தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.9.13

370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது நாளை வழங்கப்படுகிறது

தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாளை (5–ந்தேதி) ஆசிரியர் தின விழா சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு பள்ளிக் கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்குகிறார். பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவில் 370 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. விருதினை பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் வழங்குகிறார்.

தொடக்க கல்வி துறையில் 196 ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கல்வி துறையில் 134 பேருக்கும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 25 பேருக்கும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் 10 பேருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 2 பேருக்கும் சமூக நலத்துறை பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வல்லி, இயக்குனர்கள் சங்கர், பிச்சை, கண்ணப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் நன்றி கூறுகிறார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்