தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.6.11

குறைபாடுகளை களைவதற்காகவே சமச்சீர் கல்வி அமல்படுத்துவது தள்ளிவைப்பு

"சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு விரும்புகிறது. சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. 

சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்து, தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது. பின், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாடத்திட்டங்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும், அக்குழு தனது அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன்பின் ஒரு வாரத்துக்குள் பிரதான வழக்கை ஐகோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஐகோர்ட்டில் பள்ளி கல்வித் துறை செயலர் சபிதா தாக்கல் செய்த பதில் மனு
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவானது, இரவு பகலாக பணியாற்றி வருகிறது. பாடத்திட்டங்களை இக்குழு ஆய்வு செய்கிறது. ஜூலை 5ம் தேதிக்கு முன் அறிக்கையை குழு தாக்கல் செய்த பின், மனுவில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு அவசியம் இருக்காது. சமச்சீர் கல்வியை அரசு கைவிடவில்லை. பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, தரமான கல்வியைத் தர வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்களை விரிவாக ஆய்வு செய்கிறது. 

திருத்தச் சட்டமானது, சமச்சீர் கல்வியை எப்போது அமல்படுத்துவது என்பதை முடிவு செய்ய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. முந்தைய அரசு நியமித்த மாநில குழுவானது, சட்டத்தில் கூறியுள்ளபடி அமைக்கப்படவில்லை. எனவே, இது சட்டத்தை மீறியதாகும். மத்திய சட்டத்துக்கு இணையாக மாநில அரசு சட்டம் இருக்க வேண்டும். ஆனால், முந்தைய அரசு அமைத்த குழுவானது, மத்திய சட்டப்படி இல்லை. எனவே, இந்தச் சட்டத்தை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த முடியாது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டிய தேவை உள்ளது. 

பாடத்திட்டங்கள், பாடப் புத்தகங்கள் தரமாக இல்லை என்கிறபோது, சமச்சீர் கல்விச் சட்டத்தை அமல்படுத்துவதை தள்ளி வைப்பது தவிர, அமைச்சரவைக்கு வேறு வழியில்லை. அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. பாடத்திட்டம் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. எனவே, அரசு எடுத்த முடிவில் அடிப்படையில்லை என்கிற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. பல்வேறு குறைபாடுகள் இருந்ததால், சமச்சீர் கல்விச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. 

அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களை அரசு அழித்து விடவில்லை. சமச்சீர் கல்வித் திட்டத்தின்படி, ஆறு கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுவது தவறு. மாணவர்களின் நலன்களை இந்த அரசு முக்கியமான கவனத்தில் கொண்டுள்ளது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு விரும்புகிறது. சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைவதற்காக, அதை அமல்படுத்துவதை தள்ளி வைத்துள்ளோம். சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். 

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி


ஓய்வுக்குப் பின் பணிக்கொடையில் பிடித்தம் செய்வது ஏற்கத்தக்கதல்ல: ஐகோர்ட் கிளை உத்தரவு

"சம்பள உயர்வு நிர்ணயித்ததில் ஏற்பட்ட தவறுக்காக, அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின், பணிக்கொடையில் பிடித்தம் செய்வது ஏற்கத்தக்கதல்ல' என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
 
தேனியைச் சேர்ந்த கருப்பையா தாக்கல் செய்த ரிட் மனு: பொதுப்பணித்துறையில் கனரக இயந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து, 2009ல் ஓய்வு பெற்றேன். 1996ல், எனக்கு சம்பள உயர்வு தவறாக நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறி, 21 ஆயிரத்து 306 ரூபாயை பணிக்கொடையில் பிடித்தம் செய்ய, பொதுப் பணித்துறை நிர்வாக பொறியாளர் உத்தரவிட்டார். இதுகுறித்து என்னிடம், விளக்கம் பெறவில்லை. சம்பள உயர்வு நிர்ணயித்ததில் எனக்கு பொறுப்பு இல்லை. நிர்வாக பொறியாளர் உத்தரவை ரத்து செய்து, பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணை செய்த நீதிபதி கே.வெங்கட்ராமன், "சம்பள உயர்வு நிர்ணயித்ததில் ஏற்பட்ட தவறுக்காக, அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின், பணிக்கொடையில் பிடித்தம் செய்வதை ஏற்க முடியாது. நிர்வாக பொறியாளர் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பிடித்தம் செய்த தொகையை நான்கு வாரங்களுக்குள், மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்" என்றார்.

நன்றி


கூடுதல் கல்வி தகுதிக்கு வழங்கிய ஊக்கத்தொகையை பிடித்தது தவறு

கூடுதல் கல்வி தகுதிக்காக ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்தது தவறு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
 
நெல்லை கீழப்பாவூரை சேர்ந்த ஆசிரியர் சுப்ரமணியன் தாக்கல் செய்த ரிட் மனு

நான் 1997ல் எம்.எட்., 1999ல் எம்.ஏ., முடித்தேன். என் கூடுதல் கல்வி தகுதிக்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 2004ல் தணிக்கையின் போது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது தவறு என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1997 முதல் 2000 ம் வரை வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை பிடித்தம் செய்ய கல்வி துறையினர் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், "போலி ஆவணங்கள், பொய் தகவல்களை தெரிவித்து ஊக்கத்தொகை பெற்றால், அதை ரத்து செய்யலாம். கூடுதல் கல்வி தகுதிக்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகை, ஆசிரியர்களது கல்வி தகுதியை மேலும் அதிகரிக்க செய்யும். மனுதாரர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கல்வி துறையினர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.


நன்றி



குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

"குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி குறித்த விதிமுறைகளை ஆறு வாரங்களில் இறுதி செய்து தமிழக அரசு வெளியிட வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.சத்தியசந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: 
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை, 2009ம் ஆண்டே அமலுக்கு வந்துவிட்ட பின்னும், இதுவரை தமிழக அரசு அதற்கான விதிமுறைகளை வகுக்கவில்லை என்பது தான் மனுதாரரின் குறை. கடந்த டிசம்பரிலேயே நகல் வரைவு விதிகள் தயாராகி விட்டதாகவும், அதை அரசு இறுதி செய்யவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்தார். வரைவு விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என, அரசு பிளீடர் தெரிவித்துள்ளார். எனவே, ஆறு வாரங்களுக்குள் விதிகளை இறுதி செய்து அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது. 

ஐகோர்ட்டில் வக்கீல் சத்தியசந்திரன் தாக்கல் செய்த மனு: குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை பெறும் சட்டத்தின்படி, ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு வகுத்து, கெஜட்டில் வெளியிட்டுவிட்டது. ஆந்திரா, கோவா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களும் விதிகளை வகுத்து வெளியிட்டுவிட்டன. கடந்த டிசம்பரில் தமிழக அரசு, நகல் வரைவு விதிகளை வகுத்தது; பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கோரியது. விதிகளை இறுதி செய்து அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இந்த கல்வியாண்டிலாவது அதை அமல்படுத்தியிருக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும். சட்டப்படி, விதிமுறைகளை வகுத்து வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி


அரசு ஊழியர்களுடன் நல்லுறவு: வதந்திகளை நம்பாதிருக்க யோசனை

அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், இந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், வதந்திகளை நம்பவேண்டாமென்றும் உத்தரவாதம் அளித்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர், பணியாளர் நலத்துறை செயலர் அழைத்துப் பேசினர். இதில், தலைமைச் செயலக சங்கம், "சி அண்டு டி' பிரிவு ஊழியர்கள் சங்கம், என்.ஜி.ஓ., சங்கம் உட்பட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, "அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த அரசு, ஊழியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறது' என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

"முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஈட்டு விடுப்பு எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும். சனிக்கிழமைகளை பணி நாளாக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். எவ்வித எதிரான நடவடிக்கையை எடுக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் இந்த கருத்தை தங்களது சங்கத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்கள் நன்றாக செயல்பட்டால் தான், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும், அரசு ஊழியர்கள், இந்த அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். 

அரசு ஊழியர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கைகள் பற்றி இன்னொரு நாளில் பேசலாம் என்றும், சலுகைகள் குறித்து பட்ஜெட் சமயத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினர். ஊழியர் சங்க நிர்வாகிகளும், தங்களுக்கு இந்த அரசு மீது எவ்வித கசப்புணர்வும் இல்லை என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளித்தனர்.

நன்றி


28.6.11

சமச்சீர் கல்வி விவகாரம்: விரைவில் அறிக்கை தாக்கல்

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து ஆராய, தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, இந்த வார இறுதிக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

நிபுணர் குழு, தலைமைச் செயலகத்தில் பல சுற்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. மாநில பாடத்திட்டம், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உள்ளிட்டவற்றையும், முந்தைய அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தையும் விரிவாக ஆய்வு செய்துள்ளது. இதையடுத்து, அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாளில், நிபுணர் குழுவின் இறுதிக்கட்ட கூட்டம் நடக்கிறது. அதில், அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதன்பின், இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய, நிபுணர் குழு திட்டமிட்டுள்ளதாக, அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முந்தைய தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி, அ.தி.மு.க., அரசு நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்த வழக்கில், கடந்த 15ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கடந்த 17ம் தேதி, தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில், எட்டு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இக்குழு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்து, ஜூலை 6ம் தேதிக்குள், சென்னை ஐகோர்ட்டில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று, முதல்வர் தெரிவித்திருந்தார்.

நன்றி


"நமது மாவட்டத்தை நாம் அறிவோமே': பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க "டிவிடி"

மாவட்ட தகவலை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் , "நமது மாவட்டத்தை நாம் அறிவோமே' என்ற தலைப்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அரசால் "டிவிடி' வழங்கப்பட்டு உள்ளது.
 
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இணைவிப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பொது அறிவு, தனித்திறனை வளர்க்கும் விதமாக ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். 

தமிழக அரசின் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் சார்பில் ஒவ்வொரு மாவட்டம் பற்றி"நமது மாவட்டத்தை நாம் அறிவோமே" என்ற தலைப்பில் படத்தொகுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் "டிவிடி" அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பி உள்ளது. இதையும் மாணவர்களுக்கு கற்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அந்தந்த மாவட்ட முக்கிய தகவல்கள், சுற்றுலா தலங்கள், கோயில்கள், தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு விபரங்கள் அடங்கியுள்ளன. இதை கண்காணிக்க முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், வகுப்புகளில் மாணவர்கள் எதுவும் கற்காமல் வெறுமனே அமர்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி


தமிழாசிரியர் பதவி உயர்வு பட்டியல்

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து, (பி.டி.,) தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 699 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு எதுவும் தெரியவில்லை. சமச்சீர் கல்வி பிரச்னைக்கு முடிவு வந்த பின்பே கவுன்சிலிங் நடக்க வாய்ப்பு உள்ளதென கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி:


26.6.11

டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்: எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு

பள்ளிகளில் டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்களை கற்பிக்கவும், நாடகம், வில்லுப் பாட்டுகள் நடத்தவும் எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 

தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளில் எந்த பாடத் திட்டம் என்பது தொடர்பாக குழப்பம் நீடிப்பதால் பாட புத்தகங்கள் இல்லாமலேயே வகுப்புகள் நடந்து வருகிறது. எனினும், குழந்தை மைய இணைப்பு பயிற்சி மூலம் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள், ஆசிரியர்கள் விபரம், கால அட்டவணை, டி.வி சி.டிக்கள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து பள்ளி பார்வையும் நடத்தப்பட்டு இதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தை மைய இணைப்பு பயிற்சி தொடர்பாக எஜூசாட் மூலம் வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை நேற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. இதனை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் நடத்தினார்.
 
இதில் குழந்தை மைய இணைப்பு பயிற்சி, கால அட்டவணை தவிர பிற வசதிகளை பயன்படுத்தி பள்ளிகளில் வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டது. புத்தக பூங்கொத்து திட்டத்தின் கீழ் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்பட்ட புத்தகங்கள் மூலம் வினாடி வினா, கதை கூறுதல், விவாதம் நடத்துதல், குழு விவாதம், நாடகம், வில்லுப்பாட்டு, தானே கற்றல் கணித உபகரண பெட்டி பயன்படுத்தி கணித பாட அடிப்படை செயல்பாடுகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பள்ளிகளில் டிவி, டி.வி.டி பிளேயர், சி.டிக்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் பயன்படுத்தி "ஹலோ இங்கிலீஷ்', சிம்பிள் இங்கிலீஷ், பன் வித் இங்கிலீஷ் போன்ற கேசட்கள் மூலம் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், கம்ப்யூட்டர வழி கல்வியை தீவிரப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும், மாணவர்களை அருகில் உள்ள இடங்களுக்கு கள ஆய்வு அழைத்து சென்று வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்லுதல், போஸ்ட் ஆபீஸ் மற்றும் பிற அலுவலகங்களுக்கு அழைத்து சென்று செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது. எழுத்து பயிற்சி, பேச்சு பயிற்சி, வாசிப்பு பயிற்சியை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 

இப்பணிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

நன்றி


மக்கள்தொகை கணக்கெடுப்பு மதிப்பூதியம் வழங்க அனுமதி

மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான பணிகள், கடந்த 2010 ஜூன் முதல் துவங்கியது. முதற்கட்டமாக வீட்டு பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்தன. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த பிப்., 9 முதல் பிப்., 28 வரை நடந்தது. 
 
இப்பணியில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தலா 4,050 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. இத்தொகை கிடைக்காதவர்கள், மாவட்டங்களில் செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நன்றி:


அரசு ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் நீடிப்பு : அடுத்த ஆண்டு புது நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பொதுமக்களுக்கான, "கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம்' நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம், அடுத்த ஆண்டு ஜூன் வரை தொடர உள்ளது. அதற்குள், டெண்டர் விடப்பட்டு, புதிய காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யப்படும். 

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே, "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சுகாதார நிதி திட்டம்' என்ற திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2008ல், "புதிய மருத்துவ காப்பீடு திட்டம்' என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக, பழைய சுகாதார திட்டம் நிறுத்தப்பட்டது. புதிய திட்டத்துக்காக விடப்பட்ட டெண்டரில், "ஸ்டார் ஹெல்த் அண்டு அலைய்டு இன்சூரன்ஸ் கம்பெனி' குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்தபடியாக விலை குறிப்பிட்டிருந்த, "ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தையும் அழைத்து அரசு பேசியது. இறுதியில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமே இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டது. 

இதன்படி, ஆண்டுக்கு 495 ரூபாய் பிரீமியமாக நான்கு ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். இதுதவிர, சேவை வரியை செலுத்த வேண்டும். இதற்காக, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போன்றோர் இதில் கண்டிப்பாக சேர உத்தரவிடப்பட்டது. ஊழியர்களிடம் இருந்து மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. மீதத் தொகை மற்றும் 12.5 சதவீத சேவை வரியை அந்தந்த துறையே செலுத்த வேண்டும்.

ஊழியரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் (திருமணமாகும் வரை அல்லது வேலையில் சேரும் வரை அல்லது 25 வயது வரை), திருமணமாகாத ஊழியரின் பெற்றோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.
மொத்தமாக நான்கு ஆண்டுகளில், 2 லட்சம் ரூபாய்க்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மருந்துகள், அறுவை சிகிச்சை, டாக்டர் கட்டணம், தங்கும் அறை கட்டணம் உட்பட பல்வேறு மருத்துவ செலவுகளுக்கு இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இத்திட்டம் 2008ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே, அதுவரை, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனமே இத்திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உயரதிகாரி ஒருவர் கூறும் போது, "அடுத்த ஆண்டு, தமிழக அரசு டெண்டர் விட உள்ளது. அதில், புதிய மருத்துவ காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூன் முதல் புதிய நிறுவனம் மூலம், இத்திட்டம் தொடர உள்ளது. எக்காரணம் கொண்டும் திட்டம் நிறுத்தப்படாது' என்றார். இதே ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செயல்படுத்தி வரும், பொதுமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை புதிய அரசு நிறுத்தியுள்ளது. இதனால், தங்களுக்கும் இத்திட்டம் நிறுத்தப்படும் என்ற அச்சம் அரசு ஊழியர்களிடையே நிலவியது. ஆனால், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு என கணக்கிட்டு, பிரீமியம் செலுத்தப்பட்டு வருவதால், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை நிறுத்த தமிழக அரசு விரும்பவில்லை.

எனினும், பொதுமக்களுக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு குடும்பம் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். தற்போது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே செலுத்திய பிரீமியத் தொகையில், இந்த மாதம் வரையிலான காலத்தைக் கழித்துவிட்டு, மீதத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், நிறுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு பதிலாக, விரைவில் புதிய காப்பீடு திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

நன்றி


ஆசிரியைக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு: ஐகோர்ட் உத்தரவு

மதுரையை சேர்ந்த ஆசிரியைக்கு முன் தேதியிட்டு தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க, அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

மதுரையை சேர்ந்த அலமேலு தாக்கல் செய்த ரிட் மனு
சேடப்பட்டி ஒன்றியத்தில் 1988 ஜூலை 13ல் துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். 1992 ஜூன் 25ல் செல்லம்பட்டி யூனியனுக்கு இடம் மாற்றப்பட்டேன். எனக்கு முன், 1991 செப்., 11ல் வேறு யூனியனிலிருந்து செல்லம்பட்டிக்கு சரஸ்வதி என்பவர் மாற்றப்பட்டார். செல்லம்பட்டிக்கு நான் மாற்றப்பட்ட போது, தகுதி காண் பருவம் முடித்து, நிரந்தரமாக்கப்பட்டிருந்தேன். சரஸ்வதி நிரந்தரமாக்கப்படவில்லை. எனக்கு முன் மாற்றப்பட்டதை காட்டி, பதவி உயர்வு பட்டியலில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியராக 1998 செப். 9லிலும், பின், 2002 ஜூலை 21ல் நடுநிலை பள்ளி தலைமையாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். எனக்கு பின் பணியில் சேர்ந்த அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும். முன்தேதியிட்டு எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல்கள் திலீப்குமார், தர்மர் வாதிடுகையில், "பதவி உயர்வு பட்டியலை உதவி தொடக்க கல்வி அலுவலர், அனைத்து ஆசிரியர்களுக்கு அனுப்பும்படியும், அதன் மீது ஏதாவது ஆட்சேபனையிருந்தால் அதை சரி செய்து புதிய பட்டியல் வெளியிட இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அதை பின்பற்றவில்லை. பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்யவேண்டும்,'' என்றனர்.

நீதிபதி, "ஆவணங்களை பார்க்கையில் மனுதாரர் பெயர் சீனியாரிட்டி லிஸ்டில் இருந்துள்ளது. மனுதாரரை விசாரிக்காமல், பட்டியலில் மாற்றம் செய்துள்ளனர். அந்த பதவி உயர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 1998 செப்., 9 முதல் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர், 2007 செப்., 21ல் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கான சலுகைகளை வழங்க வேண்டும்,'' என்றார்.

நன்றி


ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நிரந்தர அலுவலர் நியமனம் : தேர்தல் கமிஷன் உத்தரவு

ஓட்டுச்சாவடிகளுக்கு, நிரந்தரமாக அலுவலர்களை நியமித்துக் கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் காலங்களில் மட்டுமே, வாக்காளர் அட்டை சரிபார்த்தல், வினியோகித்தல் போன்ற பணிகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செய்து வந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம், திருத்தம் பணிகள், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்தன. அங்கு பணிகள் மந்தமாக நடப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு தகவல் சென்றது. இதை தவிர்க்கும் பொருட்டு, வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

இதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலரும், பதிவேடு வைத்திருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கப்படும் சிறப்பு ஊதியத்தை விட, கூடுதலாக சம்பளம் வழங்குவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

நன்றி:


23.6.11

ஆசிரியர் கவுன்சிலிங் முன்னுரிமை: "ஸ்பவுஸ்' கட்டுப்படுத்த திட்டம்

ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
 
ஆசிரியர் கவுன்சிலிங், பலருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  •  ராணுவத்தில் பணிபுரிவோரின் கணவன், மனைவி, 
  • கண்பார்வை இல்லாதவர், 
  • விதவை,
  • 40 வயதுவரை மணமாகாத முதிர்கன்னி,  
  • மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல் துணையுடன் நடக்கக் கூடிய மாற்றுத்திறனாளி, 
  • இதய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர், 
  • மனவளர்ச்சி, உடல்நலம் குன்றிய குழந்தையின் பெற்றோர் 
போன்றவற்றின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

மேலும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கணவர், மனைவி, தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் (ஸ்பவுஸ்) சான்றிதழ் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் சலுகை பெற முடியும். பலர் செல்வாக்கை பயன்படுத்தி, ஆண்டுதோறும் விரும்பிய பள்ளிகளுக்கு இச்சான்றிதழ் மூலம் இடமாறுதல் பெற்று வருகின்றனர். 

கடந்தாண்டு, பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் 2009(எண் 148) அரசாணையின்படி, மாறுதலுக்கான கட்டுப்பாடுகள் கையாளப்பட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. "ஸ்பவுஸ்' முன்னுரிமையை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற உள்ளன. 

நன்றி



மாநில கல்வி அதிகாரி திடீர் ஆய்வு

உடுமலை பகுதியிலுள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 
அரசுப் பள்ளிகளில், ஒன்று மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியும், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7,8,9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு குழந்தைகள் மைய இணைப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மொழி, இலக்கணம், பொது அறிவு, விளையாட்டு முறையில் கணித பாடம் கற்பித்தல் போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. அறிவியல் பாடத்தில், சுற்றுச்சூழல் உள்நோக்கும் செயல்பாடுகள், பறவைகள், காலநிலை உள்ளிட்ட தலைப்புகளிலும், சமூக அறிவியல் பாடத்தில், பள்ளியினை முழுமையாக வரைந்து விளக்குவதும், புவியியலில் வரைபடம் வரைவது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் களப்பயணமாக அருகிலுள்ள மருத்துவமனை, தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


உடுமலையிலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் முறையாக வழங்கப்படுகிறதா என அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடுமலை கணபதிபாளையம் சீனிவாச வித்யாலயா நடுநிலைப்பள்ளிக்கு சென்று ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வி பாட முறையையும், மற்ற வகுப்புகளில், குழந்தைகள் இணைப்பு மைய பயிற்சி குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாணவர்களிடம் பாடங்கள் நடத்தும் முறையினை கேட்டறிந்தார். 

வெனசப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உடுமலை நெல்லுக்கடை வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். 

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ""பள்ளிகளில் அளிக்கப்படும் இணைப்பு மைய பயிற்சிகளை மாணவர்கள் கற்று வருகின்றனர். மாணவர்களை கள ஆய்வுக்கு அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.

நன்றி

 

இரவு, பகலாக பாடப் புத்தகங்கள் சிவகாசியில் மும்முரமாக தயாரிப்பு

சிவகாசியில் தயாராகும் பாடப் புத்தகங்கள் விவரங்களை, தினமும் அரசுக்கு அறிக்கை வழங்க, வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பழைய பாடத்திட்டப்படி புத்தங்கள் அச்சிடும் பணி, சிவகாசி, சென்னை அச்சகங்களில் நடக்கிறது. சிவகாசியில் 21 அச்சகங்களில், பத்தாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பிற்கான புத்தங்கள் அச்சிடும் பணி இரவு, பகலாக நடக்கிறது. இதற்காக, சிவகாசியில் மின் தடை ஏற்படாத வகையில், சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. சிவகாசியில் அச்சிடப்படும் பாடப் புத்தக விவரங்களை, அரசுக்கு தினம் அறிக்கையாக வழங்க, வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக, எத்தனை ஆயிரம் புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்ற விவரத்தை அனுப்பக் கூறியுள்ளனர். அதன்படி வருவாய் அலுவலர்கள், ஒவ்வொரு அச்சகத்திலும் விவரம் சேகரிக்கின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள், அச்சிடும் பணியை கண்காணித்த நிலையில், கோர்ட் உத்தரவிற்கு ஏற்ப, பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு விரைவாக வழங்க வேண்டும் என்பதற்காக, வருவாய் துறை அலுவலர்களையும், இப்பணியில் அரசு ஈடுபடுத்தி உள்ளது. 

சமச்சீர் பாடப் புத்தங்கள் தரமானதாக இல்லை என்பதால், பழைய பாட திட்டப்படி வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்தது. இதன் பிரச்னை கோர்ட்டுக்கு சென்றதால், கோர்ட் வழிகாட்டுதலில், கல்வியாளர் குழு தரும் அறிக்கையின்படி, மூன்று வாரத்திற்கு பின் தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி


சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நீக்கிய தாள்களை எரிக்க தடை

"சமச்சீர் கல்வி திட்ட வழக்கு முடிவடையும் வரை, பாடப்புத்தகங்களில் நீக்கிய தாள்களை, எரிக்கக் கூடாது" என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை செயலர் மூலம், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கு, ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில், "செம்மொழி மாநாடு' மற்றும் சில ஆட்சேபகரமான பகுதிகள், ஆசிரியர்களால் நீக்கப்பட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி, பள்ளி கல்வித் துறை செயலர், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு, நிலுவையில் உள்ளது. ஜூலை 15ம் தேதி, வழக்கு முடியும் வரை, பாடப்புத்தகங்களில் இருந்து தேவையற்றவை என்று ஒதுக்கப்படும் பொருட்கள் உட்பட, எந்த ஒரு பொருளையும் அகற்றவோ, எரிக்கவோ கூடாது"
எனக் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்பாசிரியர்கள், பாட வாரியாக பாடம் நடத்த வேண்டிய, 154 பக்கங்கள் கொண்ட, "இணைப்பு பயிற்சி" புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின் பேரில், வகுப்பாசிரியர்கள் அனைவரும் தவறாமல் இப்புத்தகத்தை, நகல் எடுத்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:


சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் இலவச சீருடை சற்று தாமதமாகும்

தமிழகம் முழுவதும், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்குவதற்காக, துணி தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கான சீருடை தயாரிக்கும் பணி துவங்கும். இந்த ஆண்டு தேர்தல் காரணமாக, துணிகள் தயாரிக்கும் பணி இம்மாதம் தான் துவக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் சீருடை தைக்கத் தேவையான துணிகளை தயாரிப்பதற்காக, நெசவாளர்களுக்கு நூல் வழங்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.

திருச்செங்கோடு, கரூர், சேலம், ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களிடம், துணி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீருடைக்காக 105 லட்சத்து 93 ஆயிரம் மீட்டர் துணி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துணி தயாரிக்கும் பணியை, செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம், சென்னை குறளகத்தில், கைத்தறி துணி நூல் துறை, துணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி அமலாக்க அலுவலர்களின் பணித்திறனாய்வு கூட்டம் நடந்தது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ரமணா தலைமை தாங்கினார். துறைச் செயலர் முத்துகுமாரசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், "உண்மையில் நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ள சங்கங்களிடம், சீருடை தைப்பதற்குத் தேவையான துணியை தயார் செய்யும் பணியை ஒப்படைக்க வேண்டும். சீருடைத் துணிகளை, எவ்விதத் தொய்வுமின்றி, உரிய காலத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வேட்டி சேலை உற்பத்தியை துவக்க, கைத்தறி, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களில், இப்பணியில் ஈடுபடும் தறிகளைக் கண்டறிந்து, ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், முதல் வகுப்பிலிருந்து, எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், சத்துணவு சாப்பிடுவோருக்கு, ஆண்டுதோறும் அரசு சார்பில் இலவச சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு, அரைக்கால் சட்டை மற்றும் சட்டை வழங்கப்படுகிறது.

முதல் வகுப்பிலிருந்து, 6ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, பாவாடை, சட்டை, 6ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு, தாவணி, ஜாக்கெட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 50 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஒரு சீருடை இலவசமாக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு காக்கி அல்லது நீல நிற டவுசர், மாணவியருக்கு நீலநிறப் பாவாடை அல்லது தாவணி வழங்கப்படுகிறது. இலவச சீருடைக்கு தேவையான துணிகளை தயாரிக்கும் பணி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தமிழ்நாடு துணி நூல் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். அவை, துணி தயாரிப்பதற்கு தேவையான நூல்களை, டெண்டர் மூலம் கொள்முதல் செய்கின்றன. பின்னர் நூல்களை, கைத்தறி துணி நூல் துறையின் கீழ் செயல்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு பிரித்து கொடுக்கின்றன.

கூட்டுறவு சங்க அதிகாரிகள், சங்கத்தில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு நூல்களை வழங்குவர். அதைக் கொண்டு நெசவாளர்கள் துணிகளை தயார் செய்வர். அதற்குரிய கூலி அவர்களுக்கு வழங்கப்படும். நெசவாளர்கள் நெய்து தரும் துணிகள், தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் பதப்படுத்தப்படும். சமூக நலத்துறையினர் பதப்படுத்தப்பட்ட துணிகளை வாங்கி, மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடை தயாரிப்பர். பின்னர் பள்ளிக் கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும். தற்போது மாணவ, மாணவியருக்கு சற்று தாமதமாக சீருடை கிடைத்தாலும், சீரான அளவில் தைக்கப்பட்டதாக, முறையாக ஒரே நேரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.


நன்றி



இணைப்பு பயிற்சி - ஏழாம் வகுப்பு - புவியியல் கட்டகம்

6.7th Geography Tamil

இணைப்பு பயிற்சி - ஏழாம் வகுப்பு - வரலாறு கட்டகம்

22.6.11

இணைப்பு பயிற்சி - ஏழாம் வகுப்பு - அறிவியல் கட்டகம்

4.7std-Science Tamil Version

இணைப்பு பயிற்சி - ஏழாம் வகுப்பு - கணிதம் கட்டகம்

இணைப்பு பயிற்சி - ஏழாம் வகுப்பு - ஆங்கிலம் கட்டகம்

இணைப்பு பயிற்சி - ஏழாம் வகுப்பு - தமிழ் கட்டகம்

1.Vii Std Tamil

பள்ளிகளின் செயல்பாடுகள் யூனியன் வாரியாக கண்காணிப்பு

பள்ளிகள் நடத்தும் களப்பயிற்சி, செய்முறை பாடங்களை கல்வித்துறை அதிகாரிகள் யூனியன் வாரியாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் நடத்த வேண்டிய பாடத்திட்டம் எதுவென முடிவாகாத நிலையில், தாமதமாக திறந்தன. திறந்த பின்னும் புத்தகங்கள் இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பு படிப்பாக நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு பாடம் சார்ந்த செயல் முறை படிப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. களப்பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். 

இதையடுத்து பள்ளிகளில் சுற்றுப்புறச் சூழல், மண்வளம், பருவ காலங்கள் போன்றவற்றை விளக்க அருகில் உள்ள விவசாய விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளனர். வங்கிகளுக்குச் சென்று செலான்களை பூர்த்தி செய்வது எப்படி, போஸ்ட் ஆபீசில் கடிதங்கள் அனுப்புவது எப்படி என்பதை செயல்முறையாக நடத்த கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் "சைல்டு சென்டர்' தன்னார்வ நிறுவனம் மூலம் பொதுச் சுகாதாரம் குறித்து வகுப்பில் பாடம் நடத்தும்படி கூறினர். போக்குவரத்து போலீசார், அதிகாரிகளைக் கொண்டு சாலை விதிகள் குறித்து பாடம் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதன்மை கல்வி அலுவலர் ரஜனிரத்னமாலா திருமங்கலம், மதுரை மேற்கு யூனியனில் உள்ள பள்ளிகளையும், மதுரை கல்வி அலுவலர் சுவாமிநாதன் அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி யூனியனிலும், மேலூர் கல்வி அலுவலர் விஜயன் மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி யூனியன்களையும், உசிலம்பட்டி கல்வி அலுவலர் முரளிதரன் உசிலம்பட்டி, சேடப்பட்டி யூனியன்களிலும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி யூனியன்களிலும் கண்காணிக்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ""செயல்முறை படிப்புகளால் மாணவர்கள் நன்கு புரிந்து கொள்கின்றனர். எளிதாக நடைமுறைகளை தெரிந்து கொள்கின்றனர்.

நன்றி



கற்பித்தல் பணிக்கு "சிடி" - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்கள் கற்பித்தல் பணிக்காக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலம் "சிடி' வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் , இணைப்பு பயிற்சி கல்வி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், விவாதம் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடந்து வருகிறது. இதன் கற்பித்தல் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையால் "சிடி' வழங்கப்பட்டுள்ளது. இந்த "சிடி'க்களை முதலில் ஆசிரியர்கள், அதன் பின் மாணவர்களுக்கு போட்டு காட்டி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டிமன்றங்கள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. "மக்களை அதிகம் நெருங்குவது செய்தி தாள், ரேடியோ ,"டிவி' , "இன்றைய மாணவர்களுக்கு தேவை ஆசிரியர் , தோழர், பெற்றோர்' போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எழுதுதலில் கவிதைகள், படித்தல் பகுதியில் சித்தர் பாடல்கள், நளவெண்பா பாடல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றியே மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் செய்ய, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நன்றி


18.6.11

மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு - அரசாணை

GO 61 Dt 16-06-2011 Maternity Leave

தமிழக பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு
அரசு பெண் ஊழியர்கள் 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்ததை, ஆறு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்து, கடந்த மே 16 ல் உத்தரவிடப்பட்டது. 

இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பே மகப்பேறு விடுப்பில் இருந்தவர்களும், மே 16 க்குப் பின், மகப்பேறு விடுப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களும், ஆறு மாதங்களுக்கு தங்களது விடுப்பை நீட்டித்துக் கொள்ள அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி


பள்ளிக் கல்வி இயக்குனராக வசுந்தரா தேவி நியமனம்

பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுத்துறை இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள் ளது. 

பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் இருந்த பெருமாள்சாமி, முந்தைய ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இர ண்டு மாதங்களுக்கும் மேலாக, இரு பொறுப்புகளையும் வகித்து வந்த வசுந்தரா தேவி, சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழுவில், பள்ளிக் கல்வி இயக்குனர் என்ற முறையில், உறுப்பினர் - செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், ஒரு அதிகாரி, நிபுணர் குழுவில் இடம் பெறக் கூடாது என கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டு, தேர்வுத்துறை இய க்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது. குழுவின் பணி முடிந்த பிறகு, வசுந்தரா தேவி மாற்றம் செய்யப்பட மாட்டார் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் தொடர்வார் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

 

17.6.11

எஸ்ஸி-எஸ்டி நலப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தேதி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2011- 2012 ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல்களுக்கான கலந்தாய்வு முறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் / உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள், சென்னை -5 ஆதிதிராவிடர் நல ஆணையரக கூட்ட அரங்கில் கீழ்க்காணும் அட்டவணை நிரல் படி நடைபெறவுள்ளது.
  1. இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் - ஜூன் 23 - காலை 10 மணி முதல் 1.30 வரை
  2. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்  - ஜூன் 23 - காலை 11.30 முதல் 1 மணி வரை
  3. மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் - ஜூன் 23 - மதியம் 2 மணி முதல் 3.30 வரை
  4. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் - ஜூன் 23 - பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரை
  5. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் (பாடம் வாரியாக) - ஜூன் 24 - காலை 10 - மாலை 5 மணி வரை  
  • தமிழ், ஆங்கிலம், கணிதம் - ஜூன் 24 - காலை 10 - 11 மணி
  • இயற்பியல், வேதியியல் - ஜூன் 24 - காலை 11 முதல் 12 மணி வரை
  • உயிரியல், தாவரவியல், விலங்கியல் - ஜூன் 24 - 12 மணி முதல் 1 மணி வரை
  • இதர பாடங்கள் - ஜூன் 24 - பிற்பகல் 2 மணி முதல்...   
 நன்றி:

நாளை பள்ளிகளை திறக்க அரசு தடை

தமிழகத்தில் பள்ளிகளை நாளை (ஜூன் 18) திறக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு, கடந்த ஜூன் 15ம் தேதி துவங்கியது. புத்தகங்கள் இல்லாத நிலையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. பொதுவாக, சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் பல செயல்படும். கல்வி ஆண்டு தாமதமாக துவங்கியதால், நாளை பல பள்ளிகள் செயல்படும் என அறிவித்து இருந்தனர். 

இந்நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அரசு தெரிவித்தது. இதன்படி பள்ளிகளை திறக்கக் கூடாது என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

நன்றி


சமச்சீர் கல்வி நிபுணர்கள் குழு அமைப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வி குறித்து ஆராய தலைமை செயலாளர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன்படி 
  1. தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 
  2. மத்திய இடைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், 
  3. லேடி ஆண்டாள் மெட்ரிக்பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், 
  4. விஏவி பள்ளிகுழுமத்தின் நிறுவனர் மற்றும் ஜெயதேவ், 
  5. பத்மசேஷாத்ரி பள்ளியின் முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி, 
  6. டில்லி தேசிய கல்வி அறிவியல் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர் திரிபாதி,
  7. சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, 
  8. பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, 
  9. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி 
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி



காலாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

சமச்சீர் கல்வி விவகாரத்தில், சென்னை ஐகோர்ட் வழங்கும் தீர்ப்புக்குப் பின், பாடப் புத்தகங்களை வினியோகித்து, வகுப்புகளை ஆரம்பிப்பதற்குள் ஜூலை முடிந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், செப்டம்பர் மாதம் நடத்த வேண்டிய காலாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளை, ஆகஸ்ட் ஒரு மாதத்தில் நடத்தி முடிக்க முடியாது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைகள் காரணமாக, காலாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி தொடரலாம் என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும் பிரச்னையில்லை. இதர வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து, நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, ஜூலை முதல் வாரத்தில் தான், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும். இந்தப் பணிகள் முடிந்து, வகுப்புகள் ஆரம்பிப்பதற்குள், ஜூலை கரைந்துவிடும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதன்பின், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து நடத்த வேண்டிய காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகளை, ஆகஸ்ட், ஒரு மாதத்தில் எப்படி நடத்தி முடிக்க முடியும் என்று, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் கூறியதாவது
சமச்சீர் கல்வி திட்டத்தை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யவில்லை. இதர வகுப்புகளுக்கும் அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளது. எனவே, தற்போதுள்ள சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் தேவையான மாற்றங்களை செய்து, பாடத் திட்டங்களை அமல்படுத்த உத்தரவிடப்பட்டால், அச்சிடப்பட்ட ஒன்பது கோடி பாடப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்து, மாணவர்களுக்கு வழங்குவது என்பது சவாலான பணியாக இருக்கும். செம்மொழி மாநாட்டு இலச்சினை மற்றும் அந்த மாநாடு தொடர்பாக பல பகுதிகள், பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றையெல்லாம் அகற்றிய பிறகே, மாணவர்களுக்கு வழங்க வேண்டிவரும். இது மிகப்பெரும் பணி, குறுகிய காலத்திற்குள், அப்பணியை முடிக்க முடியாது.

தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்களில் உள்ள செம்மொழி மாநாடு இலச்சினையை மறைத்து வழங்குவதே பெரும் பணியாக உள்ளது. இதில், ஒன்பது கோடி பாடப் புத்தகங்களையும் மறைத்து, கிழித்து வழங்குவது என்பது சாதாரண பணி கிடையாது. எனவே, என்ன நடக்கப்போகிறது என்பது, ஐகோர்ட் வழங்கும் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரியும். 

எப்படியிருந்தாலும், ஜூலை இறுதியில் பாடங்களை நடத்தத் துவங்கி, ஆகஸ்ட் ஒரு மாதத்தில், காலாண்டுத் தேர்வுக்கான பாடப் பகுதிகளை நடத்தி முடிக்க முடியாது. சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தினாலும், பாடங்களை முடிக்க முடியாது. என்ன செய்யப் போகிறோம் என்று, எங்களுக்கு தெரியவில்லை. காலாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

வழக்கமாக, ஜூலை முதல் வாரத்தில் முதல் இடைப் பருவத் தேர்வுகள் நடைபெறும். 1, 6, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளைத் தவிர, இதர வகுப்பு மாணவர்களுக்கு, இடைப் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி


பள்ளிகளில் சுற்றுச்சூழல் தினம்: ஜூனில் கொண்டாட உத்தரவு

பள்ளிகளில் சுற்றுச்சூழல் தினத்தை ஜூனிலே கொண்டாடி அறிக்கை அனுப்ப, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் ஜூன் 5 ம் தேதி சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு பள்ளிகள் ஜூன் 15ல் திறக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் தினத்தை அன்றைய நாளில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, ""ஜூனிலே அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடவும், இதன் அறிக்கையை விழா நடத்தியதற்கான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கவும்,''அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இவ்விழாவில், சுற்றுச்சூழல் குறித்து மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு ஊர்வலம், போட்டிகள் நடத்தப்படும். மரக்கன்றுகள் நடப்படும். சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினரால் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 

நன்றி

 

எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள்..."பெயில்?" பள்ளிகளில் ஆய்வு நடத்த அரசு உத்தரவு

கடந்த கல்வியாண்டில், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வியடையச் செய்துள்ளனரா என்பதைப் பற்றி, மாவட்டந்தோறும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். 

கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை, "பெயில்' ஆக்கக்கூடாது. இந்த விதிமுறைகள், பல தனியார் பள்ளிகளில் மீறப்பட்டு வருவதால், அதிரடி ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள் ளது. ஆறு வயது முதல், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும், தரமான, இலவசமான கட்டாயக் கல்வி அளிக்க வழி வகை செய்து, "இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை,' 2009ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டம், 2010 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இச்சட்டத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வியுறச் செய்வதால், மன ரீதியாக அவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்பதை கண்டறிந்து, இந்த வகுப்பு மாணவர்களை, எக்காரணம் கொண்டும் தேர்வில் தோல்வியுறச் செய்யக்கூடாது என்றும், எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும், "பாஸ்' செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கையின் போது, மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீத இடங்களை, பள்ளியின் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்கி, தொடக்க கல்வி வரை, முற்றிலும் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்றும், சேர்க்கைக்கான காரணிகளில், பெற்றோரின் கல்வி குறித்து, எத்தகைய விசாரணையும் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த மூன்று அம்சங்களையும், தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இரண்டாம் வகுப்பு குழந்தைகள் என்று கூட பார்க்காமல், அவர்கள் முழு ஆண்டுத் தேர்வில், போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி, "பெயில்' ஆக்குகின்றனர். சட்டத்தை சுட்டிக்காட்டி பேசினால், "டிசி' வாங்கிக் கொள்ளுங்கள்' என, பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.
இதனால், சரியாக படிக்காத மாணவர்களை, "பெயில்' செய்வதும், மாணவர் சேர்க்கையின் போது நுழைவுத்தேர்வு நடத்துவதும், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்காமல், புறக்கணிப்பு செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இது, கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மிக நன்றாகவே தெரியும். ஆனாலும், கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். முந்தைய அரசும், இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை.

தற்போது, இந்த விவகாரங்கள் குறித்து, தனியார் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள கல்வித் துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகளிலும், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலும், முழுமையான அளவில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவ, மாணவியரின் தேர்ச்சி பதிவேடுகளை, முழுமையாக ஆய்வு செய்து, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, "பெயில்' செய்துள்ளனரா என்பது உட்பட, கட்டாயக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்படுகிறதா அல்லது மீறப்படுகிறதா என்பதைப் பற்றி ஆய்வு செய்ய, இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் தரும் அறிக்கையின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

நன்றி


ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

னைத்து  இடைநிலை  ஆசிரியர்களயும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது .

உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் செல்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை  செயலாளர் கோபு அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் மாதப்பன் நன்றியுரையர்ற்றினர்.
 
மாவட்ட மற்றும் ,வட்டார  பொறுப்பாளர்கள் கௌரிசங்கர் ,மோதிலால், மருது, பூபதி, சரவணன், சரவணன் விசுவநாதன், லலிதா, ராஜா, பழனி, அம்பிகா, பிரமாவதி, தனலட்சுமி, நாகராணி, ஜெயா, ஆஷா, ஷர்மிலா, அன்புசெல்வி, முத்துகுமாரி, சாந்தி, வடிவுக்கரசி, இல்லறஜோதி, ஹசினா, சௌந்தரமணி, முத்துகுமாரி, கவிதா, வனிதா, சுதா, சிவஷன்முகம், அன்புசெழியன், புகழ்மங்கை, சற்குண, ரேவதி, சண்முகம், பிரசன்னன்,ஆகியோர் கலந்துக்கொண்டு போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பான்மையான இடைநிலை ஆசி ரிய ஆசிரியைகள் திரளாக கலந்துகொண்டனர் .



 
.

16.6.11

குழந்தை மைய இணைப்பு பயிற்சி - கட்டகம்

Bridege Course Module 1

இணைப்பு பயிற்சி - திருத்தியமைக்கப்பட்ட கால அட்டவணை

Bridge Course Revised Time Table

குழந்தை மைய இணைப்பு பயிற்சி 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படுத்துதல்

KK CEO Proceedings

1 & 6ம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் - சரிசெய்ய வேண்டிய பகுதிகள்

1 & 6 Text Book Delision

பள்ளி மாணவர்களுக்கான முனைப்பு இணைப்பு பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்

Child Centered Intensive Bridge Course

அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்


ஈரோடு கலெக்டர், தன் குழந்தையை, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்தார்.
 
ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கால்நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். இவரது மனைவி ஸ்ரீவித்யா, எம்.பி.பி.எஸ்., படித்துள்ளார். தர்மபுரி கலெக்டராக ஆனந்தகுமார் பணிபுரிந்த போது, அவரது மகள் கோபிகா, அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்றார். ஜூன் 3ம் தேதி, ஈரோடு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற அவர், கோபிகாவை, ஈரோட்டில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். ஈரோடு கலெக்டர் பங்களாவில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள, குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், நேற்று காலை இரண்டாம் வகுப்பில் சேர்த்தார். பள்ளிக்கு திடீரென வந்த கலெக்டரை, தலைமை ஆசிரியை ராணி வரவேற்று, தன் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார். அந்த இருக்கையில் அமர மறுத்த கலெக்டர், தலைமை ஆசிரியையை அவருக்கான இருக்கையில் அமரும்படி கூறிவிட்டு, பெற்றோர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மாணவர் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்தார். தன் மகளுக்கான மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியையிடம் வழங்கி, மகளை அப்பள்ளியில் சேர்த்தார்.

""என் குழந்தைக்கு இலவச சீருடை வழங்கப்படுமா?'' என, கலெக்டர் கேட்டார். ""சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படாது,'' என, தலைமை ஆசிரியை கூறினார். ""என் குழந்தையும் பள்ளியில் சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள்,'' என, கலெக்டர் கேட்டுக் கொண்டார். பின், குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதையறிந்த நிருபர்கள், கலெக்டரிடம் கேட்டபோது, ""இது என் சொந்த விஷயம்; இதைப்பற்றி சொல்ல ஏதுமில்லை,'' என்றார்.

15.6.11

மத சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

Pre Matric Scholarship

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் - புதுப்பித்தல்

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் - புதியது

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறித்துவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை, 2011-12ம் ஆண்டு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, 
  • முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில், 50 சதவீத விழுக்காடுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். 
  • 1ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை பயில்பவராக இருத்தல் வேண்டும். 
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒரு ஆண்டு வருமானம், 1 லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும்.
  • கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். 
  • ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்றவர்கள், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை மட்டுமே கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • கல்வித் உதவித்தொகை வேண்டுவோர், பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை, அந்தந்த கல்வி நிலையங்களில் ஜூலை 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
  • புதிய விண்ணப்பங்களை, அதே மாதம் 11ம் தேதிக்குள்ளும் கிடைக்கும் வகையில் மாணவ, மாணவியர் வழங்க வேண்டும்.  
  • கல்வி நிலையங்கள் மாணவ, மாணவியரிடமிருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து, உரிய படிவத்தில் பதிவதற்கான கேட்பு பட்டியலை ஜூலை மாதம் 20ம் தேதிக்குள்ளும், 
  • புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை ஜூலை மாதம் 15ம் தேதிக்குள்ளும், "சிடி'யில் பதிந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வழங்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, தொடர்பு கொள்ளலாம்.

நன்றி


பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களை மையப்படுத்திய புதிய பயிற்றுவித்தல் முறை அறிமுகம்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு பயிற்றுவிக்கும் முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால், மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்தத் தரத்தை ஆராய்வதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்துள்ளதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். 2005-ம் ஆண்டு தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆகியவற்றில் குழந்தைகளை மையப்படுத்தி, அவர்கள் எளிமையான முறையில் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கவும், அதன் மூலம் அவர்கள் மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு சொந்தமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வேண்டும். அதன்படி, "குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள்' என்ற முறை எல்லா வகுப்புகளிலும் இந்தக் கல்வியாண்டில் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதன்கிழமை பள்ளிகளைத் திறக்கும்போது இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்படி, பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு வகுப்பறை நடத்தப்படும். இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவசப் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

ஆகவே, கல்வி நிறுவனங்கள் எந்தக் குழப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் இந்தக் கல்வியாண்டில், அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்தத் திட்டத்தை கடைப்பிடித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு, நல்ல முறையில் கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் பெற்றொர்களும், மாணவர்களும் எந்தவித குழப்பத்துக்கும் இடம்தர வேண்டாம். மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

கல்லூரிகள் திறப்பு:தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட உள்ளன.

நன்றி




பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்