தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.3.13

TET - தமிழ் - II ஆறாம் வகுப்பு - இயல் 2

செய்யுள்: நாலடியார்

* நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள்.

* நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது.

* நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

* நாலடி நானூறு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல் - நாலடியார்.

* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்கள்.

* பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது - 18

* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்து மேல்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகிறது.

* சங்க இலக்கியகளுக்கு பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர்.

* பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் - சங்க நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

செய்யுள்: பாரத தேசம்

* பாரதியார் வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)

* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.

* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்

* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.

* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.

* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமி அய்யங்கார்)

* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.

* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.

* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி(1904)

* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)

* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.

* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.

* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பாரதியாரின் பாடல் வரிகள்:

"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்"

"ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

"சாதி இரண்டொழிய வேறில்லை"

"உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"
உரைநடை: பறவைகள் பலவிதம்

* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.

* சமவெளி மரங்களில் வாழும் பறவைகள் - மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்குணாங்குருவி.

* நீர் நிலைகளில் வாழும் பறவைகள் - கொக்கு, தாழைக்கோழி, பவளக்காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

* மலைகளில் வாழும் பறவைகள் - கிருவாச்சி, செந்தைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன் முதுகு, மரங்கொத்தி, சின்னங்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை.

* பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

* வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.

* அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.

* அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.

* நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.

* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: வேடந்தாங்கல், கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்), கஞ்சிரால்குளம், சித்திரஸ்குடி, மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்), பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்), உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்), வடுவூர் (தஞ்சை மாவட்டம்) கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்), வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்), கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்).

* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

 துணைப்பாடம்: பாம்புகள்

* விவசாயிகளின் நண்பன் - பாம்பு.

* உலகில் மனித இனம் தோன்றும் முன் பத்துகோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் - பாம்புகள்.

* பாம்புப் பண்ணை அமைந்துள்ள இடம் - சென்னைக்கு அருகே கிண்டி.

* பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் குட்டிப்போடும்.

* உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு - ராஜநாகம்(இந்தியா). இதன் நீளம் 15 அடி. கூடுகட்டி வாழும் ஒரே வகைப்பாம்பு. இவை மற்ற பாம்புகளை கூட உணவாக்கிக் கொள்ளும்.

* பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும் - இரையை விழுங்கும், மென்று தின்பதில்லை.

* பாம்பு தான் பிடிக்கும் இறையை கொல்லவும், செரிமானத்திற்காகவும் தன்னுடைய எச்சில் நஞ்சு வைத்திருக்கிறது.

* பாம்பிற்கு காது கேட்காது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செய்லபடும்.

* 52 வகையான பாம்புகளுக்கு நச்சுத்தன்மை உண்டு.

* பாம்பைக் கொண்றால் அதன் உடல் பிளந்து வெளிவரும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்திற்கு வரவைக்கிறது.

* சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ள பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டும்.

* நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின்(Cobrozin) என்ற வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

* பாம்பின் தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் - இந்திய அரசின் வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் - 1972.

* மஞ்சள் சிட்டு எந்த பகுதியில் வாழும் - சமவெளி பகுதியில்.

* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை - 13

* சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.

* தமிழில் உள்ள முதல் எழுத்துக்கள் - 30

* தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் - 12

* தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் - 18

* உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன - 216

இலக்கணம்:

* உடனிலை மெய் மயக்கம்:

தன் எழுத்துடன் மட்டும் சேர்ந்து வரும் - க், ச், த், ப்.

(எ.கா) பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.

* வேற்றுநிலை மெய்மயக்கம்:

தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் - ர், ழ்

எ.கா: சார்பு, வாழ்க்கை

* எழுத்து பிற எழுத்து இரண்டுடன் சேர்ந்து வரும் எழுத்துக்கள் - ற், ன்.

எ.கா: குற்றம், மேற்கு -ற், அன்னம், அன்பு - ன்.



* உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை.

* ஆறுகள் மாசடையக் காரணம் - தொழிற்சாலைக்கழிவு.

* மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு.

* மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்

* வண்மை - கொடைத்தன்மை, வன்மை - கொடுமை.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்