தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.5.12

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட கிளை சார்பில் உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கும் பாராட்டு விழா 22-04-2012 அன்று தக்கலை அரசு ஊழியர் இல்லத்தில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட தலைவர் சேம்பிரின்ஸ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாஸி முன்னிலை வகித்தார். குளச்சல் வட்டாரச் செயலாளர் பாலச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் எட்வின் பிரகாஷ் வட்டார நிர்வாகிகளான திவாகரன் பிள்ளை, ஹெர்பர்ட் ராஜசிங் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் பணி நிறைவு பெற்ற 20 ஆசிரியர்களையும், நல்லாசிரியர் விருது பெற்ற மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பையாத் தேவர் மற்றும் பதவி உயர்வு பெற்ற மாவட்ட தலைவர் சேம்பிரின்ஸ் குமார், மாவட்ட செயலாளர் பாஸிஆகியோரையும் கவுரவித்து பேசினார்.

குழித்துறை வட்டாரச் செயலாளர் ஹரிகுமார் நன்றி கூறினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்