தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.7.12

மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான ஊதியம் இல்லை: ஊதிய முரண்பாட்டில் தவிக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

மத்திய அரசு ஆசிரியர்களு க்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இடை நிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலை பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். 9969 பேர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள். சுமார் 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இதர 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களில் சாதாரண நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரசாணை 234ன்படி 6 வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. அதில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 6 வது ஊதியக்குழுவில் இடை நிலை ஆசிரியர் சாதாரண ஊதிய விகிதம் 9300-34800 மற்றும் தர ஊதியம் ரூ.4200 என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு 5200-20200 மற்றும் தர ஊதியம் ரூ.2800 என வழங்கியுள்ளது. இதில் தேர்வு நிலையில் மத்திய அரசில் தர ஊதியம் ரூ.4600 ஆக உள்ளது. தமிழகத்தில் ரூ.4300 ஆக உள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலை ஊதியத்தில் தர ஊதியம் ரூ.4800 ஆக உள்ளது. தமிழக அரசு ரூ.4500 வழங்குகிறது.


மத்திய அரசில் 10 முதல் 20 ஆண்டு வரை ஒரே பணியில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை என தனி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் நாடு அரசு 1.1.2006 முன்பு தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே அதற்குரிய ஊதிய விகிதம் வழங்கி வருகிறது. 1.1.2006க்கு பின்பு 31.5.2009 வரை தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே நிலுவை தொகை வழங்காமல் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் விகி தம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை போன்று வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி, பயணப்படி, கல்விப்படி ஆகியன உரிய முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள் ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்க குமரி மாவட்ட செயலாளர் எட்வின் பிரகாஷ் கூறியதாவது:
2012&13ம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவு அறிக்கையில் ஊழியர்களின் ஊதிய முரண்பாடு களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவர் கிருஷ்ணன், உமாபதி, சாந்தி ஆகியோரை சென்னையில் சந்தித்து எங்களது சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய விகிதங்கள் 31.5.2009 வரை என்பதை மாற்றி தொடர்ந்து ஊதிய விகிதங்களின் அடிப்படையில் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள வீட்டு வாடகைப்படி உட்பட அனைத்து படிகளையும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்