தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.5.11

கட்டாய கல்வி சட்டம் அமல்படுத்தமுதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம்

தமிழகத்தில் கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் மே 11 ல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தினை கடந்த கல்வியாண்டு அறிமுகம் செய்தது. 14 வயதிற்குட்பட்ட அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதனை அமல் படுத்த பள்ளி கல்வித்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மே 11 ல் சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. 

14 வயது நிரம்பிய அனைவருக்கும் கற்பிக்க என்ன நடவடிக்கை எடுப்பது. எப்படி செயல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்படவுள்ளது. சமச்சீர் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது குறித்தும், மே 20 க்குள் பத்தாம் வகுப்பு "ரிசல்ட்' வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

நன்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்