தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.3.11

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 45 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 6 சதவீதம் உயர்த்துவதற்கு, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அகவிலைப்படி உயர்வுக்கு, நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த வகையில், 6 சதவீத உயர்வு, கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம், ஆண்டொன்றுக்கு அரசுக்கு, 5,716 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஜனவரி முதல், மார்ச் வரையிலான மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படும் அகவிலைப்படியை சேர்த்து, அடுத்தாண்டு, அரசுக்கு, 6,668 கோடியே 52 லட்சம் கூடுதலாக செலவாகும். இதன் மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 38 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவர். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும், அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இம்முறை தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், சிறிது காலம் தள்ளிப்போகும்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்