தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.12.12

போலி மாற்று சான்றிதழ் - கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்கு போலியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, போலியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதத்தை சஸ்பெண்ட் செய்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொறுப்பு) கணேசன் கூறுகையில், ‘உதவி தொடக்கக் கல்வி அலுவலரை சஸ்பெண்ட் செய்து, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை’ என்றார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்