தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.8.19

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்ட முடிவுகள்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  
தீர்மானம் எண் 1: 
தே.க.கொ வரைவையே நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசிற்குக் கண்டனம்

தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை மீது 15.08.2019 வரை கருத்துக் கேட்பு நடத்தியுள்ள மத்திய அரசு இதுவரை ஏற்பு செய்யப்பட்ட இறுதி அறிக்கையை வெளியிடாத நிலையில், தமிழக அரசு தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுக்கல்வியை பாதிக்கக்கூடிய, கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளின் இலவச தமிழ்வழிக் கல்வியைப் பாதிக்கக்கூடிய வகையிலான தொடர் நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருவதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை கல்வி நிலையிலும், நிர்வாக நிலையிலும் பாதிக்கக்கூடிய அரசாணை (நிலை) எண் : 145(பள்ளிக்கல்வித்(தொக)3(2)துறை) நாள் : 20.08.2019 -ஜ உடனடியாகத் திரும்பப்பெற இம்மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 2: 
கருத்தரங்குகள் நடத்திய மாவட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துகள்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 21.07.2019 தமிழ்நாடு மாநிலக்குழுவின் முடிவின்படி தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்திய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளுக்கு இம்மாநிலக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவுத்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3: 
STFI & AIFUCTO மதுரையில் மாநில மாநாடு

தேசியக்கல்விக்கொள்கை – 2019 தொடர்பாக AIFUCTO(All India Federation of University & College teachers organisations) அமைப்புடன் இணைந்து STFI & AIFUCTO சார்பில்  செப்டம்பர் - 2019-ல் மதுரையில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை மிகச்சிறப்பாக நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 4: 
பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக் கட்டணம்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெறும் பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களிடம் பிரதிநிதிக் கட்டணமாக தலா ரூ500-(ரூபாய் ஐநூறு மட்டும்) பெறுவது என இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 5: 
ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத்  தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கமான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.இரவிச்சந்திரன் அவர்களின் தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்யக் கோரியும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்திடக்கோரியும் இந்தியப்பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 09.09.2019 அன்று மாலை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

கூட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் செ.அப்பாத்துரை, பொதுச்செயலாளர் மற்றும் STFI அகில இந்திய மத்திய குழு உறுப்பினர் அ. சங்கர், மாநிலப் பொருளாளர் க.சு.பிரகாசம், மாநில தனிக்கையாளர் திருமதி அ. ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுக்குழு முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. செ. அப்பாதுரை தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திருமதி ஞானம்மாள் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சங்கர் சமர்ப்பித்தார்.

இதழ் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் அவர்கள் சமர்ப்பித்தார்.

வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் திரு.க.சு.பிரகாஷ் அவர்கள்  சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.

கூட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் மற்றும் மாவட்டச் செயலாளர் செல்மா அவர்களும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முபாரக் அவர்களும் மேனாள் பொதுச்செயலாளர் இயக்கத்தின் நிறுவனருமான தோழர் ஆ.சுப்பிரமணியன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

பொதுக் குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.                        

1. அரசு / அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளி யில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.  

2. இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்       

3 . அரசு  உயர்நிலைப்பள்ளி பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

4. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 ல் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உள்ள சிக்கல் நிறைந்த இந்த தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.                 

5. மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மூடப்பட்ட 46 ஆரம்பப் பள்ளிகளை நூலகமாக மாற்றியதை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.

6. அரசாணை 145இல் உள்ள பள்ளி இணைப்பு என்ற முறையை கைவிட வேண்டும் .

7. கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை பள்ளிக்கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி/ இடைநிலைக்கல்வி) பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்புவது. வருகிற செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

21.8.19

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

நாள்: 23/08/2019,  வெள்ளிக்கிழமை.

இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  அலுவலகம், திண்டுக்கல் (போலீஸ் ஜிம் அருகில், மெங்கிள்ஸ் ரோடு)  

தலைமை:  திரு. C. அப்பாத்துரை, மாநிலத் தலைவர்

முன்னிலை: திரு. S. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.

வரவேற்புரை: திருமதி  ஞானம்மாள் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல்.

வேலை அறிக்கை: திரு. அ. சங்கர், பொதுச்செயலாளர்.

வரவு செலவு அறிக்கை: திரு. க. சு .பிரகாசம், மாநில பொருளாளர்.

இதழ் அறிக்கை: திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச்செயலாளர்.

நன்றியுரை: திரு. வெங்கட்ராமன், அமைப்புச் செயலாளர்.

அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநிலப்  பொறுப்பாளர்கள், இணை /துணை பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்

அ.சங்கர்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

மேல்நிலைப்பள்ளிகளுடன் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இணைப்பு - அரசாணை

பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் சார்பாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

  அரசாணை

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்