தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.4.13

மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி - முதன்மை கல்வி அதிகாரிகள் அனுமதித்து வழங்க ஆணை

பள்ளி கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துப்படி கோரும் மனுக்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக பெறப்பட்டு உரிய பரிசீலனைக்கு பின்னர் துறை தலைவர் என்ற நிலையில் பள்ளி கல்வி இயக்குநரால் அதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் போக்குவரத்து படியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிலையிலேயே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கலாம் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் செயல்முறைகளில் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரிடம் இருந்து 60 சதவீதத்திற்கு மேலான உடல் ஊனமுற்ற மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை 40 சதவீதம் ஊனமுற்றோர் என மருத்துவ சான்று பெற்றுள்ளவர்களுக்கும் வழங்க அனைத்து துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக பள்ளி கல்வி இயக்குநர் தேவராஜன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைத்துள்ள உத்தரவில், "மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு போக்குவரத்துபடி அனுமதிக்கப்பட ஏதுவாக வருவாய் மாவட்ட அளவில் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகளே அனுமதித்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்