தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரையும் "ஆல் பாஸ்''  செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
மத்திய அரசு, 14  வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற சட்டத்தை, கடந்த  கல்வியாண்டு முதல் அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், கிராம  நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால்,  உயர்நிலை கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இடை நிற்றல் அதிகமாக  உள்ளது. 
இதை தவிர்க்க, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரையும் "ஆல் பாஸ்'  செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் எட்டாம் வகுப்பு  இறுதி தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட  உள்ளனர். 
இதேபோல், ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிய மாணவர்களில் 90  சதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக