பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 272 கோடி ரூபாய் அளவிற்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: "சி' மற்றும் "டி' பிரிவு அலுவலர்களுக்கு சென்ற ஆண்டை விட 500 ரூபாய் உயர்த்தி 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், "ஏ' மற்றும் "பி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் சிறப்பு போனசாக 1,000 ரூபாய் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தொகுப்பூதிய பணியாளர்கள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாளர்கள், தினக்கூலியாக பணியாற்றி பணி நிரந்தரம் செய்யப் பட்ட பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு, சிறப்பு மிகை ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 272 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசாணை எண்: 01 நாள்: 02-01-2010
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
8.1.10
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று க...
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக...
-
சமச்சீர் கல்விக்குப் பதிலாக இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்பட உள்ளதையடுத்து, புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. பத்...
-
அரசு அலுவலக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த வாரம் 7...
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு கட்டணம் இல்லாமல் செல்ல, தங்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்...
-
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தமிழா சிரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக