தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.5.11

கல்விக்கு ஒதுக்கிய நிதி முழுவதும் வழங்கவில்லை


மத்திய அரசு, 11வது ஐந்தாண்டு திட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கிய நிதியை, முழுவதும் வழங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
11வது ஐந்தாண்டு திட்டத்தில் சமூக துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலத்திட்டங்கள் மற்றும் விவசாயத்திற்கு குறைவாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. சுகாதாரம், கல்விக்கு 60 சதவீத நிதி மட்டுமே கிடைத்துள்ளது. இந்த திட்டம், 2012ம் ஆண்டில் முடிவடைகிறது. 

சுகாதார துறைக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதில், 75 ஆயிரத்து 533 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது. கல்விக்கு ஒதுக்கப்பட்ட 2 லட்சத்து 38 ஆயிரத்து 600 கோடி ரூபாயில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 659 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது.

எனவே, '12வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திட்ட கமிஷன் வலியுறுத்தி உள்ளது. 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்