தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.3.11

வாக்குச்சாவடி அமையும் பள்ளிகளை ஏப்ரல் 11ம் தேதி ஒப்படைக்க உத்தரவு

"ஓட்டுச் சாவடிகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை, 11ம் தேதி பிற்பகல் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் பள்ளிக் கல்வித்துறைக்கு கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 11ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. 13ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. ஓட்டுச் சாவடிகளுக்காக, பள்ளிகளை தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ளது. எனவே, தேர்வுப் பணிகளை முடித்து, 11ம் தேதி பிற்பகல் சம்பந்தப்பட்ட பள்ளிகளை, தேர்தல் அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். 

தேர்தல் பணிக்காக, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், தேர்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தேர்தல் தொடர்பான பயிற்சிகளுக்கு அவர்கள் செல்லும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களையும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சபீதா கூறியுள்ளார்.

செயலரின் உத்தரவு, நேற்றே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன. 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படும் 43 மையங்களில் மட்டும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. 

மேலும், ஏப்ரல் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 16ம் தேதிக்குப் பின், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், தமிழக அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்