தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.5.11

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மே 25க்குள் நடத்துவதில் சிக்கல்

ஆசிரியர் இடமாறுதலுக்கான கவுன்சிலிங், மே 25ல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், மே இறுதியில், ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில், மாவட்டத்திற்குள் இடமாறுதல், மாவட்டம் விட்டு இடமாறுதலுக்கு விருப்பமுள்ளவர்கள், மே 12க்குள் விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.


அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, மே 25ல் கவுன்சிலிங் துவங்க வேண்டும். அப்போது தான், பள்ளிகள் துவங்கும் போது, இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், பணியில் சேர வசதியாக இருக்கும்.

புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இதுவரை, கவுன்சிலிங்கிற்கான உத்தரவு வரவில்லை. எனவே, திட்டமிட்டபடி, மே 25ல் கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மே 25 முதல், கவுன்சிலிங் துவங்க வேண்டும். ஆனால், இதுவரை உத்தரவு வரவில்லை. எனவே, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பதில் தாமதம் ஏற்படும், என்றார்.
 
நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்