தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.3.11

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வரும் 3ம் தேதிக்கு முன்பாக தபால் ஓட்டு சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதற்குரிய படிவம் 12 அந்தந்த தாலுகா அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்களில் 3ம் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு தபால் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால் வரும் 3ம் தேதி நடக்கும் 2வது கட்ட பயிற்சி வகுப்பில் விண்ணப்பம் அளித்து தபால் ஓட்டு சீட்டுகளை பெற்று கொள்ளலாம். 

ஏற்கனவே ஓட்டு சீட்டுகளை பெற்றவர்கள் பயிற்சி வகுப்பில் வைக்கப்படும் பெட்டியிலும், தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்படும் ஓட்டு பெட்டிகளிலும் ஓட்டுகளை போடலாம். வரும் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக ஓட்டு சீட்டுகளை தபால் மூலமும் அனுப்பலாம்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்