இந்திய திருநாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக  குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது.  இத்துடன் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ்குற்றம் மிக, மிக குறைந்து  விட்டதாகவும், இதுவரை இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் நடப்பு  கணக்கெடுப்பில் தான் குறைந்த அளவு இந்த குற்றம் நடந்திருப்பதாகவும் சென்சஸ்  விவரத்தில் தெரியவந்துள்ளது. 
 
 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை  செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை  வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை -  1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18   கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ;  பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.
சதவிகித குறைப்பு : வளர்ச்சி  விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட  சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம்  ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக  குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்)  சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது.
 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011)  பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய  கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில்  நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10  ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக