தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.5.13

மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மே 28, 29ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு  அறிவிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கயத்தாறு அவர்கள் இன்று காலை  பள்ளி கல்வி இணை இயக்குநரை சந்தித்தார். அப்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளி கல்வி இணை இயக்குநர் தெரிவித்தார்.இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமது மாநிலப் பொதுச் செயலாளர் திரு. இசக்கியப்பன் அவர்கள் பள்ளி கல்வி இணை இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்