தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.12.12

கன்னியாகுமரி மாவட்ட சிஇஓ, டிஇஇஓவை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் சிஇஓ, டிஇஓவை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு அமைப்பாளர் ஜெறோம் தலைமை வகித்தார். நிதிகாப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், செய்தி தொடர்பாளர் நாகராஜன், இணை அமைப்பாளர்கள் பாலசந்தர், வேலவன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், எட்வின் பிரகாஷ் உள்பட நுற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

  • புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியை அலங்கோலமாக்கி தலைமை ஆசிரியர்களையும், பிற ஆசிரியர்களையும் கணினிகளின் முன்பாக காலத்தைப் போக்கிட வைக்கும் நிலையினை மாற்றி முறையான மாற்று ஏற்பாடு வழங்க வேண்டும். 
  • மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் மலர் வெளியீடு, என்ற போர்வையில் ஆசிரியர்களிடம் நடத்திய வசூல் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  பாட புத்தகங்களை வழங்குவதில் கமிசன் பெற்று அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தொடக்கக் கல்வி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • கல்வித்துறை அலுவலர்களின் ஆசிரியர் விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் சங்கப் பொறுப்பாளர்ளுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்