தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.6.11

கவுன்சிலிங் தாமதம்: ஆசிரியர்கள் குழப்பம்

கவுன்சிலிங் நடத்துவதில் தாமதத்தால், குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாமல் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
கடந்தாண்டு வரை, பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், மே இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றுச் செல்லும் ஆசிரியர்கள், பணியேற்கும் பகுதியில் உள்ள பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க ஏதுவாக இருந்தது. அதிகபட்சமாக, பள்ளி துவங்கிய இரண்டு வாரங்களுக்குள், இதற்கான பணிகளை முடித்து விடுவர். தற்போது கவுன்சிலிங் செயல்முறைகள் தயாராகி வருகின்றன. ஜூன் துவங்கி 10 நாட்களாகியும், இடமாறுதல் வாய்ப்பு குறித்த முடிவு எடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. கவுன்சிலிங்கின்போது எதிர்பார்த்த பள்ளிக்கு இடமாறுதல் கிடைக்குமா; குழந்தைகளை புதிய இடத்தில் சேர்ப்பதா; கடந்தாண்டு படித்த பள்ளியிலேயே தொடரலாமா? என குழப்பங்கள் நீடிக்கின்றன. இதையடுத்து குழந்தைகள் படிக்கும் பள்ளி குறித்து எவ்வித முடிவும் எடுக்க முடியாமல், ஆசிரியர்கள் பரிதவிக்கின்றனர்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்