தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.5.11

அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாயமாக கல்வி பெற உரிமை உண்டு. 
  • ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேராமலோ அல்லது இடையில் நின்றிருந்தாலோ, அன்றைய வயதுக்கேற்ப வகுப்பில் சேரலாம். 
  • சேர்க்கையின்போது மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. 
  • நுழைவுத்தேர்வு போன்ற எவ்வித பரிசீலனைக்கும் உட்டுபடுத்தக்கூடாது. 
  • வயது சான்றிதழ் இல்லாத நிலையில் அதை காரணமாகக்கூறி சேர்க்கை மறுக்கக்கூடாது. 
  • சேர்க்கைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் முடிவடைந்திருந்தாலும் தாமதமாக வரக்கூடியவர்களை பள்ளியில் சேர்க்கலாம் 
என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நன்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்