தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.12.12

3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம்வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் பருவத் தேர்வு,தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் பருவம், ஜனவரி மாதம் துவங்குகிறது. அதற்குரிய பாடப்புத்தகம்,அந்தந்த மாவட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

"அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், பள்ளித் துவங்கியதும், அந்தந்த பள்ளிக்கு தேவையான புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்