தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.7.12

காந்திக்கு தேசப்பிதா பட்டம் மத்திய அரசு வழங்கவில்லை

மகாத்மா காந்திக்கு, தேசப்பிதா என்ற பட்டத்தை, மத்திய அரசு ஒருபோதும் வழங்கவில்லை என, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மகாத்மா காந்தி தேசப்பிதாவாக அறிவிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை தரும்படி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் அபிஷேத் கத்யான் என்பவர், உள்துறை அமைச்சகத்திடம், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு, மத்திய பொது தகவல் அதிகாரி, கடந்த மாதம் அளித்த பதிலில், " மகாத்மா காந்தியை தேசப்பிதாவாக பொதுமக்கள் அழைத்தாலும், அதுபோன்ற ஒரு பட்டத்தை, மத்திய அரசு ஒரு போதும் வழங்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், லக்னோவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷர், "மகாத்மா காந்தி, தேசப்பிதாவாக அறிவிக்கப்பட்டது தொடர்பான உத்தரவின் நகலைத் தர வேண்டும்' என கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சகம், அது போன்ற குறிப்பிடத்தக்க ஆவணம் எதுவும், தங்களிடம் இல்லை என பதில் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்