உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் சங்க மாநில ஆலோசகர் சின்னப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பாளர் மணிகண்டன் வரவேற்றார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகேசன் அசோக்குமார், பாண்டித் துரை, பாலுச்சாமி, அருணாசம்பந்தன் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை முழுமையாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விகிதாச்சாரம் பற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கென தனி இயக்குனரகம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்துகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, மண்டல வாரியாக மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாட்டை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி கன்னியாகுமரி மண்டலத்தில் பிப். 7ம் தேதியும், மதுரை மண்டலத்தில் பிப். 14ம் தேதியும், திருச்சி மண்டலத்தில் பிப். 21ம் தேதியும், சேலம் மண்டலத்தில் பிப். 28ம் தேதியும், சென்னை மண்டலத்தில் மார்ச் 7ம் தேதியும் இந்த கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
7.2.10
மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
'தானே' புயல் நிவாரணத்துக்காக, முதல்வர் விடுத்த அழைப்பை ஏற்று, அதிகளவு நன்கொடை குவியும் என எதிர்பார்த்த நிலையில், தொழில் துறையினரிடம...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவல...
-
"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்...
-
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) 05ஆம் அகில இந்திய மாநாடு 2012, மே மாதத்தின் 17, 18 மற்றும் 19ஆம் தேதி களில் தமிழகத்தின் கன்...
-
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்...
-
அரசாணை எண்: 237 நிதித்(ஊதியப் பிரிவு)துறை நாள்: 22-07-2013 .
-
Mr. President, Dignitaries in Dais and Fellow Delegates from all over India, across the length and breadth of India from Kashmir to Kanyaku...
-
உள்ளாட்சித் தேர்தலில் பணி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் ஆசிரியர்கள் வேதனையடைந்தனர். உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக