தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.4.11

ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு 12ம் தேதி இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்

"ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, 12ம் தேதி இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். 

சென்னை மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதுபோல், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்புகளை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டனர்.
 
பின்னர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுகையில், ""ஓட்டுச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மூன்றாம் கட்டமாக, வரும் 12ம் தேதி இறுதி பயிற்சி அளிக்கப்பட்டு, எந்த ஓட்டுச் சாவடியில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பணி ஆணை வழங்கப்படும். தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள விதிகளின் படி தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது,'' என்றார்.


நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்