தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.7.12

இணையதளம் மூலம் மாணவர் உதவித்தொகை

பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும்.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழும் தர வேண்டும். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.200ம், 9 மற்றும் 10ம் வகுப்பு வரை ரூ.250 ம், 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு ரூ.500ம் உதவித்தொகை வழங்கப்படும். இலவச கல்வி பெறுபவர்களுக்கு அனைத்து கட்டணங்களும் விலக்கு அளிக்கப்படும். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறலாம். புதுப்பித்தல் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31க்குள்ளும், புதிய உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.,31க்குள்ளும் தர வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்