உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுசெயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் சங்க மாநில ஆலோசகர் சின்னப்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட தொடர்பாளர் மணிகண்டன் வரவேற்றார். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன், மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகேசன் அசோக்குமார், பாண்டித் துரை, பாலுச்சாமி, அருணாசம்பந்தன் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை முழுமையாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு விகிதாச்சாரம் பற்றிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கென தனி இயக்குனரகம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்துகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, மண்டல வாரியாக மறியல் போராட்டத்திற்கான ஆயத்த மாநாட்டை நடத்த முடிவெடுத்தனர். இதன்படி கன்னியாகுமரி மண்டலத்தில் பிப். 7ம் தேதியும், மதுரை மண்டலத்தில் பிப். 14ம் தேதியும், திருச்சி மண்டலத்தில் பிப். 21ம் தேதியும், சேலம் மண்டலத்தில் பிப். 28ம் தேதியும், சென்னை மண்டலத்தில் மார்ச் 7ம் தேதியும் இந்த கூட்டங்கள் நடைபெறும்.
கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
7.2.10
மண்டல வாரியாக மறியல் ஆயத்த மாநாடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய்த்தொற்று க...
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக...
-
சமச்சீர் கல்விக்குப் பதிலாக இந்த ஆண்டு பழையப் பாடத்திட்டமே பின்பற்றப்பட உள்ளதையடுத்து, புதிதாக 6.4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. பத்...
-
அரசு அலுவலக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த வாரம் 7...
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு கட்டணம் இல்லாமல் செல்ல, தங்கள் இலவச பஸ் பாஸ்களை பயன்படுத்...
-
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு, நகராட்சி மேல் நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தமிழா சிரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக