தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.4.11

உங்கள் வாக்கை யாரேனும் செலுத்தினால்...(Tendered Vote)

உங்களுடைய வாக்கை வேறு யாரேனும் செலுத்தினால், வாய்ப்பு பறிபோய் விட்டதே எனக் கருதி உடனடியாக வாக்குச் சாவடியை விட்டு வெளியேறாதீர்கள். இதற்கான மாற்று ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடி சென்றதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என சரிபார்க்கப்படும். அப்போது, உங்களுடைய பெயரில் வேறு யாரேனும் வாக்களித்து இருந்தால் அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் வாக்களிக்காத பட்சத்திலும் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை வாக்குச் சாவடி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

இதையடுத்து, தேர்தல் சட்டத்தின் "49 பி' பிரிவின்படி வாக்குச் சீட்டு தரப்படும். மேலும், இதற்கான பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் கையெழுத்து பெறப்படும். இதன்பின், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டைப் போன்றே ஒரு சீட்டு தரப்படும். அந்தச் சீட்டின் பின்புறம், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள வாக்குச் சீட்டு (tendered ballot paper) என எழுதப்படும். அதில் தேர்தல் வாக்குச் சாவடி அதிகாரியின் கையெழுத்திடப்படும். 

அந்தச் சீட்டு உங்களிடம் தரப்படும். அதனுடன் அம்புக்குறியிட்ட ஒரு ரப்பர் சீல் கொடுக்கப்படும். சீட்டில் நீங்கள் விரும்பும் நபரின் பெயருக்கு எதிரே அந்த சீலின் உதவியுடன் அச்சிடலாம். இந்தச் சீட்டுகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்