தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.3.11

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.  

தேர்தல் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, வாக்குச் சாவடிகளில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்க ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 மையங்களில் வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன்படி, 
  • தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 568 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் 656 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 
  • எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 689 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 755 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 
  • கோட்டார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் 651 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 
  • தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 956 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 767 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • கருங்கல் பெத்லஹேம் மேல்நிலைப்பள்ளியில் 883, 
  • மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் 1056 
என்று மொத்தம் 6981 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களுக்கு ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறியதாவது:  சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இம் மாவட்டத்திலுள்ள 9 மையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள், வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.  

மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். பிரபாகரன், வட்டாட்சியர்கள் பவானி ஜீஜா, நாராயணதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துவேல், ராம்லால், செல்லத்துரை, துணை வட்டாட்சியர் (தேர்தல்) மணிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்