தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.7.12

கட்டணம் செலுத்தி மாணவர்கள் பேருந்தில் செல்லும் அவலம்: இலவச பயண அட்டை தர தாமதம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் இலவச பயண அட்டை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலைக்கு, அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அறிவிப்பு: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், கட்டணமில்லா கையடக்கப் பேருந்து பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படுகிறது. இதேபோன்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி, 30 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதல் முறையாக கட்டணமில்லா கையடக்கப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தினமும் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், கையடக்கப் பேருந்து பயண அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியே, இன்னும் துவக்கப்படவில்லை. பயண அட்டை கிடைக்காததால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்கள், தினமும், 20 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தாமதம்: இதுகுறித்து, அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறும்போது, ""பேருந்து பயண அட்டைக்கான புகைப்படம் எடுக்க, குறிப்பிட்ட தேதியை அறிவிக்கின்றனர். ஆனால், அந்த தேதியன்று புகைப்படம் எடுப்பவர்கள் வருவதில்லை. இதனால், தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

32 லட்சம் அட்டைகள்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கடந்த கல்வியாண்டில், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 31.98 லட்சம் கட்டணமில்லா மற்றும் சலுகைக் கட்டணப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில், கடந்தாண்டு, 3.47 லட்சம் மாணவர்கள், இதனால் பயனடைந்தனர். இந்தாண்டு, 3.60 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, பயண அட்டை வழங்க உத்தேசித்துள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்