தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.5.13

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 1631 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்