தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.3.13

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

 அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்த வேண்டும். அப்பணியிடங்களில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை வகித்தார். கல்வி மாவட்டச் செயலர்கள் ஆர். சசி, பாலச்சந்திரன், ஹரிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் சேம் பிரின்ஸ் குமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னாள் மாநில இணைச் செயலர் பாஸி, மூட்டா நாகராஜன், உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பென்னட் ஜோஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராஜாக்கமங்கலம் வட்டாரப் பொறுப்பாளர் செந்தில், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலப் பிரதிநிதி நாகராஜன், கலையாசிரியர் தலைவர் விக்ரமன் ஆகியோர் பேசினர்.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலர் ம. எட்வின் பிரகாஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலர் வள்ளிவேலு நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.செல்வராஜ் நன்றி கூறினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்