தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.3.11

தேர்தல் பணிகளில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு

தமிழகத்தில் தேர்வு பணிகளில் உள்ள ஆசிரியர்கள், ஐகோர்ட் உத்தரவுப்படி, தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக மெட்ரிக், ஆரம்ப, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப். 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் பின்னர் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவுள்ளது. தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பதில் மெட்ரிக், ஆரம்ப, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து, இப்பள்ளிகளில் தேர்வுப் பணி இல்லாத ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்