த ஆண்டு முதல் குடும்ப ஆண்டு வருமானத்தை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தியது, இத்தேர்வை அதிக மாணவர்கள் எழுத வாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.

நன்றி

 

23.5.11

பழைய பாடத் திட்டத்தின் கீழ் 6 கோடி புத்தகங்கள் புதிதாக அச்சடிப்பு

சமச்சீர் கல்விக்குப் பதிலாக இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்பட உள்ளதையடுத்து, புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. 

பத்தாம் வகுப்பு வரை 2011-12-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்திருந்தது. இதற்காக தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் 7.68 கோடி புத்தகங்களை அச்சிடும் பணிகளை மேற்கொண்டு வந்தது.  

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இதுவரை 6.5 கோடி புத்தகங்கள் ரூ.216 கோடி செலவில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றும் அரசின் முடிவையடுத்து, சமச்சீர் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சமச்சீர் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன. அந்தப் பணிகளே இன்னும் முழுமையாக முடியாத நிலையில், ஜூன் 15-ம் தேதிக்குள் புத்தகங்களை முழுவதுமாக அச்சிட்டு வழங்குவது சாத்தியமில்லாதது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செம்மொழி வாழ்த்துப் பாடல் உள்ளிட்ட படைப்புகள் சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  

சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்று கூறி இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறையை அமலாக்குவதை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.  அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழைய பாடத்திட்டத்தின் படி புத்தகங்களை அச்சிடுவது தொடர்பாக பதிப்பாளர்களிடம் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.  

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:  பழைய பாடத்திட்டத்தின் கீழ் 6.4 கோடி புத்தகங்களைப் புதிதாக அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு புத்தகங்களுக்கு முன்னுரிமை அளித்து புத்தகங்கள் பதிப்பிக்கப்படும்.  

புத்தகங்களை அச்சிடும் பணிகள் முழுவதுமாக முடிய 2 அல்லது 3 மாதங்கள் வரை ஆகலாம். இந்தப் பணிகளுக்காக மொத்தம் 14 ஆயிரம் டன் அச்சுக் காகிதம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களை அச்சிட ரூ.110 கோடி வரை செலவாகலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.  

இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்காக புதிதாக டெண்டர் கோரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கள்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சமச்சீர் கல்வி புத்தகங்கள் பெரியதாகவும், பல வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டதால், அதிக செலவு ஆனது. ஆனால், பழையப் பாடத்திட்டத்தின் படி சிறிய புத்தகங்கள், குறைந்த அளவிலான வண்ணங்களில் தயாரிக்கப்படுவதால் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

பழையப் புத்தகங்கள்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திடம் இப்போது 40 ஆயிரம் பழையப் பாடப் புத்தகங்கள் இருப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதோடு, அந்தந்தப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், பழைய மாணவர்களிடமும் புத்தகங்கள் இருக்கும். இணையதளத்திலும் இந்தப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, இவற்றை வைத்து ஜூன் 15 முதல் பள்ளிகளில் பாடங்களை நடத்த முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.  

அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பழையப் புத்தகக் கடைகளையும், முன்னாள் மாணவர்களையும் பள்ளி மாணவர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.  

இடம் இல்லை: தமிழகம் முழுவதும் 65 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் ஒரு மையத்தை அமைத்து சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வந்தன.  இப்போது புதிதாக அச்சடிக்கப்பட உள்ள 6.4 கோடி புத்தகங்களை இந்த மையங்களில் வைத்து விநியோகிக்க இடம் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 கிடங்குகளிலும் சமச்சீர் புத்தகங்கள் நிறைந்துள்ளன.  எனவே, புதிதாக அச்சடிக்கும் புத்தகங்களை எப்படி எடுத்துச் சென்று விநியோகிப்பது, ஏற்கெனவே அச்சடித்துள்ள புத்தகங்களை என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.  

பதிப்பாளர்கள் மூலம் புத்தகங்களை நேரடியாகப் பள்ளிகளுக்கே எடுத்துச் சென்று விநியோகிக்கும் யோசனையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி


22.5.11

சமச்சீர் கல்விக்கு தடை பழைய பாடத்திட்டம் தொடரும் - காணொளி

சமச்சீர் கல்வி சர்ச்சை: பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது; தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு


இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் , இது தொடர்பான பிரச்னைக்கு சில சிக்கல்கள் இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கவும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

முதல்வராக பதவியேற்ற ஜெ., இன்று அமைச்சர்களுடன் முதல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அனைத்து துறை அமைச்சர்கள், தலைமை செயலர், மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வளர்ச்சிப்பணிகள், மற்றும் வரும் நிதியாண்டில் செயல்பட வேண்டிய கல்வி நிலை குறித்தும் , மின்வெட்டு சமாளிப்பது , மக்கள் பணிகள் விரைந்து நடக்க அதிகாரிகளை முடுக்கி விடுவது , பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் சமச்சீர் கல்வி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் படியாக அமையவில்லை. தற்போதைய சமச்சீர் கல்வித்திட்டம் ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்த வழி செய்யாது . எனவே சமச்சீர் கல்வி வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என்றும் , இந்த கல்வி ஆண்டில் பழைய பாடத்திட்டங்களையே பின்பற்றலாம் என்றும், புத்தகம் அச்சிட கால அவகாசம் தேவைப்படுவதால் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்கவிருந்த பள்ளியை வரும் 15 ம் தேதி திறக்கலாம் என்றும் உத்தரவிடப்படுகிறது.


குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதம் 6 ம் தேதி மேட்டூர் அணையை திறக்கவும் உத்தரவிடப்பட்டது. வழக்கமாக 12 ம் தேதிக்கு பின்னர் தான் அணை திறக்கப்படும் ஆனால் இந்த முறை விரைந்து திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி


ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மே 25க்குள் நடத்துவதில் சிக்கல்

ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சிலிங், மே 25ல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், மே இறுதியில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில், மாவட்டத்திற்குள் இடமாறுதல், மாவட்டம் விட்டு இடமாறுதலுக்கு விருப்பமுள்ளவர்கள், மே 12க்குள் விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.


அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, மே 25ல் கவுன்சிலிங் துவங்க வேண்டும். அப்போது தான், பள்ளிகள் துவங்கும் போது, இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர வசதியாக இருக்கும்.

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை, கவுன்சிலிங்கிற்கான உத்தரவு வரவில்லை. எனவே, திட்டமிட்டபடி, மே 25ல் கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மே 25 முதல், கவுன்சிலிங் துவங்க வேண்டும். ஆனால், இதுவரை உத்தரவு வரவில்லை. எனவே, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பதில் தாமதம் ஏற்படும், என்றார்.
 
நன்றி


சமச்சீர் கல்வி திட்டத்தில் வருகிறது மாற்றம்?

தி.மு.க., அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர, அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அச்சடிக்க வேண்டாம் என்றும், மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திடீரென சமச்சீர் கல்வி திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.
 
கடந்த 2006ல், நடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்டம் குறித்த அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. ஸ்டேட் போர்டு, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள், சமுதாயத்தில் சரி சமமான, தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கவில்லை என்றும், இந்த குறையை போக்க, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில், சமமான பாடத்திட்டங்களை கொண்ட சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, தி.மு.க., அறிவித்தது.அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்தன. சமச்சீர் கல்வி திட்டம் குறித்து ஆராய்ந்த பின், சட்டசபையில் இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, நான்கு வகையான கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து, "மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம்' ஏற்படுத்தப்பட்டது.பாடவாரியாக அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்களை வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து, சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட் வரை சென்றன. ஆனால், "தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டம் செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதையடுத்து, திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து, கடந்த கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
வரும் ஜூன் மாதம் துவங்கும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதற்காக, ஏழு கோடிக்கும் அதிகமாக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி, 85 சதவீதம் முடிவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்க்கவில்லை. எனினும், தி.மு.க., அரசு உருவாக்கிய பாடத்திட்டங்களில், கருணாநிதி எழுதிய படைப்புகளும், அவரை பற்றிய பல்வேறு தகவல்களும் இடம் பெற்றிருப்பதை, அ.தி.மு.க., அரசு விரும்பவில்லை. இதனால், கருணாநிதி சம்பந்தபட்ட அனைத்து பகுதிகளையும் உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சமச்சீர் கல்வி திட்டம் தொடருமா, ரத்தாகுமா என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்கவில்லை. "மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எந்தவித பாதிப்பும் வராமல் அ.தி.மு.க., அரசு பார்த்து கொள்ளும்' என்று மட்டும் தெரிவித்தார்.
 
ஏற்கனவே 85 சதவீதம் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 15 சதவீத பணிகள், சென்னை, சிவகாசி உள்ளிட்ட நகரங்களில் நடந்து வந்தன. அச்சக அதிபர்களுக்கு, தற்போது நடக்கும் அச்சுப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, மேலிடத்தில் இருந்து தகவல் தரப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அச்சாகி, மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை, பள்ளிகளுக்கு வினியோகிக்க வேண்டாம் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்துள்ளது. 

இது குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் சபீதாவிடம் நேற்று காலை கேட்டதற்கு, "சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்வது குறித்து, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்றார்.ஆனால், பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாவட்ட தலைநகரங்களில் இருந்து இன்னும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வினியோகிக்கப்படாததும், நடந்து வந்த அச்சகப் பணிகளை உடனடியாக நிறுத்த கூறியிருப்பதும், பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

500 கோடி ரூபாய்? சமச்சீர் கல்வி திட்டத்திற்காக, இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாடப் புத்தகங்களை எழுதிய குழுவினருக்கு சம்பளம், பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பேப்பர் கொள்முதல், அச்சிடும் செலவு, மாவட்டங்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்புவதற்கான போக்குவரத்து செலவு என, பல வகைகளில் அதிகளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.
 
சிவகாசியில் அதிகாரிகள்: இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் நிலையில், இரு அதிகாரிகள், சிவகாசியில் முகாமிட்டுள்ளனர். காலாண்டு தேர்வு வரையிலான பாடப்பகுதிகளை மட்டும் விரைவாக அச்சிட்டு தரும்படி, அங்குள்ள அச்சக உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அச்சக உரிமையாளர் பேட்டி: சமச்சீர் கல்வி திட்ட நிலவரங்கள் குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அச்சக நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: சமச்சீர் கல்வி பாடப்புத்கம் அச்சிடும் பணி, பெரும்பகுதி ஏற்கனவே முடிந்து, மாவட்ட தலைநகரங்களுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பி விட்டோம். மீதமுள்ள பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென பணிகளை நிறுத்துமாறு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதனால், பணிகளை நிறுத்திவிட்டோம். பழைய பாடப்புத்தகங்களை அச்சிட்டு தருமாறு அதிகாரிகள் கேட்கின்றனர். காலாண்டு தேர்வு வரையிலான மூன்று மாதங்களுக்கு தேவையான பாடப் பகுதிகளை மட்டும் 60 பக்கங்களில் அச்சிட்டு தருமாறு கேட்கின்றனர். இதை அச்சிட வேண்டும் என்றாலும், அதிக நாட்கள் தேவைப்படும். இதற்கான, "டெண்டர்' அறிவிப்பு, நாளை (இன்று) வெளியாகும் என கூறப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி


21.5.11

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறக்கும் முன்பே மாணவர்களுக்கு கிடைக்குமா?

அரசுப் பள்ளிகளை திறக்க 10 நாள்களே உள்ள நிலையில் நடப்பாண்டு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்பே மாணவர்களுக்கு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

கோடை விடுமுறைக்குப் பின், பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ல் திறக்க உள்ளன. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசே இலவச பாடப் புத்தகங்களை வழங்குகிறது. சில ஆண்டுகளாக பள்ளிகள் திறந்து சில நாள்களுக்குப் பின் புத்தகங்கள் மாணவர்கள் கையில் கிடைத்தன. ஆனால் அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, இரு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் புத்தகங்கள் வழங்கப்பட்டன.  

சென்ற ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கும் முன்னரே பாடப் புத்தகங்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக சென்ற ஆண்டு தபால் துறை மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன. 

தமிழகத்தில் மாணவர்கள் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களில் படித்து வருகின்றனர். இதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும், பாடச் சுமைகளை குறைக்கும் நோக்கத்திலும் தமிழக அரசு சமச்சீர்க் கல்வி முறையை அமல்படுத்த முடிவு செய்தது. அதன் முதல்கட்டமாக சென்ற கல்வி ஆண்டில் (2010-2011) முதல் மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு அமல்படுத்தியது.  இதற்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டது. இந்த புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு அந்தந்த பள்ளிகளுக்கு தபால் துறையினர் மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகமே நேரடியாக அனுப்பி வைத்தது.  

ஆனால் தனியார் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தனியார் பள்ளி நிர்வாகிகள், தங்களுக்கு தேவையான புத்தகங்களுக்கு ஏற்ப முதல் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய நான்கு புத்தகங்கள் ஒரு செட் ரூ.190-க்கும், 6-ம் வகுப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடப் புத்தகங்கள் ரூ.237.50 என கணக்கிட்டு டி.டி. எடுத்து கொடுத்து குடோனில் புத்தகங்களை பெற்றுக் கொண்டு பாடபுத்தகங்களை எடுத்துவர சில வாரங்கள் கூட ஆகாது.  

நடப்பாண்டில் (2011 - 2012) கல்வியாண்டில் 2-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதற்காக பல கோடி ரூபாய் செலவில் பாடப் புத்தகங்கள் விரைவாக தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு மாவட்டம் வாரியாக உள்ள பள்ளி குடோன்களுக்கு சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அங்கிருந்து அரசு, அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேவைக்கேற்ப பாடப் புத்தகங்களை எடுத்துச் சென்று இருப்பு வைத்துள்ளனர்.  

சென்ற ஆண்டு மே மாத கோடை விடுமுறையிலேயே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் நடப்பாண்டில் இதுவரை மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில் மாணவ மாணவிகள் கையில் பாடப் புத்தகங்கள் வழங்காதது ஏனோ தெரியவில்லை. 

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: "திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த திங்கள்கிழமைதான் பாடப் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. செவ்வாய்கிழமை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி தகவல் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வந்தது. அதில் தற்போது புதிதாக தயாரிக்கப்பட்டு நடப்பாண்டு மாணவர்களுக்கு வழங்க இருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை எந்த ஒரு மாணவர்களுக்கும் கொடுக்க கூடாது எனவும், பாடப் புத்தகத்தில் அரசு சில பகுதிகளை நீக்கப் போவதாக தகவல் வந்தது. அதையெடுத்து நாங்களும் எந்த மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தங்களை வழங்கவில்லை. எங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்தால்தான் மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை கொடுப்போம்' என அவர் கூறினார். 

கத்தரி வெயிலில் தினசரி மாணவர்கள் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை வாங்க வருவதும், ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களை தற்போது கொடுக்க முடியாது என அவர்களை திரும்பி அனுப்புவதையும் பார்ப்பதற்கு வேதனை அளிக்கிறது. எனவே அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முன்னரே பாடப் புத்தகங்கள் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்கின்றனர்.

நன்றி



அரசாணையை மீறுகிறது கல்வித்துறை; குமரி மாவட்ட ஆசிரியர்கள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வித்துறை அரசாணையை மீறி செயல்படுகிறது என்று ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் அண்மையில் நடந்த தேர்வு, சிறப்புநிலை கூட்டமர்வில் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது
குழித்துறை கல்விமாவட்ட ஆளுகைக்கு உட்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தேர்வு, சிறப்புநிலை கூட்டமர்வு நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆசிரியர்களின் அனைத்து சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறப்படவில்லை என்று காரணத்தை காட்டி தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை பிறப்பிக்கப்படவில்லை.

2004ம் ஆண்டிற்கு பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறப்பட வேண்டும் என்ற தெளிவான அரசாணை இருந்தும் அதிகாரிகள் அரசாணையை மீறி செயல்படுவது வேதனையாக உள்ளது. அரசாணைகளையும், கோர்ட் உத்தரவுகளையும் மதிக்காமல் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். உரிய காலத்தில் சலுகைகளை பெற்றுத்தர வேண்டிய கல்வித்துறை வெளிப்படையாகவும், ஒளிவு மறைவில்லாமலும் செயல்பட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

எனவே அரசு விதிகளின் படி 2004க்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டு 10 முதல் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு தேர்வு, சிறப்புநிலை வழங்கி உரிய பணபலன்கள் கிடைத்திட, ஆசிரியர்களின் குறைகளை போக்கிட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.

நன்றி


19.5.11

ஜாதிவாரி கணக்கெடுப்பு : அமைச்சரவை ஒப்புதல்

ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும் என்றும், இதன்மூலம், மக்களின் சோஷியோ - எகனாமிக் நிலை தெரியவரும் என்று ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:


தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி திட்டம் நீடிப்பு: புது அரசு முடிவு

சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்றும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சூசகமாக தெரிவித்தார். அதே நேரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி, பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உடனே நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், சமச்சீர் கல்வி திட்ட அறிவிப்பை, தி.மு.க., வெளியிட்டது. அதன்படி, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்விக்கென சட்டம் கொண்டு வரப்பட்டு, அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வரும் கல்வியாண்டில், இதர வகுப்புகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு, பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்தாகுமா, பழையபடி ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வி திட்டங்கள் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பள்ளி கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி.சண்முகம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று, துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பாடநூல் கழக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், துறை செயலர் சபீதா, பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் மற்றும் பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் துறை, தேர்வுத்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் நடந்து வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டறிந்தார். குறிப்பாக, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் குறித்தும், தனியார் பள்ளிகளுக்கான கட்டண அறிவிப்பு குறித்தும், அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.

கூட்டத்திற்கு பின், நிருபர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:

* தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் வாபஸ் பெறப்படுமா அல்லது தொடர்ந்து செயல்படுத்தப்படுமா?

பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாடப் புத்தகங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், இந்த அரசு பார்த்து கொள்ளும்.

* தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண அறிவிப்பு எப்போது வெளிவரும்?

புதிய கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், புதிய கட்டணம் அறிவிக்கப்படும்.

* பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளிவரும்?

பணிகள் இன்னும் முடியவில்லை. பணிகள் நிறைவடைந்ததும், முன்கூட்டியே தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து, அமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ள கருத்து மூலம், இத்திட்டம் வரும் கல்வியாண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இத்திட்டத்தை வாபஸ் பெற அரசு நினைத்தாலும், செய்ய முடியாத நிலை இருக்கிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில், ஒன்றரை கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், திடீரென இத்திட்டத்தை வாபஸ் பெற்றால், மாணவர்களுக்கு வேறு பாடப் புத்தகங்களுக்கு வழங்க முடியாது. பழைய திட்டத்தின் கீழ், தேவையான பாடப் புத்தகங்கள் இருப்பில் இல்லை. அதனால், இந்தாண்டு எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை, புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதி படைப்புகள் நீக்கம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய பல பகுதிகள், 9, 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. செம்மொழி மாநாடு, கவிதை நடை உரைநடை, செம்மொழிப் பாடல், கருணாநிதி பற்றிய குறிப்புகள் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும், நீக்கப்பட்ட பகுதிகளாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. வரும், 2012-13ம் கல்வியாண்டில், புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடும் போது, கருணாநிதி சம்பந்தப்பட்ட பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டு அச்சிடப்படும்.

நன்றி:

பேறுகால விடுப்பு 180 நாட்கள் எடுக்க நிபந்தனை

அரசு பெண் ஊழியர்கள், 180 நாட்கள் பேறு கால விடுப்பு எடுக்க, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், அவர் கையெழுத்திட்ட முக்கிய கோப்புகளில், அரசு பெண் ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பு, மூன்று மாதங்களில் இருந்து, ஆறு மாதங்களாக உயர்த்துவதற்கான கோப்பும் ஒன்று. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், நேற்று, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு, பேறுகால விடுப்பு, 90 நாட்களாக உயர்த்தப்பட்டு, 1980ல் உத்தரவிடப்பட்டது. இதன்படி, ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப, பிரசவத்துக்கு முன்பும், பின்பும் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த சலுகை, மூன்று குழந்தைகளுக்கு மேல் உள்ள அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின், 1993ல் இந்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, உயிரோடு இரண்டு குழந்தைகளுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே, 90 நாட்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுமென திருத்தம் செய்யப்பட்டது.


இந்நிலையில், திருமணமான அரசு பெண் ஊழியர்களுக்கு தற்போது அளிக்கப்படும், 90 நாட்கள் மகப்பேறு விடுப்பை, 180 நாட்களாக உயர்த்தி தற்போது உத்தரவிடப்படுகிறது. இந்த 180 நாட்களை, ஊழியரின் விருப்பத்துக்கு ஏற்ப பிரசவத்துக்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக உள்ள திருமணமான பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:  

17.5.11

அமைச்சர்கள் பட்டியல்

Press Release - 174

அச்சத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள்; செலவின பட்டியல் கேட்குது தணிக்கை துறை

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் பராமரிப்பு செலவினங்களின் பட்டியலை, தணிக்கைத் துறை சேகரித்து வருகிறது.

தமிழகத்தில், 632 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், 1,120 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களின் சம்பள விவரம், இதர படிகள் குறித்த விவரங்கள், பள்ளி பராமரிப்பு பணிகளுக்கான செலவினம் என, அனைத்து விவரங்களையும், மாநில தணிக்கைத் துறை சேகரித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2010 கல்வியாண்டுக்கான செலவினங்களை, ஆண்டு வாரியாக பட்டியலிட்டு அனுப்பி வைக்கும்படி, அந்தந்த பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம், பட்டியல் தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பள்ளி செயலர்கள் மூலமாகவும், செலவினங்கள் குறித்து அறிக்கையை, மாநில தணிக்கைத் துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்கும்படியும், பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த கால செலவின பட்டியலை தணிக்கைத் துறை கேட்டுள்ளதால், அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் அச்சத்தில் உள்ளன.

நன்றி

முதல்வர் கையெழுத்திட்ட ஏழு முக்கிய கோப்புகள்

முதல்வராக  பொறுப்பேற்ற ஜெயலலிதா  மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய ஜெயலலிதா, ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். 

இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
  • படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன். 
    •  இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.
    • முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
      • பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
      • தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.
      • அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.
        • அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 
        இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். 

        முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



        Press Release - 275

        ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து உத்தரவு - முதல் கையெழுத்திலேயே அதிரடி


        அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.
        .

        தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்பு

        அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

        நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதுடன், அ.தி.மு.க., 146 இடங்களை பிடித்து, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்க வருமாறு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார். அதன் பேரில், ஜெயலலிதா கொடுத்த 33 அமைச்சர்கள் பட்டியலுக்கு கவர்னர் ஒப்புதல் தந்தார்.முதல்வராக ஜெயலலிதா, மூன்றாவது முறையாக பதவியேற்றார். 

        இதற்கான விழா, சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு, ஆடம்பரமின்றி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. காலை 10 மணி முதல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கில் வந்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பத்திரிகையாளர் சோ ராமசாமி, தெலுங்கு தேச கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலர் பரதன், தேசிய செயலர் ராஜா, ராஷ்டிரிய லோக்தளம் கட்சித் தலைவர் அஜித் சிங், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உட்பட பலர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர்.


        நண்பகல் 12.23 மணிக்கு விழா மண்டபத்துக்கு ஜெயலலிதா வந்தார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் பட்டியலில் இடம்பெற்ற 33 எம்.எல்.ஏ.,க்களும் ஜெயலலிதாவுடன் மேடையில் அமர்ந்தனர். கவர்னர் பர்னாலா 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா வரவேற்றார். பின், புதிய அமைச்சர்கள் ஒவ்வொருவரின் பெயரை குறிப்பிட்டு, கவர்னரிடம் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.


        பின், நாட்டுப்பண் சுருக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இதையடுத்து, 12.45 மணிக்கு தமிழக முதல்வராக ஜெயலலிதா மூன்றாம் முறையாக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு படிவத்தில் 12.56 மணி 57 வினாடிகளுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டார். பின், அமைச்சர்களாக 33 பேர் பதவியேற்றனர். பதவியேற்றோருக்கு, கவர்னர் பர்னாலா கைகொடுத்து வாழ்த்தினார்.மதியம் 1.47 மணிக்கு தேசிய கீதத்துடன் விழா முடிந்ததும், கவர்னர் முதலில் புறப்பட்டார். அவரை வழியனுப்பிய ஜெயலலிதா, மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அனைவரும் ஜெயலலிதாவுக்கு சால்வைகள் போட்டு வாழ்த்து தெரிவித்தனர்.


        விழாவில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, ஐகோர்ட் நீதிபதிகள், பல்கலை துணைவேந்தர்கள் திருவாசகம், மன்னர் ஜவகர், டாக்டர் மயில்வாகனன், பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சி என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், முன்னாள் டி.ஜி.பி.,க்கள் லஷ்மி நாராயணன், நடராஜ், தேவாரம் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

        நிகழ்ச்சிகளை தலைமைச் செயலர் மாலதி தொகுத்தளித்தார்.



        நன்றி

        8.5.11

        தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள்...தேர்தலில் ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள்...

        சட்டசபை தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள் மற்றும் ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள் குறித்து ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களிடம் தேர்தல் கமிஷன் "அதிரடி" கருத்துக்களை கேட்டு வருகிறது. 

        தமிழகத்தில் கடந்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

        இதற்கிடையில் கடந்த 13ம் தேதி நடந்த சட்டசபை தேர்தல் பணி குறித்து அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகளில் இதற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இந்த கருத்துக்களை தெரிவிக்கும் ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர்களின் பெயர், பதவி, ஓட்டுச் சாவடி எண், சட்டசபை தொகுதி, மாவட்டம் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.


        தேர்தல் பணியில் பிரச்னைகள்

        "தேர்தல் பணியில் நேரடியாக பாதித்த பிரச்னைகள்" என்ற தலைப்பில் 
        • ஓட்டுப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டது, 
        • அலுவலர்களின் விபரங்கள் அடங்கிய தகவல் அமைப்பு உருவாக்கியது
        • தேர்தல் பணி ஆணைகள் வழங்கிய விதம், 
        • பயிற்சி முறைகள் மற்றும் அதற்கான சாதனங்கள் மற்றும் கையேடுகள் வழங்கிய விதம், 
        • ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட விதம், 
        • மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்த விதம்
        • தபால் ஓட்டுக்கான படிவம் 12 வழங்கியது மற்றும் படிவம் திரும்ப பெறப்பட்டது 
        • தபால் ஓட்டுச் சீட்டு அனுப்பிய விதம், 
        • தேர்தல் பணி நியமன ஆணை வழங்கியது 
        • 3வது பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட விதம், 
        • ஓட்டுச் சாவடியில் உணவு, குடிநீர், கழிப்பறை, மின்வசதி மற்றும் பிற வசதிகளின் விபரம் 
        குறித்தும் தகவல்கள் கேட்கப்படுகிறது.

        இந்த அனைத்து தகவல்களும் மிக நன்று, நன்று, பரவாயில்லை, மோசம் என 4 வகையான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விபரம் சேகரிக்கப்படுகிறது. இந்த விபரங்களுடன் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அதனையும் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


        ஓட்டுப்பதிவை அதிகரிக்க...:

        ஓட்டுப்பதிவன்று ஓட்டுப்பதிவை மேம்படுத்த கூடிய அம்சங்கள் என்ற தலைப்பில் 
        • ஓட்டுச் சாவடி நிலை அலுவலரால் நடத்தப்பட வேண்டிய வாக்காளர் உதவி மையம் ஓட்டுப்பதிவு தினத்தன்று இயங்கியதா, 
        • வாக்காளர் சீட்டு வழங்கியது ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உதவியாக இருந்ததா, 
        • ஓட்டுப்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை உள்ளது என்பதை அறிவீர்களா,
        • ஓட்டுச் சாவடியில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை இருந்ததா
        • ஓட்டுப்பதிவின் போது மாற்றுத் திறனாளிகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்ற அறிவீர்களா, 
        • ஓட்டுச் சாவடியில் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டதா, 
        • மூத்த குடிமக்கள்/மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கனவே ஓட்டுச் சாவடியில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளை விட இன்னும் அதிக வசதிகள் தேவையா, 
        • ஆம் எனில் என்னென்ன வசதிகள் வேண்டும். 
        • பார்வையற்ற வாக்காளர்கள் எத்தனை பேர் தங்களது ஓட்டுச் சாவடியில் ஓட்டு போட்டனர், 
        • அவர்களில் எத்தன பேர் பிரெய்லி வசதியை பயன்படுத்தினர், 
        • ஓட்டுச் சாவடி முகவர்கள் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு நெருக்குதல், இடையூறு ஏதும் கொடுத்தார்களா, 
        •  ஆம் எனில் அதனை எவ்வாறு எதிர்கொண்டீர்கள், 
        • ஓட்டுச் சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததா, 
        • இக்கேமரா ஓட்டுப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவியதா, 
        • இல்லை எனில் காரணம், 
        • ஓட்டுச் சாவடியில் நுண் பார்வையாளர்கள் ஓட்டுப்பதிவில் ஆள் மாறாட்டத்தை தடுக்க உதவினார்களா, 
        • இல்லை எனில் காரணம்  
        • ஓட்டுச் சாவடியில் மிக முக்கிய நபர்கள் ஓட்டு போடும் போது பிரச்னைகளை எதிர்கொண்டீர்களா, 
        • ஓட்டுப்பதிவின் போது பத்திரிக்øயாளர்கள்/புகைப்படகாரர்கள் முறையாக நடந்து கொண்டனரா, அறிவுரைகளை பின்பற்றினார்களா, 
        • தேர்தல் பணிக்கு வழங்கப்பட்ட ஊதியம், மதிப்பூதியம் போதுமானதாக இருந்ததா, 
        • இந்த ஊதியம் தாமதமில்லாமல் வழங்கப்பட்டதா, 
        • 49 "O" குறித்து விபரம், 
        • ஆய்வுக்குரிய ஓட்டுச் சீட்டுகள் குறித்த விபரம் 
        போன்ற கேள்விகளும் கேட்கப்படுகிறது. 
        இந்த கேள்விகள் அனைத்தும் ஆம், இல்லை என இரு வகையான விடைகள் அளிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான காரணங்களை தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


        மொத்தத்தில் ஓட்டுப்பதிவின் போது உங்களது பணி அனுபவம் குறித்தும் விபரம் கேட்கப்படுகிறது. இதில் மிக நன்று, நன்று, பரவாயில்லை, மோசம் என 4 வகையான விடைகள் தரப்பட்டு மோசம் எனில் காரணம், ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்பின் மூலம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து மதிப்பிடப்பட்டு வருங்காலத்தில் ஓட்டுப்பதிவின் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும், ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து உரிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

        நன்றி

        ஒரு லட்சத்து 46 ஆயிரம் தபால் ஓட்டுகள் யாருக்கு?

        தேர்தல் பணியில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தும், தபால் ஓட்டுகளை போட, 1 லட்சத்து, 46 ஆயிரம் பேர் தான் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். அதுவும், நகர்ப்புறங்களில், தபால் ஓட்டுப் போட, அரசு ஊழியர்களிடையே ஆர்வமில்லை. கிராமப்புற தொகுதிகளில் தான், அதிகளவு ஊழியர்கள், தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர்.


        தமிழக சட்டசபை தேர்தலில், 2 லட்சத்து, 88 ஆயிரம் அரசு ஊழியர்கள், 66 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பல ஆயிரம் போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டிருந்ததால், இவர்களுக்கென, அவர்கள் வசிக்கும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தபால் ஓட்டுப் போட, அந்தந்த துறைகள் மூலம், ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.இது தவிர, ராணுவத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தபால் ஓட்டுப் போட, ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இதில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், போலீசார், முன்னாள் ராணுவத்தினர் என, மொத்தம், 1 லட்சத்து, 46 ஆயிரத்து, 255 பேர் தான் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர்.அதேபோல, ராணுவ வீரர்களில், 65 ஆயிரத்து, 274 பேர் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். தடுப்பு காவல் கைதிகளில், 51 பேர், தமிழகம் முழுவதும் தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். இதன்படி, மொத்தம், 2 லட்சத்து, 11 ஆயிரத்து, 580 தபால் ஓட்டுச்சீட்டுகள் இந்த தேர்தலில் வழங்கப்பட்டுள்ளன.


        இதில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகர்ப்பகுதிகளில், தபால் ஓட்டுப் போட, அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் அதிகபட்சமாக, கொளத்தூர் தொகுதியில் தான், 574 பேர் தபால் ஓட்டுச்சீட்டுகளை பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகளில், மிக குறைவான அளவிலேயே பெற்றுள்ளனர்.அதிகபட்சமாக, தஞ்சாவூர் தொகுதியில், 1,714 பேர், ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, பாளையங்கோட்டை தொகுதியில், 1,690 பேர் பெற்றுள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியான சோழிங்கநல்லூரில், வெறும், 81 பேர் தான், தபால் ஓட்டுப் போட விருப்பம் தெரிவித்துள்ளனர்.


        விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில், ஒன்றில் கூட, ஒருவர் கூட தபால் ஓட்டுச் சீட்டு பெறவில்லை. இங்குள்ள ஊழியர்களுக்கு சரியான முறையில் ஓட்டுச்சீட்டுகள் வினியோகிக்கப்படவில்லையா அல்லது ஒட்டுமொத்த ஊழியர்களும் தபால் ஓட்டுகளை புறக்கணித்துள்ளனரா என தெரியவில்லை.ராணுவ வீரர்களை பொறுத்தவரை, வேலூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக, 12 ஆயிரத்து, 498 பேர், தபால் ஓட்டுப் போட முன்வந்துள்ளனர். இதில், கே.வி.குப்பம் தொகுதியில், 2,299 பேரும், அணைக்கட்டு தொகுதியில், 1,973 பேரும், காட்பாடி தொகுதியில், 1,961 பேரும் தபால் ஓட்டுச் சீட்டுகளை பெற்றுள்ளனர். ராணுவ வீரர்களில் மிகக் குறைந்த அளவாக திருப்போரூர் தொகுதியில், ஏழு பேர் மட்டும் பெற்றுள்ளனர்.அரசு ஊழியர்களில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், 8,117 பேர் ஓட்டுச் சீட்டு பெற்றுள்ளனர். பொதுவாக, தேர்தல்களில், ஒரு தரப்புக்கு சாதகமாகவோ, எதிராகவோ அலை வீசாத நிலையில், கடும் போட்டி நிலவினால், தபால் ஓட்டுகள், அதிக தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன. பெரும்பாலான தொகுதிகளில், தபால் ஓட்டுகள் தான் முதலில் எண்ணப்படும். சில தொகுதிகளில், கடைசியாக எண்ணப்படுவதுண்டு.


        கடந்த, 2006 தேர்தலில், பா.ம.க., வேட்பாளர் வேல்முருகனை விட, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன், இறுதிச் சுற்றில், 16 ஓட்டுகள் முன்னணி பெற்றிருந்தார். அ.தி.மு.க., தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தனர். ஆனால், கடைசியாக தபால் ஓட்டு எண்ணப்பட்டதில், ராஜேந்திரனுக்கு, 33 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. பா.ம.க., வேல்முருகனுக்கு, 197 ஓட்டுகள் கிடைத்தது. இதனால், 148 ஓட்டு வித்தியாசத்தில், வேல்முருகன் வெற்றி பெற்றார்.


        இதேபோல, பொங்கலூர் தொகுதியில், அ.தி.மு.க., அமைச்சர் தாமோதரன், 57 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மதுரை கிழக்கு தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையின் போது, இறுதிச் சுற்றில் ம.தி.மு.க., வேட்பாளர் பூமிநாதன், 80 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். தபால் ஓட்டுகளை எண்ணியதில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் நன்மாறனுக்கு, 157 ஓட்டுகளும், பூமிநாதனுக்கு, 77 ஓட்டுகளும் கிடைத்தது. நன்மாறன் வெற்றி பெற்றார்.இந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதால், வெற்றி பெறும் வேட்பாளர், குறைந்த ஓட்டு வித்தியாசமே பெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் மிகவும் முக்கியத்துவம் பெறும். ஆனால், தபால் ஓட்டுப் போட தகுதியுள்ள அரசு ஊழியர்களில் பாதியளவுக்கும் மேலானவர்கள், ஓட்டுச்சீட்டுகளையே பெறாததால், யாருக்கு பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
        நன்றி

        சமச்சீர் கல்வி முறையில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை ஒதுக்க கோரிக்கை

        சமச்சீர் கல்வி முறையில் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

        பள்ளிகளில் தமிழ், அறிவியல் போல சமூகஅறிவியல் பாடமும் கற்பிக்கப்படுகிறது. இதில் வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் பாடங்கள் உள்ளன. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை இப்பாடம் கற்பிக்க 5 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இது குறைவாக உள்ளது. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென, சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

        தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு வாரம் 7 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றைவிட கூடுதல் பாடங்கள் சமூக அறிவியல் பாடத்தில் உள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறையில், சமூக அறியவிலில், வரலாறு பாடத்தில் பொருளாதாரமும், குடிமையியலில் சட்டம் குறித்தும் கூடுதலாக பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பாடங்கள் பளு அதிகரித்துள்ளது. இவை தவிர இணைப்பு பாடத்தோடு வரைபடங்கள் (மேப்), காலக்கோடு, சுகாதாரம், களப்பணி ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.

        தமிழ்ப் பாடத்திற்கு ஆரல், ஓரல் தேர்வு உள்ளது. அறிவியல் பாடத்தில் இந்த ஆண்டு செய்முறை தேர்வும் இடம்பெற உள்ளது. இதனால் மதிப்பெண் பெறுவது எளிதாகிறது. ஆனால் சமூக அறிவியல் பாடத்திற்கு இந்த வாய்ப்பு இல்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு சமூக அறிவியல்தான் அடித்தளமாக உள்ளது. அப்படி இருக்கையில் இதை புறக்கணிக்கும் வகையில் குறைந்தளவில் பாடவேளை ஒதுக்குவதை ஏற்க முடியாது என்கின்றனர் ஆசிரியர்கள். 

        சமூக அறிவியல் பாடத்திற்கு கூடுதல் பாடவேளை கேட்டு, பள்ளிக் கல்வி சமூக அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் 2009, அக்டோபரிலேயே முதல்வரின் தனிப்பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டு, பள்ளிக் கல்வி இயக்குனருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை இல்லை. 

        இதையடுத்து அந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் கூறுகையில், "சமச்சீர் கல்வி முறையிலாவது கூடுதல் பாட வேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றார்.

        நன்றி


        அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

        இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
        • கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாயமாக கல்வி பெற உரிமை உண்டு. 
        • ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேராமலோ அல்லது இடையில் நின்றிருந்தாலோ, அன்றைய வயதுக்கேற்ப வகுப்பில் சேரலாம். 
        • சேர்க்கையின்போது மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. 
        • நுழைவுத்தேர்வு போன்ற எவ்வித பரிசீலனைக்கும் உட்டுபடுத்தக்கூடாது. 
        • வயது சான்றிதழ் இல்லாத நிலையில் அதை காரணமாகக்கூறி சேர்க்கை மறுக்கக்கூடாது. 
        • சேர்க்கைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்திருந்தாலும் தாமதமாக வரக்கூடியவர்களை பள்ளியில் சேர்க்கலாம் 
        என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

        நன்றி

         

        பள்ளி துவங்கியவுடன் இலவச பஸ் பாஸ்

        கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கிய ஒரு வாரத்திற்குள், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தர, அரசு உத்தரவிட்டுள்ளது. 

        பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விபரம், பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை (2), தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வித்துறைக்கு, பள்ளி துவங்கிய உடன் வழங்க வேண்டும். போக்குவரத்து துறைக்கு இவ்விபரம் அனுப்பப்பட்டு, ஒரு வாரத்திற்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
        நன்றி

         

        கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தமுதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம்

        தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் மே 11 ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.

        மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தினை கடந்த கல்வியாண்டு அறிமுகம் செய்தது. 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதனை அமல் படுத்த பள்ளி கல்வித்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மே 11 ல் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

        14 வயது நிரம்பிய அனைவருக்கும் கற்பிக்க என்ன நடவடிக்கை எடுப்பது. எப்படி செயல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்படவுள்ளது. சமச்சீர் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும், மே 20 க்குள் பத்தாம் வகுப்பு "ரிசல்ட்' வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

        நன்றி

         

        1.5.11

        கல்விக்கு ஒதுக்கிய நிதி முழுவதும் வழங்கவில்லை


        மத்திய அரசு, 11வது ஐந்தாண்டு திட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கிய நிதியை, முழுவதும் வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
        11வது ஐந்தாண்டு திட்டத்தில் சமூக துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலத்திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. சுகாதாரம், கல்விக்கு 60 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. இந்த திட்டம், 2012ம் ஆண்டில் முடிவடைகிறது. 

        சுகாதார துறைக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில், 75 ஆயிரத்து 533 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது. கல்விக்கு ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரத்து 600 கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 659 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது.

        எனவே, '12வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திட்ட கமிஷன் வலியுறுத்தி உள்ளது. 

        நன்றி


        மதுரை காமராஜ் பல்கலை பி.எட்., செய்முறை தேர்வு

        மதுரை காமராஜ் பல்கலையில் தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் 1995 -96 ம் ஆண்டும், அதற்கு முன்பு பி.எட்., படிப்பில் சேர்ந்தவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.
         
        தொலைநிலைக் கல்வி இயக்குனர் தனிக்கொடி அறிக்கை:
        1995 -96 மற்றும் அதற்கு முன்பும் பி.எட்., பட்டப்படிப்பில் சேர்ந்து, பயின்று வந்த பழைய மாணவர்களின் அனைத்து பாடங்களின் எழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, வளாக பயிற்சியிலும், செய்முறை தேர்விலும் கலந்து கொள்ளாத அல்லது செய்முறைத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்காக, வளாக பயிற்சி மற்றும் செய்முறைத் தேர்வு வரும் ஜூனில் மதுரை மையத்தில் நடைபெறும். விபரங்களுக்கு ஏப்., 16க்குள் இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது. 

        நன்றி



        பிரபலமான இடுகைகள்

        தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்