வாக்குச் சாவடிக்குள்  ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த முகவர்கள் இருப்பார்கள். வாக்களிக்கும்  ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அவர்கள் சோதிப்பார்கள். அதாவது, நீங்கள்  வாக்களிக்கும் போது உங்களின் அடையாளம் கட்சி முகவர்களுக்கு சந்தேகத்தை  ஏற்படுத்தலாம். அந்தச் சூழலில், உங்களது வாக்கு சவாலான வாக்காக  (CHALLENGE VOTE) கருதப்படும். 
அடையாள சான்றாக புகைப்பட வாக்காளர் அடையாள  அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் காட்டலாம். சான்றுகளின் உண்மைத்தன்மை  அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். அவர்  வாக்காளர் இல்லை என்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்களின் சவால்  நிரூபிக்கப்படவில்லை என்றால் வாக்காளருக்கு வாக்குரிமை அளிக்கப்படும்.  சவால் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிக்க முடியாது. 
அதேசமயம், அவர் கள்ள வாக்கு அளிக்க முயற்சித்தார் என காவல் நிலையத்தில்  புகார் தெரிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை  உள்ளது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக