தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.7.12

1,063 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு


பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், 1,063 இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களில், தகுதி வாய்ந்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி (பணியாளர் தொகுதி) தலைமையில், தமிழ் அல்லாத இதர பாட ஆசிரியருக்கு கலந்தாய்வு நடந்தது.

கலந்தாய்வுக்கு, 1,281 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், 103 பேர், கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வுக்கு வந்தவர்களில், 115 பேர், பதவி உயர்வை மறுத்து விட்டனர். இறுதியில், 1,063 பேர், பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர். இதனை, இணை இயக்குனர் வழங்கினார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்