தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.4.13

நாகர்கோவிலில் பணிநிறைவு இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - பொதுச் செயலாளர் பங்கேற்பு


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட கிளையின் சார்பாக 2012-13ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 13.04.2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நாகர்கோவிலில் வைத்து நடைபெற்றது.

பாராட்டு விழாவிற்கு மாவட்டத்தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மரிய ஜாண் டெல்லஸ், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட அமைப்புச் செயலாளர் திவாகரன் பிள்ளை அனைவரையும் வரவேற் றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களைப் பாராட்டி உரையாற்றினார். பொதுச்செயலாளர் க. இசக்கியப்பன் பணிநிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னாள், இன்னாள் மாவட்ட, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள், தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். குழித்துறை கல்வி மாவட்டச் செயலாளர் ஹரிகுமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தலைமையிடச் செயலாளர் பால் செபாஸ்டின் தொகுத்து வழங்கினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்