உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் சங்க மாநில ஆலோசகர் சின்னப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பாளர் மணிகண்டன் வரவேற்றார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகேசன் அசோக்குமார், பாண்டித் துரை, பாலுச்சாமி, அருணாசம்பந்தன் பங்கேற்றனர். 
மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை முழுமையாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விகிதாச்சாரம் பற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கென தனி இயக்குனரகம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்துகின்றனர். 
இதன் ஒரு கட்டமாக, மண்டல வாரியாக மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாட்டை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி கன்னியாகுமரி மண்டலத்தில் பிப். 7ம் தேதியும், மதுரை மண்டலத்தில் பிப். 14ம் தேதியும், திருச்சி மண்டலத்தில் பிப். 21ம் தேதியும், சேலம் மண்டலத்தில் பிப். 28ம் தேதியும், சென்னை மண்டலத்தில் மார்ச் 7ம் தேதியும் இந்த கூட்டங்கள் நடைபெறும். 
கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
.
- முகப்பு
 - தலைப்புகள்
 - மாநில பொறுப்பாளர்கள்
 - மாவட்ட நிர்வாகிகள்
 - இயக்க நடவடிக்கைகள்
 - மாநில மாநாடு - 2007
 - 'நமது முழக்கம்' மின்னிதழ்
 - பள்ளி நாள்காட்டி 2016 - 17
 - படிவங்கள்
 - தமிழ்நாடு கல்வி விதிகள்
 - துறைத் தேர்வுகள்
 - அரசாணைகள்
 - எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
 - இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
 - தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
 
7.2.10
மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
- 
25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 19ம் தேதி தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்...
 - 
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
 - 
தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்....
 - 
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
 - 
நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.   நாகர்கோவிலை அட...
 - 
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...
 - 
மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவ...
 - 
5757_A2_2012 Deployment All Schools Circular-13.07 Deployment 13.07
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக