தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.8.19

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுக்குழு முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. செ. அப்பாதுரை தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திருமதி ஞானம்மாள் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சங்கர் சமர்ப்பித்தார்.

இதழ் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் அவர்கள் சமர்ப்பித்தார்.

வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் திரு.க.சு.பிரகாஷ் அவர்கள்  சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.

கூட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் மற்றும் மாவட்டச் செயலாளர் செல்மா அவர்களும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முபாரக் அவர்களும் மேனாள் பொதுச்செயலாளர் இயக்கத்தின் நிறுவனருமான தோழர் ஆ.சுப்பிரமணியன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

பொதுக் குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.                        

1. அரசு / அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளி யில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.  

2. இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்       

3 . அரசு  உயர்நிலைப்பள்ளி பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.

4. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 ல் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உள்ள சிக்கல் நிறைந்த இந்த தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.                 

5. மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மூடப்பட்ட 46 ஆரம்பப் பள்ளிகளை நூலகமாக மாற்றியதை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.

6. அரசாணை 145இல் உள்ள பள்ளி இணைப்பு என்ற முறையை கைவிட வேண்டும் .

7. கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை பள்ளிக்கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி/ இடைநிலைக்கல்வி) பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்புவது. வருகிற செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்