தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.1.10

மாநிலப் பொறுப்பாளர்கள்

.
மாநிலத் தலைவர்

திரு. G. குமார்


மாநில பொதுச் செயலாளர்

திரு. M. குமரேசன்


மாநிலப் பொருளாளர்

திரு. T. உதயசூரியன்


மாநில அமைப்புச் செயலாளர்

திரு. K. இசக்கியப்பன்


மாநில துணைப் பொதுச் செயலாளர்

திரு. T. இதயராஜா


மாநில தலைமையிடச் செயலாளர்

திரு. G. V. சோமசேகர்


மாநில துணைத்தலைவர்கள்

திரு. S. நெடுஞ்செழியன்
திரு. A. அருணகிரியார்
திருமதி. T. லீலாவதி
திரு. K. அச்சுதன்
திரு. S. நிக்கோலஸ்
திருமதி. D. வாசுகி
திரு. G. மதியரசன்
திரு. N. R. இளங்கோவன்
திரு. C. இராமதாஸ்

 
மாநில இணைச் செயலாளர்கள்

திரு. M. மயில்வாகனம்
திரு. M. கார்த்திகேயன்
திரு. K. D. அலெக்சாண்டர்
திரு. G. பாஸி
திரு. K. அரங்கநாதன்
திரு. A. முத்து
திரு. A. பாலகுருநாதன்
திரு. K. ராமேஸ்வரன்
திரு. C. இராமதாஸ்
.

8.1.10

பொங்கல் பரிசு - அரசு உத்தரவு

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 272 கோடி ரூபாய் அளவிற்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: "சி' மற்றும் "டி' பிரிவு அலுவலர்களுக்கு சென்ற ஆண்டை விட 500 ரூபாய் உயர்த்தி 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், "ஏ' மற்றும் "பி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் சிறப்பு போனசாக 1,000 ரூபாய் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தொகுப்பூதிய பணியாளர்கள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாளர்கள், தினக்கூலியாக பணியாற்றி பணி நிரந்தரம் செய்யப் பட்ட பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு, சிறப்பு மிகை ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 272 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசாணை எண்: 01 நாள்: 02-01-2010
.

இடைநிலை ஆசிரியர் பிஎட் படிக்க விடுப்பு

இடைநிலை ஆசிரியர்கள் பிஎட் பட்ட படிப்பை நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் நேரடியாக பிஎட் படிக்க ஊதியம் இல்லாத விடுப்பு அனுமதிக்க வேண்டும். பிஎட் படிப்பில் சேர்ந்த நாள் முதல் இறுதி தேர்வு எழுதிய நாள் வரை ஊதியம் இல்லா விடுப்பு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

இதை பரிசீலித்த அரசு, அந்த கோரிக்கையில் சில திருத்தங்களை செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பணி முடித்தவர்கள் மட்டுமே பிஎட் படிப்பில் சேரலாம். அவர்களுக்கு ஓராண்டுக்கு மிகாமல் தகுதியுள்ள விடுப்பு (மருத்துவ விடுப்பு மற்றும் படிப்பதற்கான விடுப்பு நீங்கலாக) அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கப்படும் ஆசிரியருக்கு பிஎட் படிப்பு முடியும் வரை ஊதியம் இல்லா விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அதனால் எக்காரணத்தை கொண்டும் இடையில் அந்த ஆசிரியர் மீண்டும் பணியில் சேர அனுமதி கிடையாது. இறுதி தேர்வுக்கு மறுநாள் பணியில் சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி: நக்கீரன்.IN,சனிக்கிழமை, 29, ஆகஸ்ட் 2009
.

6.1.10

தொகுப்பூதியம் பெற்றவர்களுக்கு காலமுறை ஊதியம்

தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசாணை எண்: 336 நாள்: 30.12.2009.
.

1.1.10

சமச்சீர் கல்வி - கருத்தரங்கம்

தமிழக அரசு  எதிர்வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கம்  நாகர்கோயிலில் நடைபெற உள்ளது.

கருத்தரங்கம்


  • தலைப்பு: சமச்சீர் கல்வி

  • நாள்: 02-01-2010, சனி

  • நேரம்: மதியம் 3 மணி

  • இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்,   நாகர்கோயில்.



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்