தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.3.11

தேசிய திறனறிதல் தேர்வு முடிவு வெளியீடு

தேசிய திறனறிதல் தேர்வின் மாநில அளவிலான தேர்வு முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதில், 310 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 

அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நாடு தழுவிய அளவில் மூன்று வகையான தேர்வுகள் நடத்தி, அதில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெறும் 1,000 மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு 40 உதவித்தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
முதற்கட்டமாக மாநில அளவில் நடக்கும் தேர்வு, தமிழகத்தில் கடந்த நவம்பர் 21ம் தேதி நடந்தது. இதில், 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. வகுப்பு வாரியான ஒதுக்கீட்டின்படி, மதிப்பெண் அடிப்படையில் 310 பேர் முதல்நிலைத் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர். இதன்பின், மத்திய அரசு நடத்தும் ஒரு தேர்வும், அதன்பின் நேர்முகத் தேர்வும் நடைபெறும். 


தேர்வு முடிவு விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்