தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.3.13

பள்ளிக் கல்வி அமைச்சருடன் சந்திப்பு


தஇஆச மாநில நிர்வாகிகள் மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் டாக்டர் வைகை செல்வன் அவர்களைச் சந்தித்து “உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரியாக உட்படுத்துதல்” தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

நமது கோரிக்கையை கனிவுடன் கேட்ட அமைச்சர், கல்வி மானியக் கோரிக்கைக்கு முன்பாக நமது சங்கத்தை அழைத்துப் பேசி முடிவுகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.


சந்திப்பின் போது மாநிலத் தலைவர் கயத்தாறு, பொதுச் செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் மதலைமுத்து, தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன், சென்னை மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்