தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.7.12

2648 இடைநிலைஆசிரியர் / சிறப்பாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கவுன்சலிங் சென்னையில் 30ம் தேதி நடைபெறும்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் 2648 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கவுன்சலிங் சென்னையில் 30ம் தேதி தொடங்குகிறது.

பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நடத்தப்படும்.

இது தவிர வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக ப ணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை&2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இடைநிலைஆசிரியர் / சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள்(தமிழ்) 1191 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதர பாடங்களை பொறுத்தவரை ஆங்கில ஆசிரியர்கள் 227, கணக்கு ஆசிரியர்கள் 224, அறிவியல் ஆசிரியர்கள் 65 பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இவற்றுக்கான கவுன்சலிங்கும் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்